tag:blogger.com,1999:blog-51696206419317851982024-02-20T05:37:06.571+05:30வ.விஷ்ணு பக்கங்கள்Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.comBlogger127125tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-69255357051506601202021-02-07T16:50:00.008+05:302021-02-07T21:10:49.771+05:30W.E.B. டுபாய்சின் எழுத்துகள் தற்பொழுது மின்வடிவில்<div class="separator"><p dir="ltr" id="docs-internal-guid-0d609bd3-7fff-4f27-1eb4-5960f118b6b9" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;"> <img alt="https://leminhkhai.files.wordpress.com/2013/01/web-du-bois.jpg" class="shrinkToFit" height="640" src="https://leminhkhai.files.wordpress.com/2013/01/web-du-bois.jpg" width="555" /><span style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre;"> </span></p><p dir="ltr" id="docs-internal-guid-0d609bd3-7fff-4f27-1eb4-5960f118b6b9" style="line-height: 1.38; margin-bottom: 0pt; margin-top: 0pt;"><span style="font-family: Arial;"> </span></p><p><span style="font-family: Arial;">கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அமெரிக்க எழுத்தாளரும் சிந்தனையாளரும் பத்திரிகையாளருமான W.E.B. டுபாய்சின் பேச்சுகளும் எழுத்துகளும் தற்பொழுது மின் வடிவத்தில் கிடைக்கின்றன. Collected Works of Gandhi-யை இணையத்தில் பதிவேற்றியதைப் போன்ற பெரும் பணி இது. காந்தியும் டுபாய்சும் ஒருவருக்கொருவர் சில கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். காந்தி குறித்து டுபாய்ஸ் எழுதிய, ஆனால் பிரசுரமாகாமல் போன எழுத்துகளும் இம்மின்வடிவில் அடக்கம். அம்பேத்கர் ஜூலை 1946-ல் டுபாய்சுக்கு எழுதிய கடிதமும் நம் பார்வைக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலைக்கும் இந்தியாவில் தீண்டத்தகாதார் என்று கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்றும், கறுப்பின மக்கள் ஐ.நா. சபைக்கு அனுப்பிய மனுவின் இரண்டொரு பிரதியைத் தனக்கு அனுப்பி வைக்க முடியுமா, அதே போன்றதொரு மனுவை இந்தியாவின் தீண்டத்தகாதோரும் அனுப்ப உத்தேசித்திருக்கிறோம் என்றும் எழுதியிருக்கிறார். முழு கடிதத்தின் சுட்டி கீழே. அதே மாதத்தில் டுபாய்ஸ் அம்பேத்கருக்கு பதில் கடிதம் எழுதி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான இயக்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.</span><span style="font-family: Arial;"> </span></p><p><span style="font-family: Arial;">1. அம்பேத்கரின் கடிதம் - <a href="https://credo.library.umass.edu/view/full/mums312-b109-i132">https://credo.library.umass.edu/view/full/mums312-b109-i132<br /></a>2. டுபாய்சின் பதில் கடிதம் - <a href="https://credo.library.umass.edu/view/full/mums312-b109-i133">https://credo.library.umass.edu/view/full/mums312-b109-i133</a><br />3. டுபாய்ஸ்-காந்தி தொடர்பான ஆவணங்கள் - <a href="https://credo.library.umass.edu/search?q=gandhi&fq=FacetCollectionID%3A%22mums312%22&search=">https://credo.library.umass.edu/search?q=gandhi&fq=FacetCollectionID%3A%22mums312%22&search=</a></span></p></div><p><span style="font-family: Arial;">காந்தி-டுபாய்ஸ் தொடர்பு குறித்து UCLA பேராசிரியர் வினய் லால் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 1913-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டல் மாகாணத்தில் காந்தி ஒருங்கிணைத்த தொழிலாளர் போராட்டம் குறித்து டுபாய்ஸ் பதிவு செய்திருக்கிறார் என்றும், அப்பொழுது காந்தி யார் என்று அவருக்குத் தெரிந்திருக்காத காரணத்தினால் காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும், ஆனால் அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே 1911-ல் காந்தி டுபாய்ஸ் பற்றி எழுதியிருக்கிறார் என்றும் வினய் லால் 2019 நவம்பரில் தில்லியில் நடந்த கருத்தரங்கின்போது சொன்னார், ஆனால் அந்த ஆவணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு 1919-ல் NAACP அமைப்பின் Crisis பத்திரிகை ஜலியன் வாலாபாக் பற்றியும் ஹண்டர் கமிஷன் அறிக்கை பற்றியும் மிக விரிவாக எழுதியது, ஆனால் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் உருவாக்கிய மாற்றுக் கமிட்டி குறித்து எழுதவில்லை. 1921-ல் டுபாய்ஸ் காந்தியைக் குறிப்பிடுகிறார். பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 1929-ல் முதன் முதலாக காந்திக்குக் கடிதம் எழுதுகிறார் (அதற்கு இடைப்பட்ட காலத்தில் காந்தியின் போராட்ட வழிமுறைகள் குறித்து டுபாய்ஸ் சிலருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்). டுபாய்சும் C.F.ஆண்டிரூசும் சரோஜினி நாயுடுவும் அதற்கு முன்பே சந்தித்துவிட்டனர், ஆண்டிரூசுக்கு எழுதிய கடிதத்தில் தன் பத்திரிகையில் காந்தியும் தாகூரும் எழுதவேண்டும் என்று கோருகிறார். காந்திக்கு எழுதிய கடிதத்தில் டுபாய்ஸ் தன்னையும் தன் இயக்கத்தையும் தன் கறுப்பின வாசகர்களையும் அறிமுகம் செய்கிறார். காந்தி தன் பதில் கடிதத்தில் “கட்டுரை எழுத இயலாது, ஆனால் உங்கள் இயக்கத்திற்காக ஒரு சிறு அன்புச் செய்தியை அளிக்கிறேன்” என்று எழுதினார். “அடிமைகளாக இருக்க நீங்கள் வெட்கப்படக்கூடாது, அடிமைகளாக உங்களை வைத்திருக்க அவர்கள்தான் வெட்கப்படவேண்டும்” என்ற ரீதியில் அக்குறிப்பு செல்கிறது (தரக்நாத் தாசுக்கு டால்ஸ்டாய் அளித்த செய்தியின் அதே சாயல் டுபாய்சுக்கு காந்தி அளித்த செய்தியில்… காந்தி-டால்ஸ்டாய், காந்தி-ஐரோப்பா என்று வெள்ளையின அறிவியக்கத்தைச் சுற்றியே ஆராய்ச்சிகளின் கவனம் செல்கின்றன, ஆனால் காந்திக்கும் அமெரிக்கக் கறுப்பின மக்கள் இயக்கத்திற்கும் இடையே இப்படி ஒரு தொடர்பு மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வருவதற்கு முன்பே இருந்திருக்கிறது). காந்தியின் செயல்பாடுகளை டுபாய்ஸ் உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறார். “</span><span style="font-family: Arial;"><span class="d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id" dir="auto">Mohandas
Karamchand Gandhi, the greatest colored man in the world, and perhaps
the greatest man in the world...” என்று 1929-ல் தன் வாசகர்களுக்கு
அறிமுகப்படுத்துகிறார் டுபாய்ஸ்.</span> அமெரிக்காவில் ஒரு நீக்ரோ காந்தி வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி காந்தியைப் பற்றி மட்டும் பல்வேறு கட்டுரைகளைத் தன் அரை நூற்றாண்டு காலப் பொதுவாழ்க்கையில் எழுதியிருக்கிறார் டுபாய்ஸ்.</span><br /></p>Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-29955212493533892582020-11-08T18:26:00.008+05:302020-11-10T01:20:01.245+05:30சாப்ளினின் கல்லறை<div class="separator"><div style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="2048" data-original-width="1152" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuysg3Mwp204q37TT2VA8YFflZypCFYyBCnS1jAc6DGAfZMhtEhiBwY9ObOCwB2jPJubIvx4mqoFbzPI0wffuljuWFl3HSLouI3GYyuRZESzOQvPluX2rfQAZsVtMUo_zQz302xxCVG2qA/w360-h640/IMG_20201107_105753.jpg" width="360" /></div></div><p><span style="color: black;"><span style="font-family: Arial;">Corsier-sur-Vevey. வாழ்வில் </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span id="docs-internal-guid-9395e093-7fff-4f68-beef-74b3e778dbf4" style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre;">என்றைக்காவது</span> ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட்டைப் பிரிண்ட் எடுத்து ஒரு மலர்ச்செண்டுடன் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் துணைக்கு வந்திருந்தார்.<br /><br />சாப்ளின்பால் நான் மொத்தமாக விழ சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட் ஒரு காரணம். சக மனிதர்களுடன் பழகுகையில் நாம் பல முகமூடிகளை அணிகிறோம், வேடங்களைப் போடுகிறோம், பாத்திரங்களை ஏற்கிறோம். நம்முடைய சுயம் என்று நாம் நினைக்கும் அந்தரங்க இயல்புகளை நாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் காட்டிவிடுவதில்லை. தொடர்ந்து ஓர் இடைவெளியுடனே பயணிக்கிறோம். ஆனால் ஒருசில மனிதர்களிடம் பழகுகையில் ஒரு குறிப்பிட்ட பொழுதில் நம் பாசாங்குகளைக் களைந்துவிட யத்தனிக்கிறோம். சில நொடிகளுக்கு நம் சுயத்தை அப்பட்டமாகத் திறந்துகாட்டத் துணிகிறோம். மிகவும் அவஸ்தையான சூதாட்டத் தருணங்கள் அவை. “இதுதான் நான். அழகாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா? விலக வேண்டும் போல் தோன்றுகிறதா? உன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பிடிக்கவில்லையா? இந்த அசிங்கம் இனி வெளியே யாருக்கும் தெரியவே கூடாதா? ஏற்கும்படி இருக்கிறதா? என்னை நானே தேவையில்லாமல் மூடிக்கொள்கிறேனா? அழகாகத்தான் இருக்கிறதா?” என்று எண்ணங்கள் படபடவென்று விரையும். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருப்போம். அந்தப் பக்கம் இருப்பவர் நம்மை எடைபோட்டு, நம் சுயத்தை அங்கீகரித்து, நம் இயல்பை ஏற்றுக்கொண்டு ஒரு புன்னகையை உதிர்ப்பதற்குள் நமக்கு உயிர் போய் உயிர் வரும். சாப்ளினின் அந்த இளிப்பில் இந்தப் பதைபதைப்பைக் கண்டேன். அப்போதிலிருந்து சாப்ளின் மீது ஒரு இது.<br /><br />சென்ற வருடம் ஜெர்மனியில் ஒரு பாட்டி உறவாகக் கிடைத்தாள். கிளம்புவதற்கு முன்பு என்னைக் காத்திருக்கச் சொல்லிப் பரண் மீது ஏறினாள். கையில் ஒரு கூடையுடன் வந்து, என் கையில் ஒரு பொருளைத் திணித்தாள்.<br /><br />“என்ன இது?”<br /><br />“என்னவென்று தோன்றுகிறது?”<br /><br />“கல்?”<br /><br />“என்னக் கல்?”<br /><br />“தெரியவில்லையே. சில்லு சில்லாக அங்கங்கே ஏதோ கறுப்பாக இருக்கிறதே?”<br /><br />“ஆமாம்”<br /><br />“ஏதாவது விண்கல் கிண்கல் தோட்டத்தில் விழுந்ததா? அதுவா?”<br /><br />சிரித்தபடி மண்டையில் குட்டினாள்.<br /><br />“இல்லையே, கான்கிரீட் போல் இருக்கிறதே?”, என்றேன்.<br /><br />“அரசியல் அறிவியல் படித்துக்கொண்டு இதுகூடத் தெரியவில்லையா? 29 ஆண்டுகள் கழித்து உனக்காக இதை வெளியே எடுத்திருக்கிறேன்”, என்று என்னை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களை நோக்கினேன். கண்சிமிட்டினாள். அப்பொழுதுதான் உறைத்தது.<br /><br />சராலென்று பின்வாங்கினேன். “நோ நோ நோ!”, கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. என் படபடப்பைக் கண்டு உரக்க சிரித்தாள். “ஓ விஷ்ணு!”<br /><br />“யுட்டா! பெர்லின் சுவரா இது?”<br /><br />“Ja!”, என்று சிரித்தாள். “நானும் அப்பாவும் கையில் சுத்தியலோடு சென்றோம். நினைவுக்காகக் கொஞ்சம் வெட்டியெடுத்துக்கொண்டோம்”<br /><br />“மை காட்!”<br /><br />“உன் கையில் இருப்பதை நீயே வைத்துக்கொள். என் பரிசு”, என்று என் </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span id="docs-internal-guid-50d62fed-7fff-c87f-412b-f73badf23f8a" style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre;">கையை</span> அவள் கைகளால் மூடினாள்.<br /><br />“நிஜமாகவா? நான் வைத்துக்கொள்ளலாமா?”<br /><br />“Ja! </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span id="docs-internal-guid-f3bcf969-7fff-bfc3-64cb-c40fad944481" style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre;">உனக்குத்தான்</span>”, என்று அணைத்துக்கொண்டாள். “பத்திரமாக இந்தியா சென்று சேர்”<br /><br />அந்தக் கல்லை நான் சாப்ளினின் கல்லறைக்கு எடுத்து வந்திருந்தேன். என்னுடன் துணைக்கு வந்திருந்த நண்பரிடம் கையை நீட்ட சொல்லி, அக்கல்லை அவர் கையில் வைத்தேன்.<br /><br />“என்ன இது?”<br /><br />“என்னவென்று தோன்றுகிறது?”<br /><br />“கல்?”<br /><br />“என்னக் கல்?”<br /><br />“தெரியவில்லையே?”