Posts

Showing posts from October, 2012
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அன்புமிக்க விஷ்ணுவுக்கு வண்ணதாசன் எழுதிக்கொள்வது

627007 27.07.08 அன்புமிக்க விஷ்ணுவுக்கு, வணக்கம். உங்களுடைய கவிதைகள் 01.04.08ல் அனுப்பப்பட்டு 02.04.08ல் எனக்குக் கிடைத்தன. இந்த மூன்று மாதங்கள் இருபத்தேழு நாட்கள் குறைந்தது நான்கு முறைகளும், இந்த தாமதமான பதிவை எழுதுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை அவற்றைப் படித்தாயிற்று. முதலில் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். * பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புக்கு இப்போது வந்திருப்பீர்கள். வகுப்பு அல்ல, இந்த வயதுதான் முக்கியம். வயது என்பதைவிட இந்தப் பதின்பருவத்தை-Teen age-ஐச் சொல்லலாம். இந்த வளரினம் பருவத்தில்தான், உடல்சார்ந்த விழிப்புக்களும் மனம் சார்ந்த விழிப்புக்களும் நிகழ்கின்றன. இந்தப் பருவத்தில் நாம் எவ்வளவு வெளிச்சத்தில் அல்லது வெளிச்சத்துடன் விழிக்கிறோமோ, அந்த வெளிச்சம்தான் கடைசிவரை நம்மை வழிநடத்தும், கூட வரும். எல்லாக் கலைஞனும் இந்த adolescent பருவத்திலேயே உருவாகிறான். நீங்களும் உருவாகியிருக்கிறீர்கள். உங்கள் கலை கவிதை. அல்லது உங்களது வெளிப்பாடு கவிதை. சிலர் ஓவியம் மூலம், சிலர் இசை மூலம், சிலர் இடுகிற கோலங்கள் மூலமாகக் கூட வெளிப்படுகிறார்கள். ஒவ்வொரு ஊடகமும் ஒரு வாசல

சிங்காரவடிவேலு சார்

Image
          எஸ்.எஸ்.என். கல்லூரிக்கு வந்து போகிறவர்களுக்கு சிங்காரவடிவேலு சாரைத் தெரியாமல் இருக்காது. ஏராளமான உடம்பின் மேல் அளவெடுத்துத் தைத்த அரைக்கைச் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு தரையைப் பார்க்கிறாரா நம்மைப் பார்க்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாதபடி முகத்தை வைத்துக்கொண்டு மெதுவாக, மிக மெதுவாக நம் கல்லூரி வளாகத்திற்குள் வளைய வருபவர். கைகளை எப்பொழுதும் ஒரு தடிமனான புத்தகமும் மூக்குக்கண்ணாடிப் பெட்டியும் சாக்பீஸ் டப்பாவும் அலங்கரிக்க அதை ஒரு சுமையாகக் கருதாமல் சாதாரணமாக சுமந்துக்கொண்டு செல்வார். சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும், ஆனால் அது தெரியாதவாறு கொழுப்பு அடுக்குகள் மறைத்துவிட அதனால் அவர் கன்னம் அடையும் விசாலத்தில் அவரது இருபது ஆண்டுகால ஆசிரிய அனுபவம் பெரிதும் பயன்தராமல் அவரிடமே தேங்கி நிற்பதுபோல் தோன்றும். ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் புனித இயற்பியலைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மாணவர்கள் இருப்பது இயற்கையே, இது அவருக்கும் தெரிந்துதான் இருக்கிறதோ என்னவோ, அவரைத் தேடி யார் வந்தாலும் அருகில் உட்கார வைத்து சந்தேகங்களைப் பொறுமையாகத் தீர்த்து வைப்பார். உலகத்தில் சில கடி