<br /><br />“என் ஜெர்மன் பாட்டி கொடுத்தது. 29 ஆண்டுகள் கழித்து வெளியே எடுத்தாள்”<br /><br />“29 ஆண்டுகளா?”<br /><br />“இப்பொழுது முப்பதாண்டுகள் ஆகிவிட்டன. நாளை மறுநாள் முப்பத்தி ஒன்று துவங்கப்போகிறது”<br /><br />“தெரியவில்லையே?”<br /><br />“அரசியல் அறிவியல் படித்துக்கொண்டு இதுகூடத் தெரியவில்லையா என்று கண்சிமிட்டினாள்”<br /><br />ஒரு வினாடி யோசித்தார். சராலென்று மின்சாரம் பாய்ந்ததுபோல் பின்வாங்கினார். “நோ வே!”<br /><br />“Yup!”, என்று சிரித்தேன்.<br /><br />“Are you kidding me?”<br /><br />“நோப்!”<br /><br />“வோ!”, கையை இறுக மூடிக்கொண்டார். “வோ வோ!”<br /><br />“ரிலாக்ஸ்”, என்று சிரித்தேன். “இதே ரியாக்ஷன்தான் நானும் கொடுத்தேன். பெர்லின் சுவரின் பாகங்கள் அரிதல்ல, ஆனால் பெர்லினின் கடைகளில் கிடைக்கும் சந்தைப் பொருள் இல்லை இது”<br /><br />“ம்ம். வாஷிங்டன் டி.சியில் பெர்லின் சுவரை வைத்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறேன்”, என்றார் அக்கல்லை </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span id="docs-internal-guid-eb2bf5f9-7fff-6b04-06c6-1efebdb8407d" style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre;">ஆச்சரியத்துடன்</span> உற்று நோக்கியபடி. சாப்ளினின் கல்லறைக்கு முன்பு போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தோம். சிறிது நேரம் கல்லறையை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம்.<br /><br />“இப்பொழுது ஒரு காரியம் செய்யப்போகிறேன் நான்”, என்றேன்.<br /><br />“என்ன காரியம்?”<br /><br />“இதை செய்யலாமா வேண்டாமா என்று சஞ்சலமாக இருந்தது. அப்சர்டிஸ்ட் மூளை வேண்டாம் என்று சொல்கிறது. அப்சர்டிஸ்ட் மனது செய் செய் என்று உந்தித்தள்ளுகிறது”<br /><br />“என்னது?”<br /><br />“அந்தக் கல்லைக் கொடு”, என்று எழுந்தேன். சாப்ளினின் புகைப்படம் இருந்த காகிதத்தில் சில வார்த்தைகளை எழுதி அவர் கல்லறையின் முன்பு வைத்தேன். கொண்டுவந்திருந்த மலர்ச்செண்டை அதன் அருகே </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span id="docs-internal-guid-4152d285-7fff-4cc0-8cff-90b46962a1fe" style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre;">கிடத்தினேன்</span>. இறுதியாக அந்த பெர்லின் சுவரின் பகுதியை அக்காகிதத்தின் மீது வைத்தேன்.<br /><br />“கல்லை வைத்து எடுக்கிறாயா?”<br /><br />“இல்லை, </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span id="docs-internal-guid-087ce225-7fff-0ed3-d4cb-514f9890d69a" style="background-color: transparent; color: black; font-family: Arial; font-size: 11pt; font-style: normal; font-variant: normal; font-weight: 400; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre;">இ</span>தை இங்கே விட்டுவிட்டுப் போகப்போகிறேன்”<br /><br />“வாட்!”<br /><br />“யப்”<br /><br />“யோ! மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள் இல்லையா அது?”<br /><br />“யா. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அதை இங்கே வைத்தால் நாளை கல்லறையை சுத்தம் செய்ய வருபவர் என்னக் கல் இது என்று எடுத்துத் தூக்கி வீசிவிடுவார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை இது ஒரு சாதா கான்கிரீட் கல் என்பதும். I think we are facing the absurd”<br /><br />“Okay? Are you sure?”<br /><br />“I’ve decided, yes”, என்று எழுந்தேன். மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம் அது. சாப்ளினின் கல்லறையை இறுதியாக ஒரு முறை பார்த்து, எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். “வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. துணைக்குக் கூட வந்ததற்கு நன்றி”, என்றேன். இந்நேரம் கல்லறைப் பணியாளர் அக்கல்லைத் தூக்கி வீசியிருப்பார். Corsier-sur-Vevey இடுகாட்டில் சாப்ளினின் கல்லறைக்கு அருகே ஏதோவொரு புதருக்குள் பெர்லின் சுவர் ஒளிந்துகொண்டிருக்கிறது. சாதா கான்கிரீட் கல்.</span></span><br /></p>Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-64878206302354508392020-10-02T23:33:00.012+05:302020-10-18T01:28:16.960+05:30பாரிக்கின் காந்தி<p>காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்கு பாரிக்கின் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை மீள்வாசிப்பு செய்தேன். காந்தியின் மீது ஒரு மிக முக்கியமான விமர்சனத்தை பாரிக் வைக்கிறார். திலகர், அரவிந்தர், சாவர்க்கர் போல் இந்து மதத்தின் அடிப்படையில் இந்திய ஒற்றுமையைக் கற்பனை செய்யாமல், காந்தி இந்தியாவை பன்முக வரலாற்றுப்பார்வையோடு அணுகினார். பல்வேறு மத, இன, மொழியடையாளங்களின் கூட்டுத்தொகுப்பாகத்தான் இந்தியாவை அவர் கண்டார். ஆனால் அந்தக் கூட்டுத்தொகுப்பின் இயல்பை விளக்கும்போது அவரிடம் இந்துச் சாய்வு இருந்தது என்கிறார் பாரிக். அதாவது இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்து மதத்தின் சாதனையாகவும் இந்து சகிப்புத்தன்மைக்கான எடுத்துக்காட்டாகவும் காந்தி புரிந்துகொண்டார். இஸ்லாமியர்களுக்கான பண்பாட்டு வெளி காந்தியின் இந்தியாவில் இருந்தது, ஆனால் அது ஓர் இந்து சட்டகத்திற்கு உள்ளேதான் அமைக்கப்பட்டது என்கிறார் பாரிக். அதாவது இந்து அடிப்படைவாதிகளைப்போல் இந்தியாவை இந்துமயமாக்காமல் காந்தி இந்துமதத்தை இந்தியமயமாக்க முயன்றார், அந்த முயற்சியின் போக்கில் இந்துமதத்தில் உள்ள இஸ்லாமியத் தாக்கங்களை அங்கீகரித்தார். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி காந்தியின் இந்தியா ஓர் இந்து அடித்தளத்தில் அமைந்த ஒன்றாக, இந்து அரவணைப்பை வெறும் பெரும்பான்மை அடிப்படையில் மட்டும் கோராமல் பண்பாட்டு அடிப்படையிலும் கோரிய இயக்கமாக இருந்தது. காந்தி இரண்டு செயல்களின் மூலம் அதைத் தவிர்த்திருக்கலாம், அதன் மூலம் இந்திய வரலாறு குறித்து இன்னும் துல்லியமான பார்வையை அடைந்திருக்கலாம் என்கிறார் பாரிக்:</p><p>முதலாவது, இஸ்லாமின் வருகைக்கு முந்தைய இந்தியாவை “இந்து இந்தியா” என்று கற்பனை செய்யாமல், அப்போதே அது பன்முக அடையாளங்கள் கொண்ட நிலப்பரப்பாக இருந்தது என காந்தி கற்பனை செய்திருக்கலாம்; அதன்மூலம் இரண்டு விஷயங்களை காந்தி சாதித்திருக்கலாம். ஒன்று, இந்தியாவின் பண்பாட்டு வளர்ச்சிக்கு மற்ற மதங்களோடு மதங்களாக “இந்து” மதமும் முக்கியமாகப் பங்களித்தது என்ற சமத்துவப் பார்வை. இரண்டு, இவ்வாறு அணுகுவதன்மூலம் இந்துக்கள் இந்தியாவை சொந்தம் கொண்டாடும் இயல்பைக் கேள்விக்குட்படுத்தியிருக்கலாம். பாரிக் இதனை “Hindu Possessiveness” என்கிறார். இதைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் இந்தியக் கட்டமைப்பை இன்னும் விரிவாக்கி இந்துக்களல்லாதோரும் தங்களைப் பண்பாட்டு இந்தியர்களாக உணர வழிவகை செய்திருக்க முடியும், அதை காந்தி செய்யத் தவறிவிட்டார் என்கிறார் பாரிக்.</p><p>இரண்டாவது, இந்து மதத்தை ஒற்றைச் சட்டகமாகக் கற்பனை செய்யாமல், எண்ணற்ற உலக நாகரிகங்களின் நம்பிக்கைகளின், சடங்குகளின் படிமங்களாக, தொடர்ந்து தாக்கங்களையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளும் ஒரு பண்பாட்டு உரையாடலாக காந்தி அணுகியிருக்க வேண்டும். காந்தி அதை செய்தார், ஆனால் அதில் போதாமை இருந்தது என்பது பாரிக்கின் விமர்சனம். இப்பார்வையின் மூலம், “யார் இந்து?”, “இந்துவின் இயல்பு என்ன?” போன்ற கேள்விகளுக்கு விடை காணவே முடியாது. மேலும் “இதுதான் இந்துவாக இருப்பது” என்று யாரும் பண்பாட்டுத் திணிப்பும் செய்ய முடியாது. அப்படியென்றால் இந்தியாவை ஓர் இந்துவாகத்தான் காந்தியும் சொந்தம் கொண்டாடினாரா, அதனால்தான் அவர் இவற்றையெல்லாம் செய்யத் தவறிவிட்டாரா என்றால், இல்லை. காந்தியின் போதாமைக்கு பாரிக் இரண்டு காரணங்களை சொல்கிறார். ஒன்று, இந்திய வரலாறு குறித்த ஆழமான பார்வையும் கற்பனைத் திறனும் அவரிடம் இல்லை (அவரின் இளமைக் காலத்திய ஓரியெண்டல் பார்வைகள் இந்தியாவை எளிமைப்படுத்தின, அல்லது அதீதமாக உயர்த்தின). இரண்டு, காந்திக்கு முந்தைய தலைவர்கள் அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தவில்லை. காந்தி இந்தியா திரும்பியபோதே இந்து எழுச்சி இந்திய எழுச்சியாக நிலைபெற்றுவிட்டது. காந்திக்கு முன்பும் காந்திக்குப் பின்பும் காந்தியும் செய்யத் தவறிய இவ்விஷயங்களுக்கு காந்தியின் மீது பழி சுமத்த முடியாது என்கிறார் பாரிக்.</p><p>பேசிக்கலி அவர் காந்திக்குப் பிந்தைய தலைமுறையினர் மீது மிகப்பெரும் பொறுப்பை வைக்கிறார்; காந்தியால் செய்ய முடியாதவற்றை செய்யும் பொறுப்பு. நாடு போகும் போக்கிற்கு இன்றைக்கான காந்தியாக நான் பாரிக்கின் காந்தியைத்தான் பார்க்கிறேன். </p><p>உலக அகிம்சை தினம்.</p><p>Ref: Bhikhu Parekh (1989), Gandhi's Political Philosophy: A Critical Examination. pp: 190-191</p><p> <br /></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqBJOGqvEJrd2gaHX42dywEhtLAJYHoSsfOCf6GaysWDNWIEahCN8Vutyam07g2mEoXu38_yQZL_LDQqzZcH-3KVrZFToeVYsr8cjh4Dli9GM62ahXNC7vfNZQO8vrsbtg3e3sdzIFBxhI/" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" data-original-height="387" data-original-width="556" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqBJOGqvEJrd2gaHX42dywEhtLAJYHoSsfOCf6GaysWDNWIEahCN8Vutyam07g2mEoXu38_yQZL_LDQqzZcH-3KVrZFToeVYsr8cjh4Dli9GM62ahXNC7vfNZQO8vrsbtg3e3sdzIFBxhI/s16000/120709380_10218205339949327_4736217783089771284_n.jpg" /></a></div><br /> <p></p>Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-89116913501055627512020-08-21T14:23:00.009+05:302020-10-15T23:30:09.174+05:30திருவாதிரை<p>(1 - <a href="https://vishnuvaratharajan.blogspot.com/2020/06/blog-post.html" target="_blank">ஆணுறுப்பில் விழுந்த பல்லி</a>)</p><p>=== <br /></p><p><span style="color: black;"><span style="font-family: Arial;">“அடிக்கடி சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது டாக்டர்” என்றேன் கவலையுடன்.<br /><br />“நான் கொடுத்த மருந்தைத் தடவினீர்களா?”<br /><br />“வலியோ தடிப்போ எதுவுமே இல்லையே டாக்டர்? மருந்து வேலை செய்ததா என்று எப்படித் தெரியும்?”<br /><br />“தடவினீர்களா இல்லையா?”<br /><br />“தடவினேன். இன்னும் கொஞ்சம் இருக்கிறது.”<br /><br />“சரி. இப்போதைக்கு ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது என்றால் வாருங்கள்.” என்று அனுப்பிவைத்தார். மீண்டும் நான் சொன்னதை நம்பியதுபோல் தெரியவில்லை.<br /><br />அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை நானே தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணத்தை அதன் மதிப்பு தெரியாமல் உதாசீனப்படுத்தி, பிறகு அதுவும் நிராகரிக்கப்பட்டு மீண்டும் திரளோடு திரளாகக் கலந்திருந்தேன். தோள்பட்டை அழுத்தியது. ஆபீசில் வேறு ஆட்குறைப்பு நடக்கப்போகிறது என்ற வதந்தியால் மனது அமைதியற்று இருந்தது. பல்லி விழுந்த நிகழ்வைக் கொண்டாடச் சொன்னார் அந்தத் தத்துவ அறிஞர். அவர் சொன்ன சில விஷயங்கள் புரியவில்லை. ஆனால் எதையோ தீர்க்கமாக சொல்வது போலவே சொன்னார். அப்பொழுதே கேட்டிருக்கவேண்டும். குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது தனித்துவமாக உணர்ந்திருக்கலாம். இப்பொழுது அதற்கும் வழியில்லை.<br /><br />இரவு ஒன்பதரை மணிக்கு வாசல் கேட்டைப் பூட்டச் சென்றபோது அவர் வீட்டின் மொட்டை மாடியில் லைட் எரிந்தது. தினமும் பார்ப்பதுதான், ஆனால் ஏனோ இன்றுதான் அது மனதில் புதிதாய்ப் பதிந்தது. யாரோ இருப்பதுபோலத் தோன்றியது. ஆர்வம் மேலிடவே கேட்டைத் திறந்து அவர் காம்பவுண்டுக்குள் நுழைந்தேன். படிக்கட்டு வெளியேவே இருந்தபடியால் காலிங் பெல் எதையும் அழுத்தத் தேவையின்றி அப்படியே மேலே ஏறிவிட்டேன்.<br /><br />குழந்தையைப் படுக்கவைத்துக் குளிப்பாட்டும் பிளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றில் முட்டியை மடக்கி உட்கார்ந்துகொண்டு தத்துவ அறிஞர் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் வேறு இரண்டு மனிதர்கள், ஒருவர் ஏராளமான சதையுடன் தரையில் கால் நீட்டிப் பின்புறம் கை ஊன்றியிருந்தார். இன்னொருவர் சற்றே மெலிந்தவர், வழுக்கை தலை; ஓர் இரும்பு நாற்காலியில் அமர்ந்து தாடையில் கைவைத்தபடி எதையோ யோசித்துக்கொண்டிருந்தார். இன் செய்த சட்டை வழியாகத் தொப்பை துருத்திக்கொண்டிருந்தது. அந்தக் காட்சியே ஓர் ஓவியம் போல் என்னை ஈர்த்தது. “திரும்பிப் போய்விடு” என்று மனது சொல்ல, ஓரடி முன்னே எடுத்து வைத்தேன்.<br /><br />“யாரது?”, நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் தன் மூக்குக் கண்ணாடியை சரிசெய்தார். தத்துவ அறிஞர் திரும்பிப் பார்த்து,<br /><br />“அடடே, கம் </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span style="color: black;"><span style="font-family: Arial;">ப்ரோ</span></span>!”<br /><br />“இல்லை ஒன்றும் இல்லை, கேட்டைப் பூட்டச் சென்றேன், லைட் எரிந்தது… யூ கண்டின்யூ, நான் வருகிறேன்”<br /><br />“நோ நோ கம். கடல் ஆமைகள் இப்படித்தான் லைட்டைப் பார்த்து ஈர்க்கப்படும். </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span data-offset-key="5skdf-2-0"><span data-text="true">கம்</span></span>... சார்! நான் சொன்னேனே, இவர்தான் அவர். பக்கத்து வீட்டுக்காரர்.”<br /><br />“எது? பல்லி? இவர்தான் அந்தத் தம்பியா?”, நாற்காலியில் இருந்தவரின் கண்கள் விரிந்தன.<br /><br />“ஆமாம்! கம் </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span style="color: black;"><span style="font-family: Arial;">ப்ரோ</span></span>!”<br /><br />சற்றே சங்கடமாய்த்தான் இருந்தது. என்னை இப்படியா அறிமுகப்படுத்துவது? ஆனால் இவ்வுலகில் வேறு யாரை இவ்வாறு அறிமுகப்படுத்திவிட முடியும் என்ற எண்ணமும் வர, அதில் ஒரு மாதிரி கூச்சப் பெருமிதமும்.<br /><br />“வணக்கம் தம்பி! உங்களைப் பற்றி நிறைய சொன்னான். இப்பொழுது எப்படி இருக்கிறது?”<br /><br />“சார் உடம்பிற்கு ஒன்றும் இல்லை சார், நார்மலாகத்தான் இருக்கிறேன்”<br /><br />“ம்ம்ம். இவன் தகவலைச் சொன்னதிலிருந்து உங்களைப் பார்க்கவேண்டும் என்று அவ்வளவு ஆவல்”<br /><br />“நன்றி சார், எதேச்சையாக நடந்துவிட்டது”, எதற்கு நன்றி சொல்கிறோம் என்று எனக்கே அசிங்கமாக இருந்தது. ஆனால் அந்த சூழல் என்னை சட்டென்று ஒரு போக்கிற்குள் இழுத்துக்கொண்டுவிட்டது.<br /><br />“ஒரே பெருமை ப்ரோ இவருக்கு. ஆணுறுப்பில் பல்லி விழுந்தவரின் பக்கத்து வீட்டுக்காரரின் டிபார்ட்மெண்ட் ஹெட் என்று”<br /><br />“ஓ! ஹெச்சோடியா சார்?”, என்று நிரப்பினேன். “என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று தத்துவ அறிஞரிடம் கேட்டேன்.<br /><br />“மனிதகுலத்தின் முழுமுதற் பொழுதுபோக்கு. சுயம் குறித்த உள்முகப் பிரக்ஞையும் மானுடத் தத்துவமும் ஆரம்பித்த இடம். செக்சுக்கு அடுத்தபடியாக மனிதர்களை ஒன்றிணைக்கும் பெருந்தவம்.”<br /><br />“ஏஹ்? என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?”<br /><br />“திருவாதிரை”<br /><br />“பீட்டல்காய்ஸ்!”, என்றார் தரையில் அமர்ந்திருந்தவர். அப்பொழுதுதான் அவரைத் திரும்பிப் பார்த்தேன். எங்களை நோக்கித் திரும்பாமல் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.<br /><br />“உட்காருங்கள் ஏன் நிற்கிறீர்கள்?”<br /><br />“யெஸ் உட்காருங்கள் ப்ரோ” என்று தத்துவ அறிஞர் செம்மண் தரையைத் தட்டினார். “ஒட்டாது உட்காருங்கள். இதோ அவர் உட்கார்ந்திருக்கிறாரே”<br /><br />“திருவாதிரை என்ன ஸ்பெஷல்? பூமிக்கு அருகே வருகிறதா என்ன?”, ‘ப்பாடா’ என்றபடி அமர்ந்தேன்.<br /><br />“நோ. சூப்பர்நோவா. வெடிக்கப்போகிறது.”<br /><br />“வெடிக்கப்போகிறதா!”<br /><br />“அதெல்லாம் வெடிக்காது தம்பி”, என்றார் துறைத்தலைவர். “இவன் இப்படித்தான்...”<br /><br />“சார் வெடிச்சா என்னாகும் சார்?”<br /><br />“அது எங்கோ இருக்கிறது தம்பி. சும்மா லைட் எரியும், சில வாரங்கள் வானத்தைப் பார்க்க நன்றாக இருக்கும், அவ்வளவுதான்”<br /><br />“பிறகு எதற்காகப் பார்க்கிறீர்கள்? அதுதான் சில வாரங்கள் தெரியுமே? இண்ட்ரோ வேறு பலமாக இருந்தது?”<br /><br />“அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் உறுப்பில் பல்லி விழுந்ததோ, எனக்கும் தனித்துவமாக ஏதேனும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான்”<br /><br />“ஒற்றைக்காலெல்லாம் இல்லை. </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span style="color: black;"><span style="font-family: Arial;">ப்ரோ</span></span>, திருவாதிரை வெடிப்பைப் பார்த்த முதல் மனிதன், எப்படி?”, என்று ஆர்வம் பொங்க மலர்ந்தார்.<br /><br />நான் அவரைப் பார்த்தேன். ‘ஙே’ என்று இருந்தது கேட்க. இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுபோக இதெல்லாம் எல்லோருக்கும் அமைந்துவிடுமா? அடக்க முடியாமல் முதல் கேள்வியைக் கேட்டேவிட்டேன்.<br /><br />“இதெல்லாம் நடக்கிற காரியமா? அதுபோக இதற்கென்றே டெலஸ்கோப் எல்லாம் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார்களே?”<br /><br />“அது அவர்களின் பணி. நான் அப்படியல்ல”, என்றார். “நான் ஓர் ஆதிக்குறும்புத்தனத்துடன், இருத்தலில் உள்ள ஓர் அப்பாவித்தனத்துடன் பார்க்க விழைகிறேன். சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாம் மாம்மோத்துகளை வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, வானத்தில் ‘பிளுக்’கென்று வெலா சூப்பர்நோவா தோன்றியதே. அப்பொழுது தலையுயர்த்திப் பார்த்ததுபோல் நான் பார்க்க விரும்புகிறேன்.”<br /><br />“அந்த மனிதர்கள் பார்த்ததுபோலவா?”<br /><br />கழுத்தைத் திருப்பினார், “அந்த மாம்மோத்துகள் பார்த்ததுபோல்”<br /><br />‘பளா’ரென்று பல்பு எரிந்தது. “எப்படியென்றாலும் வெடித்தவுடன்தானே மேலே பார்க்க வேண்டும்? நீங்களோ வெடிப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே?”, என்றேன் புத்திசாலித்தனத்துடன்.<br /><br />“நான் எங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்? என் தலை மேல்நோக்கித் திரும்பியிருக்கிறது, அவ்வளவே”, என்று முறுவலித்தார்.<br /><br />“இதோ! இவன் இப்படித்தான் விதண்டாவாதம் செய்வான்”, துறைத்தலைவர் இடைமறித்தார். “கேளுங்கள். நீங்கள் கன்சர்ண்ட் பார்ட்டி என்பதால் சொல்கிறேன்.”<br /><br />“என்னது?”<br /><br />“சென்ற ஆண்டு திடீரென்று திருவாதிரை ஒளிமங்க ஆரம்பித்தது தம்பி. கேளுங்கள். பெரிய விஷயம். சென்ற ஆண்டு திடீரென்று ஒளிமங்கியதா? உடனே எல்லோரும் திருவாதிரை வெடிக்கப்போகிறது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள், நான் உட்பட. ஆனால் சில மாதங்களிலேயே அது மீண்டும் ஒளிர ஆரம்பித்துவிட்டது, அதாவது பழைய மாதிரியே. அதாவது திருவாதிரையைச் சுற்றி தூசு மறைத்தது, அதனால்தான் நமக்கு ஒளி மங்கியது, சூப்பர்நோவாவெல்லாம் இல்லை என்று கேசை மூடிவிட்டார்கள். உங்கள் உறுப்பில் பல்லி விழுந்ததோ, இப்பொழுது இவன் அந்தக் கேசைத் திறந்துவைத்திருக்கிறான்.”<br /><br />“ஒரு வேளை அது சூப்பர்நோவாவாக இருந்தால்? பத்திரம் எழுதித் தருவீர்களா?”, தத்துவ அறிஞர் இடைமறித்தார்.<br /><br />“சூப்பர் நோவாவாக இருந்தாலுமே கூட அது இன்று வெடிக்கலாம், நாளைக்கு வெடிக்கலாம், மில்லியன் ஆண்டுகள் கழித்து கூட வெடிக்கலாம். என் பத்திரமெல்லாம் கரித்துண்டாகிக் கிடக்கும் பரவாயில்லையா?”<br /><br />“எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? இருந்துதான் பார்ப்போமே?”<br /><br />“இப்படி இருந்தால் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாது. பல்லி விழுந்த அனுபவத்தில் சொல்கிறேன்” என்று விவாதத்தில் கலந்துகொள்ள முயன்றேன்.<br /><br />“</span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span style="color: black;"><span style="font-family: Arial;">ப்ரோ</span></span> இவர் சும்மா ஏற்றி விடுகிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், அவ்வளவுதான். நான் பகலில் யுனிவர்சிட்டியில் இருக்கும் சமயத்தில் வெடித்தால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்? ஒன்றும் செய்ய முடியாது. பகலில் வெடித்தால் என்ன மில்லியன் ஆண்டுகள் கழித்து வெடித்தால் என்ன, இரண்டுமே ஒன்றுதான். நான் என்ன செய்கிறேன் என்றால், என்ன செய்கிறேன் என்றால், மியர்லீ என்னுடைய சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துகிறேன், அவ்வளவே”<br /><br />“அது இன்சிக்னிபிகண்ட் என்கிறேன் நான்”, என்று துறைத்தலைவர் குறுக்கே வந்தார்.<br /><br />“இயற்கையின் போக்கில் மானுட வாழ்க்கையே இன்சிக்னிபிகண்ட்தான். அதற்காக லாண்டாவர் சொல்வதுபோல் கூட்டாகத் தற்கொலையா செய்துகொள்ள முடியும்? </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span style="color: black;"><span style="font-family: Arial;">ப்ரோ</span></span>, இந்தாண்டில் என்னன்னவோ நடக்கிறது. திருவாதிரை வெடிப்பும் தெரியப் போகிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சிங்கிஸ் கானின் வழியில் தெமிர்லான் ஆசியாவைக் கதிகலங்க அடித்துக்கொண்டிருந்த காலகட்டம். அந்த சமயத்தில் சுமார் எண்ணூறு ஒளிதூரத்தில் பால்வீதிக்குள்ளே ஒரு நட்சத்திரம் வெடித்திருக்கிறது. அது நம்மை வந்து சேர இத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்கின்றன. இசிண்டிட் அமேசிங்? ஒரு பேச்சுக்கு நாம் திருவாதிரை வெடித்த நேரத்தில் அங்கிருந்து டெலஸ்கோப் வழியாகப் பார்த்தால் தெமிர்லானின் அட்டூழியங்களைப் பார்க்கலாம். ப்ளேக் நோயில் கோடிக்கணக்கான மக்கள் செத்தது, மாலி சாம்ராஜ்யம் எல்லாவற்றையும் பார்க்கலாம். கிருஷ்ணதேவராயரையும் தெனாலி ராமனையும் பார்த்து நம் குழந்தைப் பருவம் எப்பேர்ப்பட்டப் பொய்களால் ஆனவை என்று மனதுடைந்து போகலாம். சாத்தியங்கள் எல்லையற்றவை! என்ன, யதார்த்தத்தில் நாம் அந்தக் காலவெளிக்குள் போக முடியாது, இது வரலாறு என்று நாம் உணர்ந்துகொள்ள முதலில் அது நடைபெற வேண்டியிருக்கிறது… எனிவே! ஒரு சூப்பர்நோவா பல நூற்றாண்டுகளை இணைக்கிறது </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span style="color: black;"><span style="font-family: Arial;">ப்ரோ</span></span>! அதை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஆதிக்குறும்புத்தனத்துடன், இருத்தலில் உள்ள அப்பாவித்தனத்துடன் பார்க்க விரும்புகிறேன். இது எப்பேர்ப்பட்ட சவால் தெரியுமா? சும்மா ஜிப்பு அவிழ்ந்ததோ பல்லி விழுந்ததோ என்ற கதை இல்லை ஆமாம்”, என்று பொரிந்தார்.<br /><br />“சரி, ஆனால் இதெல்லாம் திருவாதிரை அப்பொழுது வெடித்திருந்தால்தானே? ஒருவேளை சார் சொல்வதுபோல் வெடிக்கவில்லை என்றால்?”, முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டு கேட்டேன், என் அமைதி அவரைக் கடுப்பேற்றுகிறதா என்று. ஆனால் மனிதர் நிலையாகத்தான் இருந்தார்.<br /><br />“எல்லாம் ஒரு நம்பிக்கைதான். நம்புவதுதான் </span></span><span style="color: black;"><span style="font-family: Arial;"><span style="color: black;"><span style="font-family: Arial;">ப்ரோ</span></span> என் வேலையே” என்று புன்னகைத்தார். “சரி, ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. தினமும் க்ரீன் டீ போடுவேன், எங்களோடு இணைந்துகொள்கிறீர்களா?”<br /><br />“க்ரீன் டீயா? எனக்கு ஓக்கேதான், ஆனால் நீங்கள் க்ரீன் டீ போட சென்ற நேரம் பார்த்து திருவாதிரை வெடித்துவிட்டால் என்ன செய்வது?”<br /><br />“ஒன்றும் செய்ய முடியாது. நொந்துகொள்ள வேண்டியதுதான். அதுதான் ப்ரோ சொல்கிறேன், மியர்லீ ஒரு மணிநேரம் வானத்தைப் பார்த்து எனக்கிருக்கும் சாத்தியக்கூற்றை அதிகரித்துக்கொள்கிறேன், தட்ஸ் ஆல். சார் சொல்வதுபோல் நான் கண்மூடித்தனமாகவெல்லாம் தவம் செய்யவில்லை” என்றுவிட்டு, “எனக்கான பல்லி அமையாமலா போகும்?”, என்று முகத்தைத் தூக்கினார். “சரி, டீ எப்படி? சர்க்கரை போடாமலா தேன் போடாமலா? சார் வழக்கமாகத் தேன் போடாமல் சாப்பிடுவார். உங்களுக்கு சர்க்கரை போடாமல் எடுத்து வரவா?”<br /><br />“எதுவென்றாலும் ஓக்கே.”<br /><br />“சூப்பர்!” என்றபடிக் கீழே இறங்கினார். அவர் தலை மறையும் வரை மலைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.<br /><br />“ப்ரில்லியண்ட் பாய் யூ நோ?”, துறைத்தலைவர் பேச்சுக்கொடுத்தார். “கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது. சாகும்வரை வானத்தையேவா பார்த்துக்கொண்டிருப்பது?”<br /><br />“சார், இது என்னால்தான் என்று வேறு சொல்கிறீர்கள். என் பல்லி விழுந்த சம்பவத்திற்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா? இதை நினைத்து சிரிப்பதா, அல்லது உங்கள் அளவிற்கு நான் ஆழமாக இறங்கமாட்டேன் என்கிறேனா?”<br /><br />“அது தத்துவவாதிகள் எங்களின் சாபக்கேடு தம்பி. வரவேண்டாம்.”<br /><br />“யாருமே நம்பவில்லை என்றவுடன்தான் இவரிடம் சொன்னேன் சார். அதுதான் முதல் சந்திப்பு. சொன்னதும் இவருக்கு அப்படி ஓர் ஈடுபாடு வந்துவிட்டது. ஒரு வகையில் எனக்கு அது மகிழ்ச்சிதான். ஆனால் சமயத்தில் இவர் சொல்வது புரிந்துவிடுமோ என்று பயமாகவும் இருக்கிறது” என்றேன். சிரித்தார். “நார்மல்தான். என்ன செய்கிறீர்கள்?”<br /><br />“சும்மா ஐ.டி.தான் சார், பெரிதாக ஒன்றும் இல்லை. எப்போதாவது எழுதுவேன்.”<br /><br />“நல்லது. இதோ இருக்கிறானே...”, என்று தரையில் அமர்ந்திருந்தவரைக் காட்டினார். என் பக்கம் அதுவரை அவர் தலைதிருப்பக்கூட இல்லை. எனக்கென்ன என்று அமர்ந்திருந்தார். “அசோசியேட் ப்ரொபசர். இன்னும் மூன்று மாதங்களில் நான் ரிட்டயர் ஆகிறேன். அடுத்தது இவன்தான். கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் ஜூனியர். முப்பது வருடப் பழக்கம்”<br /><br />“நானும் வந்ததிலிருந்து கவனிக்கிறேன் சார். இவரும் வானத்தை முரட்டுத்தனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். யார் முதலில் பார்ப்பது என்று போட்டியோ?”<br /><br />“இல்லை இல்லை. எப்படி சொல்வது… இதை அடக்கத்தில் சொல்லவில்லை தம்பி, என்னை விட விஷயம் தெரிந்தவன்தான். என்ன ஆயிற்று என்றால், ஆறு வாரங்களுக்கு முன்பு யூர்கன் ஹாபர்மாஸ் என்ற அறிஞரின் புதிய ஆய்வுக்கட்டுரை வெளியானது தம்பி. அதிலிருந்து இவன் போக்கு சரியில்லை. ஒரு 91 வயது ஆசாமி இன்னமும் ஃபார்மல் செமாண்ட்டிக்ஸ், ட்ரான்செண்டெண்டல் ப்ராக்மேட்டிக்ஸ் என்று பேப்பர் போட்டுக்கொண்டிருக்கிறார், தினமும் நாலாயிரம் வார்த்தைகள் எழுதுகிறார் என்று ஒரு திடீர் உத்வேகம் வந்துவிட்டது. தானும் அவரைப்போல் கரைத்துக்குடிக்க வேண்டும் என்று சாப்பாடு தூக்கம் மறந்துவிட்டான்.”<br /><br />“அவ்வளவு பெரிய ஆளோ?”<br /><br />“எளிமையாக சொல்லவேண்டுமென்றால், முன்னூறு பருத்திவீரர்கள் படம் தெரியுமல்லவா?”<br /><br />“ஆமாம்?”<br /><br />“ஹாபர்மாஸ்தான் கடைசி பருத்திவீரர். வெட்டி வீழ்த்தப்படப்போகிறார், ஆனால் அது அல்ல வரலாறு. கடைசி வரை நிற்கிறாரே, அதுதான்... எனிவே, கமிங் டு த பாயிண்ட். இவனுக்குப் பொதுவாகவே நேம் டிராப்பிங் செய்யும் கெட்டப் பழக்கம் உண்டு. அதாவது கருத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல் வெறும் ஆட்கள் பேராக சொல்லி அதன் மீது சவாரி செய்வது. ஹொர்க்ஹைமர் சொல்லியிருக்கிறார், பிரதித்யசமுத்பாதம் சொல்லியிருக்கிறது, என்று பட்டம் விடுவான். ஆறு வாரங்களாக இந்தக் கெட்டப் பழக்கம் அதிகமாகி இப்பொழுது வாயிலிருந்து வார்த்தையே வரமாட்டேன் என்கிறது. வெறும் ஒற்றை வார்த்தைகளைத்தான் சொல்கிறான்.”<br /><br />“டாக்டரிடம் போகலாமே சார்?”, என்றேன்.<br /><br />“மருத்துவரிடம் போவதில் ஒன்றும் பிரச்னையில்லை. ஒன்று, நான் சொல்வதை அவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.”<br /><br />“அந்த வலி எனக்குத் தெரியும் சார். அனுபவித்து வருகிறேன்.”<br /><br />“இரண்டு, அப்படியே நம்பினாலும் இவன் ஒத்துழைக்க வேண்டுமே? நம் அகத்தை மருத்துவரிடம் முழுவதுமாக ஒப்படைக்க வேண்டும். இவன் பிழைப்பே குறுக்கு விசாரணைதான். மருத்துவரைப் பிடித்து ழாக் லக்கான், அனலிஸ்ட் டிஸ்கோர்ஸ் என்று முறையிட்டால் என்ன செய்வது? ஆழ்மனதைச் சுற்றி வேலி கட்டி வைத்திருக்கிறான். மருத்துவரால் உள்நுழைய முடியவில்லை. இது மருத்துவர்கள் சந்திக்கும் சவால்தான், ஆனால் இவன் அதீதமாகத் தன்னைத் தற்காத்துக்கொள்கிறான். எப்பொழுதும் எல்லாவற்றிலும் விமர்சனப் பார்வை வேண்டும் என்று தீர்மானமாக நம்புகிறான். எனவே ஜோசியரிடம் சென்றோம்.”<br /><br />“ஜோசியரா?”, திடீரென்று மருத்துவர் தளத்திலிருந்து ஜோசியர் தளத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.<br /><br />“ஆமாம், இவனோடு தினமும் கூட இருந்து, இப்பொழுது இந்த அவலங்களுக்கு வேறு நான் சாட்சியாக இருக்கிறேன். ஜோசியரிடம் விமர்சனத்திற்கு வேலை இல்லை. திருவாதிரை வெடிப்பைப் பாருங்கள், சரியாகிவிடும் என்று காசை வாங்கி அனுப்பிவிட்டார்.”<br /><br />“வசதியாகப் போய்விட்டது.” என்றேன் யோசிக்காமல்.<br /><br />“என்ன வசதியாகப் போய்விட்டது? விவாதமே அதனால்தான். வெடிக்காது என்கிறேன் நான்.”<br /><br />“வெடிக்கும்!”, கைகளில் இரண்டு கோப்பைகளுடன் தத்துவ அறிஞர் “லல்லல்லா” என்றபடி வந்தார்.<br /><br />“ஹியர்! சர்க்கரை அதன் இல்லாமையில் ஒளிர்கிறது”, கோப்பையை என்னிடம் நீட்டினார்.<br /> <br />“ஹியர்! தேன் அதன் இல்லாமையில் ஒழுகுகிறது”, துறைத்தலைவர் தன் கோப்பையைப் பெற்றுக்கொண்டார். <br /><br />“தேர்! திருவாதிரை அதன் இல்லாமையில் மிளிர்கிறது”, காற்றில் பெருமையுடன் சிம்பனி வாசித்தார்.<br /><br />“ஹப்பிள்!”<br /><br />“என்ன சொல்கிறார்?”<br /><br />“மூடிக்கொண்டு வானத்தைப் பாருங்கள் என்கிறார்.”</span></span></p><p><span style="color: black;"><span style="font-family: Arial;">விருட்டென்று மேலே பார்த்தோம். திருவாதிரை அப்படியே இருந்தது. நானும் துறைத்தலைவரும் தேனீரை ஸ்ர்ரப் ஸ்ர்ரப் என்று உறிஞ்சியபடி அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்கள் கழிந்தன. கழுத்தை மெல்ல இறக்கி அவர்களைப் பார்த்தேன். துறைத்தலைவர் மீண்டும் ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றிருந்தார். மற்ற இருவரும் பரம சிரத்தையுடன் கண்ணிமைக்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதிசயமாக இருந்தது. கோப்பையை மெல்லக் கீழே வைத்து எழுந்தேன். என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. உரையாடல் மீண்டும் சட்டென்று முடிந்துவிட்டது. படியிலிருந்து கீழிறங்கி, ஒரேயொருமுறை திரும்பி அவர்களை எட்டிப் பார்த்தேன். அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தனர், அவர்களை முன்னர் பார்த்ததுபோலவே. காலத்தை சுழிந்துகொண்டு மீண்டும் ஓவியமாக மாறிவிட்டிருந்தனர். பெருமூச்சுடன் கீழிறங்கி கேட்டைப் பூட்டி வீட்டிற்குள் வந்தேன்.<br /><br />ஹாலில் சுவரில் ஊர்ந்தவாறு தம்பி செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். மனதிற்குள் பொருமிக்கொண்டே அவனை நெருங்கினேன்.<br /><br />“டூட்”<br /><br />“என்ன?”, முகத்தைத் தூக்காமல் கேட்டான்.<br /><br />“ஏதேனும் வித்தியாசமாக உணர்கிறாயா?”<br /><br />“இல்லையே? நார்மலாகத்தான் இருக்கிறேன், ஏன்?”<br /><br />“ஒன்றுமில்லை. சரி… பல்லி விழுந்ததே? வெளியே யாரிடமும் சொல்லிவிடவில்லையே?”<br /><br />தலையைத் தூக்கினான். “கருமம். அதையெல்லாம் யாராவது வெளியே சொல்வார்களா?”<br /><br />“குட். அப்படியே இருக்கட்டும்”, என்றபடி என் அறைக்குச் சென்றேன்.<br /><br />அன்றிரவு ஆரம்பித்தப் பழக்கம். தினமும் சுமார் ஒன்றரை மணிநேரம் திருவாதிரையைத் தனியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.</span></span><br /></p>Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-79910599214452592032020-08-06T20:26:00.006+05:302020-08-08T22:08:06.438+05:30ஹிரோஷிமா மேயர் மட்சூயி கசூமியின் அமைதிப் பிரகடனம் - ஆகஸ்ட் 6, 2020அமைதிப் பிரகடனம்<br />மட்சூயி கசூமி,<br />மேயர், <br />ஹிரோஷிமா நகரம்<br />ஆகஸ்ட் 6, 2020<br /><br />ஆகஸ்ட் 6, 1945 அன்று, ஒரே ஓர் அணுகுண்டு எங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் அழித்தது. “இந்த இடத்தில் இன்னும் 75 வருடத்திற்கு ஒன்றும் முளைக்காது” என்ற வதந்தியொன்று அப்பொழுது இருந்தது. ஆனால் ஹிரோஷிமா மீண்டது; இன்று அமைதியின் குறியீடாக, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தரும் இடமாக விளங்குகிறது.<br /><br />மனிதகுலம் இன்று கொரோனா வைரஸ் தொற்று என்ற புதியதோர் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்தகாலப் பேரழிவுகளிலிருந்து நாம் கற்ற பாடங்களின் மூலம் நம்மால் இதைக் கடந்துவர முடியும்.<br /><br />சென்ற நூற்றாண்டில் 1918-ல் தொற்று நோய் பரவியபோது அது கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து மனிதகுலத்தையே அச்சுறுத்தியது. காரணம், முதலாம் உலகப்போரில் ஒன்றோடொன்று போரிட்ட நாடுகளால் அத்தொற்றுநோயை ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியவில்லை. அதன் பிறகு நிகழ்ந்த தேசியவாதங்களின் எழுச்சி, இரண்டாம் உலகப்போருக்கும் அணுகுண்டு வீச்சிற்கும் வழிகோலியது.<br /><br />வலிமிகுந்த இக்கடந்தகாலம் மீண்டும் நம் கண்முன்னே நடைபெற நாம் அனுமதித்துவிடக்கூடாது. குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதத்தை சிவில் சமூகம் நிராகரிக்க வேண்டும்; எதிர்வரும் ஆபத்துகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.<br /><br />அணுகுண்டு வீச்சு நடந்த மறுநாள், ஒரு 13 வயது பையன் பார்த்த காட்சி இது: “... பாலத்தில் சடலங்கள் வரிசை வரிசையாக வீழ்ந்து கிடந்தன. பலர் காயமுற்றிருந்தனர். பலர் தங்களின் இறுதி மூச்சை விட்டனர். கிட்டத்தட்ட அனைவரும் எரிந்து போயிருந்தனர், அவர்களின் தோல்கள் உருகித் தொங்கிக்கொண்டிருந்தன. “தண்ணீர்! தண்ணீர்”, என்று பலர் கெஞ்சினர். பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் அக்கோர நினைவுகளைப் பலகாலம் சுமந்த அச்சிறுவன், வளர்ந்து பெரியவனானதும் சொன்னான், “மக்கள் தங்களைப் பற்றியும் தங்களின் நாடுகளைப் பற்றியும் மட்டுமே நினைப்பதால்தான் போர்கள் மூளுகின்றன”<br /><br />சென்ற நவம்பர் மாதம், எங்கள் நகரத்திற்குப் போப் பிரான்சிஸ் வருகை தந்த போது, மிகவும் முக்கியமான செய்தியொன்றைக் கூறினார்: “நினைவில் கொள்வது, இணைந்து பயணிப்பது, பாதுகாப்பது. இம்மூன்றே நம் தார்மீகப் பொறுப்புகள்”<br /><br />அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்தின் தலைவராக ஒகாட்டா சடாக்கோ இருந்தபோது, அப்பொறுப்பில் தீவிரப் பங்காற்றினார். தன் அனுபவங்களை அவர் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்: “துயரத்தில் உள்ள உயிர்களைக் காப்பதே முக்கியமான பணி. எந்த ஒரு நாடும் தனித்திருந்தபடி அமைதியுடன் வாழமுடியாது. நாம் ஒருவரோடொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம்.”<br /><br />இச்செய்திகள் மனிதகுலம் எதிர்கொள்ளும் ஆபத்துகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும், நம் துயரம் மிகுந்த கடந்தகாலத்தின் தவறுகளை நாம் மீண்டும் செய்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகின்றன.<br /><br />ஹிரோஷிமா இன்றும் இருப்பதற்குக் காரணம், நம் முந்தைய தலைமுறையினர் ஒருவருக்கொருவர் துணை நின்றதால்தான். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கிருக்கும் அமைதி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்த்து, திரும்பிச் செல்லும் போது, “இதை எங்களின் சொந்த நிகழ்வாகப் பார்க்கிறோம்” என்றும், “இது மானுடத்தின் எதிர்காலத்திற்கான பாடம்” என்றும் கூறுகின்றனர். அணு ஆயுதங்களை ஒழிக்கவும், உலக அமைதியை நிலைநாட்டவும் உலக மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்ற ஒருமித்த கருத்து சிவில் சமூகத்தில் ஏற்படவேண்டும். அதை ஹிரோஷிமா தன் கடமையாக நினைக்கிறது.<br /><br />50 ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்ட அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தம் (NPT), மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்ட அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம் (TPNW), இவை இரண்டும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முக்கியக் கருவிகளாகும். அவற்றின் சட்டகங்களை நம் எதிர்கால சந்ததியினரிடம் நாம் கொண்டு சேர்க்கவேண்டும். ஆனால் அவர்களின் எதிர்காலமோ கேள்விக்குறியாக இருக்கிறது. இச்சட்டகங்கள் சரிவர இயங்க வேண்டும் என்ற முனைப்பை உலக நாடுகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உறுதியுடன் வெளிக்காட்ட வேண்டும்.<br /> <br />எனவேதான் இதை வலியுறுத்துகிறேன். அத்தலைவர்கள் அனைவரும் ஹிரோஷிமா வர வேண்டும். அணு ஆயுதம் எத்துணை பயங்கரமானது என்ற விழிப்புணர்வை அவர்கள் அடைய வேண்டும். மேலும், அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் மறுஆய்வு மாநாட்டில் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து அவர்கள் பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணு ஆயுதங்கள் சாராத மாற்றுப் பாதுகாப்பு முறைகளை உருவாக்குவது குறித்து அவர்கள் ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடர வேண்டும்.<br /><br />அணு ஆயுத நாடுகளுக்கும் அணு ஆயுதமற்ற நாடுகளுக்கும் இடையே ஓர் பாலமாக இருக்கும் ஜப்பான் அரசு, அப்பொறுப்பை மேம்படுத்த TPNW அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கோருகிறேன். உலகெங்கிலும் உள்ள ஹிபகுஷாக்களின் [அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்] இக்கோரிக்கைக்கு ஜப்பான் அரசு செவிசாய்க்க வேண்டும். மேலும், ஹிபகுஷாக்களுக்கு இன்னும் தாராளமான உதவியை அரசு செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அவர்களின் சராசரி வயது இப்பொழுது 83-ஐத் தாண்டிவிட்டது. அவர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் துயரமானது. கதிர்வீச்சின் கொடிய விளைவுகளால் இன்றும் மனதாலும் உடலாலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். "கருமழைப் பகுதிகளை" அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கோரிக்கை விடுக்கிறேன் [அணுகுண்டு வெடித்த பின் அப்பகுதியில் கதிர்வீச்சு நிரம்பிய கருப்பு மழை பொழிந்தது. அப்பகுதியின் எல்லையை விரிவாக்குவதன் மூலம் மேலும் பல மக்களை ஹிபகுஷாக்களாக அங்கீகரிக்க முடியும்].<br /><br />அணுகுண்டு வீச்சு நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் குறிக்கும் இந்த அமைதி நினைவேந்தல் நிகழ்வில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற எங்களின் பிரார்த்தனைகளை உளமார சமர்ப்பிக்கிறோம். அணு ஆயுதங்களை ஒழிக்கவும், உண்மையான உலக அமைதியை நிலைநாட்டவும் எங்கள் முழு சக்தியையும் செலவிடுவோம், என்று நாகசாகியின் துணையோடும், உலகெங்கிலும் உள்ள ஒத்த கருத்துடைய மக்களின் துணையோடும் நாங்கள் உறுதிமொழி எடுக்கிறோம்.<br /><br />PEACE DECLARATION, <br />August 6, 2020,<br />Matsui Kazumi,<br />Mayor, <br />The City of Hiroshima.<br /><br />(தமிழில்: வ.விஷ்ணு)<br />Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-82260434050899490542020-06-30T00:09:00.001+05:302020-08-22T23:42:48.324+05:30ஆணுறுப்பில் விழுந்த பல்லி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தூங்கச் செல்வதற்கு முன் ஒன்றுக்குப் போகையில் பல்லி ஒன்று என் உறுப்பில் விழுந்துவிட்டது. இதயம் ஒரு வினாடி நின்றே போய்விட்டது. பதறியடித்தபடி உதறினேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை.<br /><br />அடுத்த நாள் காலை டாக்டரிடம் சென்றேன். “பல்லி உங்களைத் தீண்டியதா?” என்று கேட்டார். “அப்படியே விழுந்துவிட்டது” என்றேன். “அதன் நாக்கு பட்டதா?” என்றார். “அதெல்லாம் தெரியவில்லையே, உதறினேன் ஓடிவிட்டது”. “விழுந்த இடத்தில் இதைத் தடவவும்” என்று ஒன்றை எழுதிக்கொடுத்தார். ஜோசியக்காரரிடம் போகவே பயமாக இருந்தது.<br /><br />தம்பியிடம் சொன்னேன். “சும்மா உளறாதே, இதெல்லாம் நடக்க சாத்தியக்கூறு மிகவும் குறைவு” என்றான். “அதுதான் நடந்துவிட்டதே!” என்று முறையிட்டேன். “என் அண்ணனுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று என் அறிவு ஏற்கனவே சிலவற்றைக் கற்பனை செய்து வைத்திருக்கிறது, ஒருவேளை நடந்துவிட்டால் தாங்கிக்கொள்வதற்காக. சாலை விபத்து, புற்றுநோய், தற்கொலை, மாரடைப்பு, மரம் சாய்வது, ஆனால் பல்லி இப்படி விழுவதெல்லாம் சாத்தியம் மிகமிகக் குறைவு. என்னால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை, எனவே ஏற்க மாட்டேன்” என்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டான்.<br /><br />இணையத்தில் தேடினேன். அங்கு பொதுவாகத் துணைக்குப் பலர் இருப்பார்கள். “ஆமாம் எனக்கும் நடந்தது” என்பது போன்ற பதிவுகள் இருக்கும். ஆனால் பல்லியை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களுக்குக் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி எதுவும் கண்ணில் படவில்லை.<br /><br />ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். “ஆணுறுப்பில் விழுந்த பல்லி என்று பின்நவீனத்துவமாக எதையாவது எழுதவேண்டியது. அறிவுஜீவி என்று காட்டிக்கொண்டுவிடுவது” என்று வசைகள் வந்தன. நண்பர்கள் வழக்கம்போல் “அந்தப் பல்லிக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என்று கிண்டலடித்தனர்.<br /><br />யாருமே அதை நம்பியதுபோல் தெரியவில்லை. தனியாக இருப்பதுபோல் உணர்ந்தேன்.<br /><br />இதற்காகவே பிறவியெடுத்ததுபோல் பக்கத்து வீட்டில் ஓர் தத்துவ அறிஞர் வாழ்ந்து வந்தார். இருபத்தி ஐந்து வயதுதான். எடுத்த எடுப்பிலேயே, “ஒரு பல்லி ஆணுறுப்பில் விழும் நிகழ்வை ஒரு ஐந்து வயது மூளையும் இருபது வயது மூளையும் அறுபது வயது மூளையும் வெவ்வேறு மாதிரி அனுபவிக்கும். ராபர்ட் போக் ஹாரிசன் சொல்லியிருக்கிறார்” என்றார்.<br /><br />“சரி?”<br /><br />“உங்கள் அனுபவம் எப்படி?”<br /><br />“நான் கிளம்புகிறேன்”<br /><br />“ப்ரோ வெய்ட். நான் உங்களை நம்புகிறேன்”<br /><br />திரும்பிப் பார்த்தேன். இப்பிரபஞ்சத்தில் என்னை நம்பும் ஒரே சக உயிர் என்னை உட்காரும்படி புன்னகையுடன் சைகை செய்தது.<br /><br />“என்னால் குறைந்தபட்சம் செய்ய முடிவது உங்களை நம்புவது மட்டுமே. உண்மையை என்னால் அறியவே முடியாது. நீங்கள், நான், எல்லோரும் மிகமிகத் தனியான தீவுகள். நம்புவதைத் தவிர வேறு வழியே இல்லை. நம்புவதுதான் ப்ரோ என் வேலையே”, என்றார்.<br /><br />“திடீரென்று பல்லி அங்கு விழுந்தவுடன் தனிமையாக உணர்கிறேன். அதனால்தான் இங்கு வந்தேன். நானும் பல்லியும் மட்டும் தனியாக இருப்பதுபோல்”<br /><br />“நோ நோ, நிலைமை இன்னும் மோசம். அந்தப் பல்லிக்கு மெய்ஞானமெல்லாம் கிடையாது. எப்படியோ கணக்கிட்டுத் தன்னிச்சையாக அங்கு விழுந்திருக்கிறது. எனவே பல்லிக்கு உங்கள் தனிமையில் இடமில்லை. அது ஆழ்மனது சும்மா உங்களை ஆற்றுப்படுத்துவதற்காக உருவாக்கும் கதை. உண்மையில் நீங்கள் மிகமிகத் தனியாக இருக்கிறீர்கள். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்”, என்று வகுப்பெடுத்தார்.<br /><br />“தனிமையாக உணர்ந்ததால்தான் உங்களிடமே வந்தேன் என்றேன். இப்பொழுது நீங்களே மேலும் அழுத்துகிறீர்கள்”<br /><br />“தனிமை உங்களை அழுத்தக்கூடாது ப்ரோ. எப்படி உணரவேண்டுமோ அதற்கு அப்படியே நேர்மாறாக உணர்கிறீர்கள். இதே என் உறுப்பில் பல்லி விழுந்திருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?”<br /><br />“என்ன செய்திருப்பீர்கள்?”<br /><br />“விடுதலை கிடைத்ததுபோல் உணர்ந்திருப்பேன். இந்த மனிதத் திரளிலிருந்து என்னைத் தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணமாக அது அமைந்திருக்கும். எத்தனைப் பேருக்கு இது நடக்கும் சொல்லுங்கள்? ஒரு விண்கல் உங்கள் மண்டையைத் தாக்குவதைப் போன்றது இது, ஆனால் ஆபத்தில்லாதது.”<br /><br />“டாக்டர் மருந்து கொடுத்திருக்கிறார்”<br /><br />“இது உங்களின் அடையாளம். பொறாமையாக இருக்கிறது ப்ரோ. குறைந்தபட்சம் ஆணுறுப்பில் பல்லி விழுந்தவரின் பக்கத்துவீட்டுக்காரன் என்று தேற்றிக்கொள்கிறேன்”, என்றார்.<br /><br />அந்த சூழலே மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை இவர் சொல்வதுபோல் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ என்று மனது குழம்பியது. மேலும் கொஞ்சம் பேசினேன். அவரோ மேலும் கீழும் குதிக்காத குறையாகப் படபடவென்று இருந்தார். “இது உங்களின் தனித்துவ அடையாளம். மெய்யோடான உறவாடலில் உங்களுக்குக் கிடைத்த அரியதோர் கைரேகை. இது உங்களுக்கே உங்களுக்கானது”, என்று வணங்கினார்.<br /><br />அவர் சொல்வதைக் கேட்கக் கேட்க சற்றே ஆசுவாசமாய் இருந்தது. ஆனால் இப்படிப்பட்டத் தீவிரவாதத் தனிமையை ஏற்கவும் பயமாக இருந்தது. “இப்படியெல்லாம் என்னை நான் தனித்துவப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. பல்லி விழுந்துவிட்டது, அவ்வளவுதான்”, என்றேன்.<br /><br />“ஓ!", புன்னகை மறைந்துவிட்டது. "அது உங்கள் தேர்வு. நோ பிராப்ளம்.”<br /><br />“தேங்க்ஸ். நான் கிளம்புகிறேன்”, என்றபடி எழுந்தேன். உரையாடல் சட்டென்று முடிந்துபோய்விட்டது. “சொன்னதற்கு நன்றி, உங்களை நான் நம்புகிறேன், உண்மையோ இல்லையோ” என்றபடி கையசைத்தார்.<br /><br />வீடு வந்து சேர்ந்தேன். “இப்பொழுது என்ன? பல்லி விழுந்துவிட்டது, அவ்வளவுதானே, அதற்கு இவ்வளவு பதட்டம். நாளை ஆபீஸ் கான்பரன்ஸ் கால் வழக்கம்போல் இருக்கிறது, டாக்டர் கொடுத்த மருந்து இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, வாழ்க்கை வழக்கம்போல் போகப்போகிறது. விடு”, என்று தேற்றிக்கொண்டேன். தம்பி பதறியடித்தபடி ஓடிவந்தான்.<br /><br />“டேய்! பல்லி! எனக்கும்!”<br /><br />இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கிவிட்டது.</div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> </div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on">===</div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> </div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on">(2 - <a href="https://vishnuvaratharajan.blogspot.com/2020/08/blog-post.html" target="_blank">திருவாதிரை</a>)<br /></div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-59240580676984062482020-03-23T19:22:00.000+05:302020-05-18T23:54:58.308+05:30கடிதம் - யுட்டா ப்யோனிஷ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்புள்ள விஷ்ணு,<br />
<br />
ஹராரியின் கட்டுரையை அனுப்பியமைக்கு நன்றி. ஆங்கிலம் தெரிந்த என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.<br />
<br />
உனக்கே தெரிந்திருக்கும். சில அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மருந்தக மருத்துவமனைகளைத் தவிர பெர்லினில் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. முற்றிலும் புதியதோர் வாழ்க்கை முறைக்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறோம். குடும்பத்தினரோடு, நண்பர்களோடு, அண்டை வீட்டாரோடு நெருங்கிப் பழக முடியவில்லை. நல்லவேளையாக இதுவரை எனக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை. தள்ளாத முதுமையின் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை நிலை எனக்குப் பல சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. வீடு இருக்கிறது, தோட்டம் இருக்கிறது, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கப்பட இருக்கின்றன. இப்போதைக்குப் பிரகாசிக்கும் சூரியன், இப்போதைக்கு நீல வானம், இப்போதைக்குக் குயில் சத்தம்.<br />
<br />
ஆனால் என்னைப் போல் எல்லோருக்கும் இது அமையவில்லையே? உலகின் பல நகரங்களில் சிறுசிறு அறைகளில் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளியே விளையாட வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள், வீட்டிற்கு உள்ளேயே முடங்கி முடங்கி எரிச்சல், ஆவேசம் போன்ற உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகப்போகும் எண்ணற்றக் குடும்பங்கள்… இந்த உளவியல் நெருக்கடிகள் உருவாக்கப்போகும் சிக்கல்கள் வைரசின் தாக்கத்தை விட மோசமானதாக இருக்கலாமோ என்று அவ்வப்போது தோன்றுகிறது. யார் கண்டது? மீண்டும் ஒரு முறை நாங்கள் இரண்டாகப் பிளவுபடலாம். ஏற்கனவே கிழக்கு-மேற்கு என்று பிளவுபட்டோம். இடது-வலது என்று பிளவுபட்டிருக்கிறோம். அடுத்து இளையோர்-மூத்தோர் என்று பிளவுபட ஆரம்பித்துவிட்டோம். நோயுற்றோர்-ஆரோக்கியமானோர் என்று பிளவுபட்டாலும் படுவோம். எல்லையற்ற சாத்தியங்கள். சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம் என்று தீர்மானத்துடன் இருக்கும் உன்னைப் போன்ற இளைய தலைமுறையினர் இதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.<br />
<br />
நேரம் கிடைத்தால், அவ்வப்போது என்னிடம் பேசு. உன் வாழ்வில் நிரம்பியிருக்கும் மனிதர்களைப் பற்றி சொல், உன் நினைவுகளைப் பகிர்ந்துகொள். வாழ்வில் நெருக்கடி சூழும்போதுதான் சக மனிதரின் அருகாமையும் கதகதப்பும் நம் கண்ணுக்குத் தெரிகிறது.<br />
<br />
அன்புடன்,<br />
யுட்டா ப்யோனிஷ்<br />
(நண்பர்)<br />
பெர்லின்</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-34576593663971185142020-01-25T19:48:00.000+05:302020-05-18T23:54:52.272+05:30ஜெர்மன் அதிபரின் யத் வாஷெம் உரை - ஜனவரி 23, 2020<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பிராங்க்-வால்டர் ஷ்டைன்மையர்,<br />
குடியரசுத் தலைவர், ஜெர்மனி<br />
நாள்: ஜனவரி 23, 2020<br />
இடம்: யத் வாஷெம், யெருசலேம்/இஸ்ரேல்<br />
<br />
“என்னை இங்கு வரவைத்த ஆண்டவனின் முன்பு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன்."<br />
<br />
இன்று யத் வாஷெம்மில் உங்களிடையே உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்.<br />
<br />
யூத இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு அணையாச் சுடர் இங்கே யத் வாஷெம்மில் எரிந்துகொண்டிருக்கிறது.<br />
<br />
இந்த இடம் அவர்கள் அனுபவித்த சித்திரவதையை நினைவூட்டுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்த சித்திரவதையை.<br />
<br />
இந்த இடம் அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது - ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கையையும்.<br />
<br />
இந்த இடம் சாமுவெல் டைடெல்மானை நினைவுகூர்கிறது. டைடெல்மான் மக்காபி வார்சா அணிக்காகப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர். அவருடைய சகோதரி ரேகா, சப்பாத் அன்று அவருடைய அம்மாவுக்கு சமையலில் ஒத்தாசை செய்வாள். அவளை இந்த இடம் நினைவுகூர்கிறது.<br />
<br />
இந்த இடம் இடா கோல்ட்பிஷ்ஷை நினைவுகூர்கிறது, அவருடைய மூன்று வயது சிறுவன் விலியை நினைவுகூர்கிறது. அக்டோபரில் அவர்கள் சிசினாவோ கெட்டோவுக்கு அனுப்பப்பட்டார்கள். ஜனவரியில் ஒரு குளிர்மிகுந்த பொழுதில் இடா அவளுடைய பெற்றோர்களுக்குத் தன்னுடைய இறுதிக் கடிதத்தை எழுதினாள்: “உங்களை விட்டுக் கிளம்பும்போது அந்த நொடியின் முக்கியத்துவத்தை நான் உணரவில்லை, என் மனதின் அடியாழத்திலிருந்து அதற்காக நான் வருந்துகிறேன், […] உங்களை ஒரே ஒரு முறையேனும் இறுகக் கட்டிப்பிடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.”<br />
<br />
ஜெர்மானியர்கள் அவர்களைக் கடத்தினார்கள். ஜெர்மானியர்கள் அவர்களின் கைகளில் நெருப்பிட்டு எண்களைப் பொறித்தார்கள். ஜெர்மானியர்கள் அவர்களை சக மனிதர்களாகப் பார்க்க மறுத்தார்கள். அவர்களை வெறும் எண்களாக சுருக்க முயன்றார்கள், வதை முகாம்களில் அவர்களின் நினைவுகளை அழிக்க முயன்றார்கள்.<br />
<br />
அவர்கள் அதில் வெற்றி பெறவில்லை.<br />
<br />
சாமுவெல்லும் ரேகாவும் இடாவும் விலியும் மனிதர்கள்.<br />
<br />
அவர்கள் இன்று மனிதர்களாக நம் நினைவுகளில் வாழ்கிறார்கள்.<br />
<br />
இசையாஹ் புனித நூலில் சொல்லப்பட்டதுபோல, யத் வாஷெம் அவர்களுக்கு ஒரு நினைவிடத்தையும் பெயரையும் தந்துள்ளது.<br />
<br />
இந்த நினைவிடத்தின் முன்னே நான் நிற்கிறேன். அவர்களின் பெயர்களை வாசிக்கிறேன். அவர்களின் கதைகளைக் கேட்கிறேன்.<br />
<br />
ஆழ்ந்த துக்கத்தில் நான் தலை கவிழ்கிறேன்.<br />
<br />
சாமுவெல்லும் ரேகாவும் இடாவும் விலியும் மனிதர்கள்.<br />
<br />
ஒன்றை இங்கு சொல்லியே ஆகவேண்டும். இக்கொடுஞ்செயலைப் புரிந்தவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் ஜெர்மானியர்கள். இவர்களைக் கொன்றவர்கள், இவர்களைக் கொல்லத் திட்டம் போட்டவர்கள், இவர்களைக் கொல்ல உதவியவர்கள், இக்கொடுமையைக் கண்டு அமைதியாக இருந்தவர்கள், அவர்கள் ஜெர்மானியர்கள்.<br />
<br />
மனித வரலாற்றில் இப்படி ஒரு கொடுஞ்செயல் நடந்ததில்லை. அறுபது இலட்சம் யூதர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். அந்த இன அழிப்பை நடத்தியது என்னுடைய தேசத்துக்காரர்கள்.<br />
<br />
ஐந்து கோடி உயிர்களைப் பலி வாங்கிய அந்த உலகப் போர், என்னுடைய தேசத்திலிருந்துதான் துவங்கியது.<br />
<br />
ஆஷ்விட்ஸ் நகரம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள் கழிந்துள்ள இந்த தினத்தில், ஜெர்மனி நாட்டின் குடியரசுத் தலைவராக உங்கள் அனைவரின் முன்பும் நிற்கிறேன். ஒரு மிகப்பெரும் வரலாற்றுப் பாவத்தை நிகழ்த்திய குற்ற உணர்ச்சியில் பெரும் பாரத்தைச் சுமந்தபடி நிற்கிறேன். அதே வேளையில், என் இதயம் நன்றியையும் சுமக்கிறது. இன அழிப்பில் தப்பிப்பிழைத்தவர்கள் எங்களை நோக்கி நேசக் கரங்களை நீட்டினார்கள், மீண்டும் ஜெர்மனியில் யூதர்களால் வாழமுடியும் என்று எங்கள் மீது புதியதொரு நம்பிக்கையை இஸ்ரேலும் உலகமும் வைத்தது. அதற்காக என் நன்றியை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். நம்மிடையே ஏற்பட்ட நல்லிணக்கம் எனக்கு சிலிர்ப்பைத் தருகிறது. அந்த நல்லிணக்கத்தின் ஆன்மா ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே, ஜெர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே, ஜெர்மனிக்கும் உலகத்திக்கும் இடையே ஒரு புதிய, அமைதியான வழியை ஏற்படுத்தித் தந்தது.<br />
<br />
யத் வாஷெம்மில் எரிந்துகொண்டிருக்கும் இந்தச் சுடர் என்றுமே அணையாது. ஜெர்மனியின் மீது உள்ள பொறுப்பு என்றுமே மறையாது. அந்த பொறுப்பை நாங்கள் சுமக்கவே விரும்புகிறோம். அந்தப் பொறுப்பின் அடிப்படையிலேயே எங்களை நீங்கள் மதிப்பிட வேண்டும்.<br />
<br />
இந்த அற்புதமான நல்லிணக்கத்தை சாத்தியப்படுத்தியதற்காக உங்கள் முன்பு நன்றியுடன் நிற்கிறேன். இந்த நினைவு எங்களைத் தீய எண்ணங்களிலிருந்து காக்கிறது என்று சொல்ல எனக்கு ஆசையாகத்தான் இருக்கிறது.<br />
<br />
ஆம், ஜெர்மானியர்களாகிய நாங்கள் எதையும் மறக்கவில்லை; நினைவுகூர்ந்தபடிதான் இருக்கிறோம். ஆனால் நிகழ்காலத்தை விட கடந்தகாலத்தைத்தான் நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்கிறோமோ என்று அவ்வப்போது தோன்றுகிறது.<br />
<br />
எங்களைத் தவறாக வழிநடத்திய அந்த தீய சக்தி இப்பொழுது ஒரு புதிய வடிவில் எங்கள் முன்னே நிற்கிறது. இன்றைய பிரச்னைகளுக்கான தீர்வாக மீண்டும் யூத வெறுப்பு, இன வெறி, சர்வாதிகாரம் போன்ற பதில்களைத் தருகிறது, அதையொட்டியே சிந்திக்கிறது.<br />
ஜெர்மானியரான நாங்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது.<br />
<br />
ஆனால், மீண்டும் வெறுப்பு மேகம் ஜெர்மனியை சூழும் வேளையில், என்னால் அதை சொல்ல முடியாது.<br />
<br />
இன்று பள்ளிகளில் யூதக் குழந்தைகள் மீது எச்சில் உமிழப்படும் சூழலில், என்னால் அதை சொல்ல முடியாது.<br />
<br />
இஸ்ரேலின் கொள்கைகளை விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் யூத வெறுப்பு மீண்டும் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த சூழலில் என்னால் அதை சொல்ல முடியாது.<br />
<br />
யாம் கிப்புர் தினத்தன்று ஹால்லே நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டுத் தலத்தில் வலதுசாரித் தீவிரவாதி ஒருவன் ஒரு ரத்தவெள்ளத்தை ஏற்படுத்த முனைந்தான். அவனுக்கும் அந்த வெறிச்செயலுக்கும் இடையே ஒரே ஒரு வலுவான மரக்கதவுதான் இருந்தது.<br />
<br />
ஜெர்மானியரான நாங்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று எப்படி நான் சொல்வது.<br />
<br />
நிச்சயமாக, நாம் வாழும் காலம் முன்பைப் போல் இல்லை; வித்தியாசமானதுதான்.<br />
நிச்சயமாக, இன்று உதிர்க்கப்படும் சொற்கள் வேறுதான்.<br />
<br />
நிச்சயமாக, இன்று கொடுஞ்செயல்களை நிகழ்த்துபவர்கள் வேறு நபர்கள்தான்.<br />
ஆனால், இரண்டுமே ஒரே தீமை.<br />
<br />
நம்மிடையே மிச்சமிருப்பது ஒரே ஒரு பதில்தான்: மீண்டும் வேண்டாம்! இனியும் வேண்டாம்!<br />
<br />
இதனால்தான் நினைவுகூர்தலுக்கு முடிவே ஏற்படாது.<br />
<br />
புதிய ஜெர்மன் குடியரசின் முதல் நாளிலிருந்து இப்பொறுப்பு அதன் ஆன்மாவில் ஆழமாகப் பதியப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நாள் வரை எங்களை அது சோதித்துக்கொண்டே இருக்கிறது.<br />
<br />
ஜெர்மனிக்குத் தனக்குத் தானே நிரூபித்துக்கொள்ள ஒன்று உண்டு என்றால், அது இந்த வரலாற்றுப் பொறுப்பை சுமந்து அதற்கு ஏற்றால்போல நடந்துகொள்வதுதான்.<br />
<br />
யூத வெறுப்பை நாம் எதிர்ப்போம்!<br />
<br />
தேசியவாதம் என்னும் நஞ்சை நாம் தடுப்போம்!<br />
<br />
யூத உயிர்களை நாம் காப்போம்!<br />
<br />
இஸ்ரேலுடன் நாம் நிற்போம்!<br />
<br />
இன்று யத் வாஷெம்மில், உலகத்தின் பார்வைக்கு முன்னே, எங்களின் சத்தியத்தை மீண்டும் பதிவுசெய்துகொள்கிறேன்.<br />
<br />
என் குரல் தனியானது இல்லை என்று எனக்குத் தெரியும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முழங்குவோம்: யூத இன வெறுப்பு ஒழிக! மனித வெறுப்பு ஒழிக!<br />
<br />
ஆஷ்விட்ஸ் வதைமுகாமில் நிகழ்ந்த கோரத்திலிருந்து மனித இனம் ஒருமுறை பாடம் கற்றுக்கொண்டுவிட்டது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும் மனித உரிமைகளின் அடிப்படையிலும் உலக நாடுகள் புதியதோர் உலகை உருவாக்கின. அமைதிகான இந்த உலகைக் காக்க உங்களோடு கைகோர்த்து ஜெர்மனியும் உறுதியோடு நிற்கிறது. ஏனெனில் எங்களுக்குத் தெளிவாய்த் தெரியும்: அமைதி குலைக்கப்படலாம். மக்களின் தலையில் நஞ்சு ஏறலாம்.<br />
<br />
"யூத இன அழிப்பை நினைவுகூர்ந்தபடியே இருக்கும் ஒரு உலகு. இன அழிப்பே நடவாத ஒரு உலகு." மரியாதைக்குரிய உலகத் தலைவர்களே, அரசாங்கங்களே! நாம் அனைவரும் இணைந்து இந்த உறுதிமொழியை ஏற்பதை நன்றியுடன் நோக்குகிறேன்.<br />
<br />
<i>"வாழ்வு என்னும் அற்புதமான சப்தத்தை மீண்டும் கேட்போமா? யார் அறிவார்?</i><br />
<i>நித்தியத்தோடு நம்மைப் பின்னிக்கொள்வோமா? யார் அறிவார்? யார் அறிவார்?”</i><br />
<br />
சால்மென் கிரடோவ்ஸ்கி ஆஷ்விட்ஸில் இருந்தபோது எழுதிய வரிகள் இவை. இவற்றை எழுதி ஒரு தகர டப்பாவில் அடைத்து, சுடுகாட்டில் புதைத்தார்.<br />
<br />
இன்று யத் வாஷெம்மில் அவர்கள் நித்தியத்தோடு பின்னப்பட்டிருக்கிறார்கள். சால்மென் கிரடோவ்ஸ்கி, சாமுவெல் டைடல்மேன், ரேகா டைடல்மேன், இடா கோல்ட்பிஷ், விலி கோல்ட்பிஷ் அனைவருமே.<br />
<br />
அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். கட்டற்ற வெறுப்பின் முன்பு அவர்களின் உயிர்கள் தோற்றுப்போயின.<br />
<br />
ஆனால் வெறுப்பின் காரிருளை நம் நினைவேந்தல் தோற்கடிக்கும்.<br />
<br />
வெறுப்பை நம் செயல்கள் முறியடிக்கும்.<br />
<br />
இதுவே என் நிலைப்பாடு.<br />
<br />
இதுவே என் நம்பிக்கை.<br />
<br />
என்னை இங்கு வரவைத்த ஆண்டவனின் முன்பு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன்.<br />
<br />
Federal President Frank-Walter Steinmeier<br />
at the Fifth World Holocaust Forum<br />
"Remembering the Holocaust: Fighting Antisemitism"<br />
at Yad Vashem<br />
in Jerusalem/Israel,<br />
on 23 January 2020<br />
(தமிழில்: வ.விஷ்ணு)<br />
மூலம்: <a href="http://www.bundespraesident.de/SharedDocs/Reden/EN/Frank-Walter-Steinmeier/Reden/2020/01/200123-World-Holocaust-Forum-Yad-Vashem.html;jsessionid=8861BBA81DF8748407CF97C204144B61.1_cid371">http://www.bundespraesident.de/SharedDocs/Reden/EN/Frank-Walter-Steinmeier/Reden/2020/01/200123-World-Holocaust-Forum-Yad-Vashem.html;jsessionid=8861BBA81DF8748407CF97C204144B61.1_cid371</a></div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-27241974235272301462019-05-27T17:43:00.000+05:302020-05-18T23:54:44.335+05:30நேரு நினைவு தினம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மேற்கு ஐரோப்பிய சிந்தனைப் பரப்பில் இயங்கும் அறிவுஜீவிகளுக்கு நேருவின் மீது அதீத விமர்சனப் பார்வை இருப்பதைக் கடந்த மூன்று மாத உரையாடல்களில் என்னால் உணர முடிந்தது (சில அதிரடியான விதிவிலக்குகள் உண்டு; முடிந்தால் இன்னொரு பதிவில்). அரசு இயந்திரத்திற்குள் இயங்கும் ஒருவர் அவ்வியந்திரத்தின் வன்முறை ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகிறார். அந்த நிலையே அவரை காந்தியத்திலிருந்து விலக வைத்துவிடுகிறது என்று ஒரு சிலர் கருத்து கொண்டிருந்தார்கள். “நேருவுக்கு காந்தியைத் தாண்டிய தனித்த அடையாளம் உண்டு, ஆனால் அதே நேரத்தில் காந்திக்கு நெருக்கமாக அவரை வைக்காமல் வேறு யாரை வைக்க முடியும்?” என்று நான் வாதிட்டேன். ஒவ்வொரு முறையும் நேருவின் குடும்பம் என்று அவர்கள் சொல்லும்போதும் இடைமறித்து ‘இந்திராவின் குடும்பம்’ என்று திருத்தியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். ஜெர்மனியை நாசிசத்திலிருந்து காப்பாற்றியவர் என்று சர்ச்சிலின் மீது அதீத மதிப்பு என்னுடைய சில ஐரோப்பிய நண்பர்களுக்கு உண்டு. ஆனால் காலனிய ஆதிக்கத்திற்கு உள்ளான ஒரு நாட்டிலிருந்து வந்த நான் சர்ச்சிலை ஒரு மோசமான தலைவராக சித்தரித்தபோது அவர்களின் அடிப்படையிலேயே நான் கைவைத்துவிட்டதாக எண்ணினார்கள். “உலகம் ஐரோப்பாவைச் சுற்றி மட்டும் இல்லை. சர்ச்சிலின் பாசிச எதிர்ப்பு அவருடைய புவியரசியல் கணக்கு தப்பான பிறகே ஏற்பட்டது” என்று சொல்லிவிட்டு, “சர்ச்சிலுக்கும் முன்பாகவே பாசிசத்தின் அபாயத்தை உணர்ந்துகொண்டவர் நேரு,” என்று கிடைத்த கேப்பில் நேருவை உள்ளே இழுத்தேன். அமெரிக்கா, சோவியத், பனிப்போர், பெர்லின் சுவர், அணு ஆயுத போர் அபாயம், இன அழிப்பிலிருந்து தப்பிய யூதர்களின் வாக்குமூலம், மீள்கட்டமைப்பு, நாட்டோ செயல்பாடுகள், அகதிகள் பிரச்னை என்று கடந்த அரை நூற்றாண்டு காலமாக மிகவும் பரபரப்பாக இயங்கும் நகரம் பெர்லின். மேலும் கால் நூற்றாண்டுகளுக்கு ராணுவத் தளங்களுக்கு அருகே வாழ்ந்தவர்கள். எனவே காலனிய அடக்குமுறையை சந்தித்த நாடுகளின் வளர்ச்சியிலும் வரலாற்றிலும் அவர்கள் அக்கறை செலுத்த முடியாத நிலையில் இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆப்பிரிக்காவில் அவர்களின் முன்னோர்கள் இழைத்த அநீதி குறித்த அறிவு பெரிதாக இல்லை என்றாலும், ஹோலோகாஸ்ட் குறித்த குற்றவுணர்ச்சி இன்னும் அவர்களிடம் இருந்தது. நேருவைப் பற்றி சொல்ல சொல்ல ஒருகட்டத்தில் யாருய்யா இந்த நேரு என்று ஆர்வமடைந்தார்கள். “நீங்க நேட்டோ vs வார்சா ஒப்பந்தம்னு பரபரப்பா இருந்தீங்க. மூனாவதா அணிசேரா நாடுகள்னு ஒரு க்ரூப் இருக்கு” என்று விளக்க நேர்ந்தது. ஒரு பாரில் ஒரு ரஷ்ய அரசியல் அறிவியல் நண்பன் காந்தியின் அகிம்சை அணுகுமுறையை விமர்சித்தபோது அவனுடன் ஒரு பஞ்சாபி நண்பன் சேர்ந்துகொண்டு பகத் சிங்கிற்கு இப்படித்தான் காந்தி துரோகம் இழைத்தார் என்று சொல்லத்துவங்கினான். “காந்தி பல தளங்களில் இயங்கினார், பல ஆண்டுகள் வாழ்ந்தார், மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க முடியுமோ என்னவோ. எனவே காந்தி மீது விமர்சனங்கள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு அரை மணி நேரம் காந்தி குறித்து நாம் உரையாடினால், காந்தி குறித்த உங்களின் சில பார்வைகளை என்னால் மாற்ற முடியும், அதே வாய்ப்பு உங்களுக்கும் இருக்கிறது” என்றேன். அந்தப் பஞ்சாபி நண்பன் சென்ற பிறகு ரஷ்ய நண்பன் என்னிடம் “ஏன் மழுப்பினாய்?” என்று கேட்டான். “என்னால் உரையாட முடியும். ஆனால் பிரிவினையின் கோரத்தை அனுபவிக்காத பகுதியிலிருந்து வந்தவன் நான். பிரிவினையில் தன் உறவுகளை இழந்த வடு இன்னும் இருக்கும் ஆள் அவன். கால் நூற்றாண்டு காலமாக எல்லைப் பகுதியில் ராணுவ நடமாட்டத்தின் நடுவில் வளர்ந்தவன். அந்த வடுவைக் கீறும் தைரியம் எனக்கு இல்லை. அவனுக்கு இருக்கும் அனுபவ அறிவும் என்னிடம் இல்லை. பஞ்சாப் இன்றுவரை பிளவுபட்டுத்தான் இருக்கிறது. காந்தியை நான் அவனிடம் வலியத் திணித்தால் அந்த காந்தி அவன் மனதை மேலும் புண்படுத்துவார். ஆனால் ஏதோவொரு புள்ளியில் அவன் காந்தியோடு கோபத்துடன்கூட இணைவான்”, என்றேன். “ஓ இவ்வளவு இருக்கா?” என்றான். “இந்த நக்கினு போன நாட்டைத்தான் நேரு பதினெட்டு வருசம் காப்பாத்தி ஏதோ கரை சேர்த்தார்” என்று மீண்டும் நேரு பக்கம் தாவினேன். “யூரோசென்ட்ரிக்காக இருக்கிறோம் என்று எங்களை சொல்கிறாய். ஆனால் நீ காஷ்மீர் சென்ட்ரிக்காக யோசித்தால் நேருவை இப்படித் தாங்குவாயா?” என்று கேட்டான். ஒரு வினாடி துணுக்குற்று, கண்டிப்பாக மாட்டேன் என்று ஒப்புக்கொண்டேன். “பல நேரங்களில் இந்த அனுபவ அறிவின் போதாமைதான் நம் உலகத்தை சுருக்குகிறது. எங்கள் நாட்டில் இடஒதுக்கீட்டின் மீது நேருவுக்குத் தட்டையான புரிதல் இருந்தது. அந்தப் புரிதலின்மைக்குக் காரணம் அனுபவ அறிவின்மைதான்” என்றேன்.<br />
<br />
ஒருகட்டத்தில் நண்பர்கள் “போதை தெளியவேண்டும், கொஞ்சம் நேரு பற்றி சொல்லேன்” என்று கலாய்க்கத் துவங்கினார்கள். கடந்த மூன்று மாதங்களாக நேருயும் காந்தியும் ஒரு தொடர்பற்ற எண்ணச்சிதறலாக அவ்வப்போது மனதில் வந்துபோகிறார்கள் (இந்தப் பதிவே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது). பெரியாரும் அடிக்கடி வந்துபோகிறார் (அது இன்னொரு பதிவில். “தமிழ்நாட்டில் சிலருக்கு மாஸ்கோ என்று பெயர் இருக்கிறது தெரியுமா?” என்று சொன்னபோது ரஷ்யாகாரன் வாயைப் பிளந்தான்).<br />
<br />
நேருவுக்கு நீங்காத தேவை இருக்கிறது; இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்கும். அவரைக் கைவிடுவது வருங்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி.<br />
<br />
#NehruDeathAnniversary<br />
<br />
டான்ஸ் பெர்பாமன்ஸ் எல்லாம் செய்து வைத்திருந்தேன். தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தாலும் (குறிப்பாக சூப்பர் ஓவர் கணக்காக சஸ்பென்ஸ் வைத்த டாக்டர் திருமாவளவன்), வடக்கில் அடித்த பெரும்பான்மை அந்த பெர்பாமன்சுக்கு ஆப்படித்துவிட்டது. அடுத்த தேர்தலில் அந்த டான்ஸ் ரீலீஸ் ஆகவில்லை என்றால் அதற்கு நேருதான் காரணம். சம்பந்தமே இல்லாமல் எது எதற்கோ பழி சுமக்கும் நேரு இதற்கும் சுமக்கட்டும்.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-39328312235848833772018-11-11T17:36:00.000+05:302020-05-18T23:54:33.772+05:30என்னியோ மாரிகோனி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சில பாடல்களைக் கேட்கும்போது, சில படங்களைப் பார்க்கும்போது டைம் டிராவல் செய்ய வேண்டும் என்ற இச்சை கட்டுக்கடங்காமல் வரும். ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் டைட்டில் கார்டை என் 15 இன்ச் லேப்டாப்பில் பார்த்தபோது என்னத்துக்குடா லேட்டா பொறந்த என்று கடுப்பாக இருந்தது. 1968ல் பெரிய திரையில் அந்த டைட்டில் ஓடும்போது கூட்டத்தோடு கூட்டமாக நானும் வாயைப் பிளந்தபடி நுகர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல் சில பாடல்களைக் கேட்கும்போது "இதை ரிக்கார்டிங் ரூமில் நூறு வாத்தியங்கள் முழங்க உருவாக்கும்போது கூட இருந்திருக்க வேண்டும்" என்று தோன்றும். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் 'நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா' பாடலை எப்பொழுது கேட்டாலும் டைம் டிராவல் செய்து அதன் ரிக்கார்டிங்கைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கமாக இருக்கும்.<br />
<br />
அதேபோல்தான் <a href="https://youtu.be/hN1bJqU50iA" target="_blank"><b>இந்தப் பாடல்</b></a>. பேரரக்கன் என்னியோ மாரிகோனி போட்ட இசை. கில்பில் படத்தின் என்ட் கார்டில் 'நவஜோ ஜோ' என்று ஒரு படத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கவே, சரி பார்ப்போமே என்று பார்த்தேன். அது நவஜோ இல்லை, நவஹோ என்ற தகவலைத் தவிர அத்திரைப்படத்தில் எனக்கு வேறு எதுவும் உருப்படியாக இல்லை. ஹீரோ பர்ட் ரெனால்ட்ஸ், இயக்குனர் செர்ஜியோ கார்புச்சி பற்றியெல்லாம் பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஆனால் ஒன்றே ஒன்று. படத்தின் இசை தாறுமாறாக இருந்தது. என்னியோ மாரிகோனியின் நவஹோ ஜோ இசையை கில்பில் படத்தில் டரன்டினோ பயன்படுத்தியிருந்ததால் என்ட் கார்டில் கிரெடிட் கொடுத்திருந்தார். அந்த கார்டைப் பார்த்துதான் நான் இந்த இசையைக் கண்டடைந்தேன். இரவு நேரத்தில் நெருப்பைச் சுற்றி கூட்டமாக உட்கார்கிறோம். அந்தக் கூட்டத்தின் மூத்த தாத்தா ஒருவர் "அந்தக் காலத்துல நவஹோ ஜோன்னு நம்ம முப்பாட்டன் வாழ்ந்தான், அவனுடைய புகழை இப்போது பாடப்போகிறேன்" என்று ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? அந்த உணர்வை இப்பாடல் தரும். நவஹோ ஜோவின் காவியம் துவங்கப்போகிறது, கேளுங்கள் என்று இசை ஆரவாரமாகத் துவங்கும் (படம் அவ்வளவு பெரிய காவியம் எல்லாம் இல்லை. ஆனால் எபிக் இசை என்றால் இதுதான்).<br />
<br />
இந்தப் படத்தில் 'டெத் ஆஃப் பார்பரா அன்ட் தி ரிட்டர்ன் ஆஃப் ஜோ' என்று ஒரு இசை இருக்கும். அதைத்தான் கில்பில்லில் டரன்டினோ உபயோகித்திருந்தார். ஒரு நாள் ஹாஸ்டலில் தூங்கிக்கொண்டிருந்தபோது என் பஸ் ஆக்சிடன்ட் சம்பவம் கனவாக வந்து நடுராத்திரியில் அடித்தெழுப்பியது. தூக்கிவாரிப்போட்டபடி எழுந்தேன். சட்டென்று உயிர் பயம் கட்டுக்கடங்காமல் எகிற, லைட்டைப் போட்டு "எனக்கு ஏதேனும் ஆகிவிட்டால், அடக்கம் செய்வதற்கு முன் இந்த இசையை ஒலிக்கவிடுங்கள்" என்று எழுதினேன். இப்பொழுது அதைப் படிக்க எப்படி இருக்கிறதோ, ஆனால் அப்பொழுது வந்த அந்த அட்ரீனலின் கார்டிசால் ரஷ் நிஜம். அந்த இசை என் ஊர்வலத்தில் ஒலித்தே ஆகவேண்டும் என்ற இச்சைதான் எல்லாவற்றையும் விட முன்னே நின்றிருக்கிறது. அதுவே அந்த இசையை எனக்கு மிகவும் நெருக்கமானதாக ஆக்குகிறது (இசை வேண்டுவோர் கூகுளில் தேடவும்).<br />
<br />
இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால், என் அரக்கர் குல திலகம் என்னியோ மாரிகோனி நேற்று 90வது வயதைத் தொட்டிருக்கிறார். இந்தக் குலசாமி புண்ணியத்தில்தான் சொந்தமாக பக்கர் விசில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இவரும் பீட்டர் டிராவிசும் இணைந்து உருவாக்கிய பாடல்களை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எங்கோ சம்பந்தமில்லாத ஒரு நாட்டில் உள்ள 90 வயது தாத்தாவின் உள்ளங்கையை முத்தமிடத் தோன்றுகிறது. இந்தாள் சேர்த்து வைத்திருப்பது உலகம் முழுவதிலுமிருந்து வந்தபடி இருக்கும் இந்த முத்தங்களைத்தான். மற்றபடி இவர் அரிதாக வாயைத் திறக்கும்போது விடும் லூஸ் டாக்கை ஞானச் செருக்காகக் கருதி விட்டுவிட வேண்டும். லுங்கா வீட்டா அல் மாய்ஸ்த்ரோ! ப்வான் காம்ப்ளியானோ _/\_</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-69345771420436948452018-11-07T17:33:00.000+05:302020-05-18T23:54:15.630+05:30மேஜர் தம்பி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தம்பிக்கு இன்றோடு 18 வயதாகிறது. திடீரென்று சென்ற மாதம் “வோட்டர் ஐடி ரெஜிஸ்டர் பண்ணணும், கூட வா” என்று அவன் கூப்பிட்டபோது மலைப்பாக இருந்தது. ஒன்னாங்கிளாஸ் படிக்கையில் டீச்சர் ஒவ்வொருவராக எழுப்பி எத்தனை அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராக எழுந்து இரண்டு அக்கா என்றோ, ஒரு தம்பி என்றோ சொல்லி உட்கார்ந்தனர். எனக்கு அது என்னமோ மார்க் போலத் தோன்றியதோ என்னவோ, என் முறை வந்ததும் எனக்கு யாரும் கூட இல்லை என்று அழுதுகொண்டே சொன்னேன். மொத்த கிளாசும் சிரித்ததும், அதை வீட்டிற்கு வந்து விசும்பிக்கொண்டே சொன்னதும் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.<br />
பிறந்த நாள் பரிசாக இரண்டு புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். “உனக்குள் இருக்கும் சிறுவனுக்கு” என்று எழுதி ‘Diary of a Wimpy Kid'-டின் புதிய புத்தகம் ஒன்று. சிறு வயதிலிருந்தே அவன் அப்புத்தகத்தை வாங்கி சேமித்துக்கொண்டிருக்கிறான். இது பதினொன்றாவது புத்தகம் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகமாக எதைக்கொண்டுக்கலாம் என்று எனக்கு யோசிக்க அவசியமே இருக்கவில்லை. இதை இவ்வளவு தாமதமாக வாசித்துவிட்டோமே, அது சற்றே சீக்கிரம் என் கைக்கு வந்திருக்கலாமே என்று அடிக்கடி ஒரு புத்தகத்தை நினைத்து வருந்துவேன். அது, டாக்டர் அம்பேத்கர் எழுதிய 'Annihilation of Caste'. “உனக்குள் இருக்கும் வளர்ந்தவனுக்கு” என்று எழுதி அதைப் பரிசளித்திருக்கிறேன். ஆதிக்க அடையாளங்களைக் கிட்டத்தட்ட அவன் ஏற்கனவேயே துறந்துவிட்டான். ஆனால் அவ்வடையாளத்தைத் துறப்பதோடு நிற்காமல், எவ்வாறு அவை கொடுக்கும் சலுகைகளையும் நிராகரிக்கவேண்டும், ஒத்துணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்புத்தகம் அவனுக்கு வழிகாட்டலாம். மேலும் இந்திய சமூகம் குறித்த பார்வையை அளித்து அவன் அதில் எங்கிருக்கிறான் என்பதை உணர்த்தலாம். 18 வயதில் நான் தவறவிட்ட புத்தகம், அவன் படிக்கட்டும் என்ற ஆசையில் கொடுத்திருக்கிறேன்.<br />
<br />
“18 வயசு ஆயிடிச்சு, அடல்ட் படத்துக்குப் போகப்போறேன், எவனும் என்னைத் தடுக்க முடியாது!” என்று இன்று வடசென்னை போனான். இவன் பால் வடியும் முகத்தைப் பார்த்து தடுத்து நிறுத்தி ஐடி கார்டைக் காட்டு என்றிருக்கிறார்கள். இன்னிக்கு பர்த்தே ப்ரோ என்று இளித்தபடி ஐடி கார்டை நீட்ட, “அட, ஹேப்பி பர்த்தே” என்று உள்ளே அனுப்பிவிட்டார்கள். “At lastttt!" என்று தியேட்டருக்குள்ளிருந்து ஏக மகிழ்ச்சியாக மெசேஜ் அனுப்பினான் (இரண்டு வாரங்களுக்கு முன்பு போனான், போடா சின்னப்பையா என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்).</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-26245569297695016652018-10-30T17:26:00.000+05:302020-05-18T23:54:06.179+05:30எலிமென்டரி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img alt="Jonny Lee Miller for CBS Watch - Oh No They Didn't!" height="360" src="https://external-content.duckduckgo.com/iu/?u=https%3A%2F%2Fi.imgur.com%2FjYpNIF8.gif&f=1&nofb=1" width="640" /></div>
<br />
<br />
<br />
அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எலிமென்டரி' ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலும், பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷெர்லாக் சீரியலும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கின. அதனாலோ என்னவோ, இரண்டையும் ரசிகர்கள் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். எனக்கு இவை இரண்டையும் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகத்தில் இயங்குபவை. தனிப்பட்ட அளவில் எனக்கு பெனடிக்ட் கும்பர்பேட்ச் சிறந்த ஷெர்லாக்காகத் தெரிந்தாலும், எலிமென்டரி சீரியலில் வரும் சில காட்சிகளும் தருணங்களும் பிபிசி சீரியலைப் போகிற போக்கில் தூக்கி சாப்பிட்டு விடும். பிபிசி ஷெர்லாக் ஒரு ஹீரோ. ஆனால் எலிமென்டரி ஷெர்லாக் நம்மைப் போன்ற ஒருவன்; போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீள்பவன்; அவனுக்கும் உடல் உபாதைகள் வரும்; சக மக்களோடு சேர்ந்து பயணிக்கும் நிர்பந்தம் இருக்கும். இவற்றையெல்லாம் செய்தும்கூட அவன் ஒரு டிபிக்கல் ஷெர்லாக்காகவும் இருப்பான். அவ்வாறு இருக்க முயன்று இயல்பாகக் கஷ்டப்படுவான்;அதன் பாதிப்புகளை அனுபவிப்பான்.<br />
<br />
எலிமென்டரியை நான் ஒரு சைக்கலாஜிக்கல் டிராமாவாகத்தான் வகைப்படுத்துவேன். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு கேஸ், பல உப்புசப்பில்லாதவை என்று குறை இருப்பினும், கதையை முன்நகர்த்தும் காட்சிகள் மிகமிக அழுத்தமாக இருக்கும். அவை ஆரவாரத்துடன் இருக்காது, மாறாக மெலிதாக வருடியபடி நம்மை உள்முகமாகத் திரும்ப வைக்கும். ஷெர்லாக் மற்றும் அவனுடைய பிரதான எதிர்ப்பாத்திரம் இரண்டுமே சாதாரண மனிதர்கள் என்பது, ஆச்சரியமாக கதையை சப்பையாக்காமல் இன்னும் சுவாரசியமாகவே ஆக்கும். ஷெர்லாக்குக்கும் மொரியார்டிக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்பது காட்சியளவில் மிகமிகக் குறைவாக இருந்தாலும், அந்த இருவரின் இருப்பு என்பது நம்மோடு கூட வந்துகொண்டே இருக்கும். போதைப் பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகள் பற்றி ஷெர்லாக்கின் மூலமாகவே உணர்ந்துகொள்ளும்போது அவற்றை நாம் சீரியசாக எடுத்துக்கொள்கிறோம். ஷெர்லாக்கின் மூளையே பாதிக்கப்படும்போது நம்முடைய மூளையெல்லாம் எம்மாத்திரம் என்ற நிதானத்தை ஷெர்லாக் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் வழங்கலாம். எனக்கு வழங்கியது. சர் இயான் மெக்கல்லன் நடித்த மிஸ்டர் ஹோம்ஸ் திரைப்படமும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. "ஆளானபட்ட ஷெர்லாக்குக்கே வயதாகிறது, நீயெல்லாம் எம்மாத்திரம்?" என்று ஒரு போஸ்டரை நான் உருவாக்கி என் அறையில் ஒட்டிவைத்திருக்கிறேன். ஷெர்லாக்கை மாடர்ன் உலகத்திற்கு ஏற்றார்போல் அட்டகாசமான திரைக்கதையோடு உருவாக்கியது பிபிசி சீரியல் என்றால், ஷெர்லாக் என்னும் மனிதனோடு பயணிக்கும் ஒரு மிகச்சாதாரணமான எளிமையான தொடர் எலிமென்டரி.<br />
<br />
எலிமென்டரி எபிசோடுகள் குறித்து மைல்ஸ் மெக்னட் என்பவர் உளவியல் திறனாய்வு செய்து அருமையான விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். எலிமென்டரி ரசிகர்கள் கூகுளில் தேடவும். குறிப்பாக டயபாலிக்கல் கைண்ட் என்னும் எபிசோடுக்கு எழுதிய விமர்சனத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். எலிமென்டரி சீரியல் மீது என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்ததற்கு அந்தக் கட்டுரையும் ஒரு முக்கியக் காரணம். சில அலுவல்கள் காரணமாக நான் சீசன் நான்கு வரைதான் பார்த்திருக்கிறேன். கடைசியாக சென்ற ஆண்டின் துவக்கத்தில் பார்த்தது. இன்னும் இரண்டு சீசன்கள் மீதம் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அந்த டயபாலிக்கல் கைன்ட் எபிசோடில் ஷெர்லாக் ஒரு பெண்ணுக்குக் கடிதம் ஒன்று எழுதுவான். யார் அந்தப் பெண் என்று தயவுசெய்து தேடாதீர்கள். அது தெரிந்தால் எலிமென்டரி பார்ப்பதில் அர்த்தம் சற்றே குறையும். கூகுளில் அறிவே இல்லாமல் அதை முதல் வாக்கியத்திலேயே வேறு போட்டிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தை சென்ற வருடம் தமிழில் மொழிபெயர்த்தேன். இன்று அதைக் <a href="https://www.youtube.com/watch?v=SH-e469Bxo4" target="_blank"><b>காணொளியாக வெளியிடுகிறேன்</b></a>. சத்தமே இல்லாமல் என் இதயத்தில் குடிகொண்ட சீரிஸ் இந்த எலிமென்டரி. அதனால்தானோ என்னவோ, பிரேக்கிங் பேடை விட, நியூஸ் ரூமை விட எலிமென்டரியை ஒருபடி மேலாகவே நான் வைத்திருக்கிறேன், மேற்சொன்ன சீரிஸ்களின் திரைக்கதைகளின் கால் தூசி கூட எலிமென்டரி பெறாது என்றாலும். எலிமென்டரி வழி தனி வழி. ஜானி லீ மில்லர் நடிக்கும் ஷெர்லாக் அனைவருக்குமான ஷெர்லாக் அல்ல. கும்பர்பேட்ச் போல இவன் எல்லோரையும் கவர மாட்டான். ஆனால் அவனுக்கான இடம் என்ற ஒன்றை உங்களுக்குள் அவனே உருவாக்கிக்கொள்வான்.<br />
<br />
I love this Sherlock!</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-45222868325496987402018-10-30T17:22:00.000+05:302020-05-18T23:53:38.982+05:30மன்னிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மன்னிப்பு கேட்பதற்கு மிகவும் அருகில் வந்தது சிவக்குமார்தான். மற்ற அபாலஜிக்கள் எல்லாம் அபாலஜியே கிடையாது.<br />
<br />
1. தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் (நிபந்தனை வைத்தல்)<br />
2. உண்மைக்குப் புறம்பாக இருப்பின் பகிர்ந்தது தவறுதான்.<br />
3. பெருவாரியானவர்கள் தவறு என்று நினைப்பதால் மன்னிப்பு கேட்கிறேன் (சிவக்குமார்)<br />
4. என் செயல்களுக்கு வருந்துகிறேன் (மறைமுகப் பொறுப்புத் துறப்பு).<br />
5. தவறுகள் நடப்பது இயற்கை, ஆகவே... (நீர்த்துப்போகச்செய்தல்)<br />
6. என்னையறியாமல் புண்படுத்திவிட்டேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்று நினைக்கவில்லை (தான் சரியாகத்தான் பேசினேன் என்று முட்டுக்கொடுத்தல்).<br />
<br />
கடைசியாக சிவக்குமார் 'வெரி சாரி' என்றார். அதுதான் அபாலஜி. மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் அந்தப் பையனின் முடிவு. அந்த 'வெரி சாரி' ஆனால் அரிய நிகழ்வு.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-41418133262310084202018-09-30T17:19:00.000+05:302020-05-18T23:53:25.270+05:30அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="margin-left: 1em; margin-right: 1em;">
<img height="360" src="https://ubistatic19-a.akamaihd.net/resource/en-us/game/assassins-creed/ac-origins/ac_news_announce-keyartt-thumb-ncsa_292590.jpg" width="640" /></div>
<br />
<br />
<br />
'அசாசின்ஸ் க்ரீட்' வீடியோ கேம் சீரிசில் கடைசியாக வந்த ‘அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்’ வீடியோ கேமை இப்பொழுதுதான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. அசாசின்ஸ், டெம்ப்ளார்ஸ் என்று இரண்டு எதிரெதிர் குழுக்கள் உலகம் முழுவதும் காலம் காலமாகப் போரிட்டு வருகின்றன. இரண்டுமே அமைதியை விரும்புபவை, ஆனால் வழிமுறைகள் வெவ்வேறு. ஒழுங்கின் மூலமாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று டெம்ப்ளார்கள் அதிகாரத்தைக் குவிப்பார்கள். இல்லை, கட்டற்ற சுதந்திரத்தின் மூலமாகவே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று அசாசின்கள் அதிகார பீடங்களைத் தகர்த்துக்கொண்டே இருப்பார்கள். இந்த அசாசின் குழு எப்படி உருவானது என்று சொல்லும் கேம்தான் இந்த ஒரிஜின்ஸ். 2007-ல் முதல் கேம் வந்தது. பத்து வருடங்கள் கழித்து பத்தாவது மெயின்ஸ்ட்ரீம் கேமாக ஒரிஜின்ஸ் வந்திருக்கிறது. இதற்கு முன்பு கடைசியாக வெளிவந்த யூனிட்டி (ப்ரெஞ்சுப் புரட்சி காலம்) மற்றும் சிண்டிகேட் (தொழிற்புரட்சி காலம்) சரியாக ஓடவில்லை (எனக்கு யூனிட்டி மிகவும் பிடித்தது, ஆனால் டெக்னிகல் பிரச்னைகள் நிறைய வந்து விளையாடும் மூடை ரொம்பவே கெடுத்தது). போச்சு, அசாசின்ஸ் க்ரீட் கேம் அவ்வளவுதான் என்று எல்லோரும் கைவிட்ட நிலையில் ஒரிஜின்ஸ் மூலம் பலத்த ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறது அ.கி.<br />
<br />
கதை தெரியவேண்டாம் என்று நினைப்பவர்கள் இப்பதிவைத் தவிர்க்கவும். <b>*ஸ்பாய்லர் அலர்ட்*</b><br />
<br />
பரவலான மக்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த கேமை இருப்பதிலேயே சிறந்த அசாசின்ஸ் க்ரீட் கேம் என்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இரண்டாம் பாகத்தில் வந்த ஹீரோவான எட்சியோவுக்குப் பிறகு இந்த கேமின் கதாநாயகன் பாயக் அனைவரையும் கவர்ந்திருக்கிறான். கிமு 47ல் சீவா என்றொரு கிராமத்தின் தலைவனாக பாயக் இருக்கிறான். எகிப்தின் காவலன் என்று மன்னன் டாலமியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவன். அவன் ஊரில் உள்ள அமுன் கோயிலுக்குள் விலைமதிப்பில்லாத பொருள் ஒன்று இருக்கிறது என்று ஒரு கூட்டம் வருகிறது. வழியில் இருப்பவர்களையெல்லாம் கொன்றபடி அது கோயிலுக்குள் செல்கையில் தெரியாத்தனமாக பாயக்கின் குட்டிப்பையன் வழியில் வந்துவிட, அவனையும் கொன்றுவிடுகிறார்கள். அலறியபடி அவர்களை வெட்ட பாயக் போக, அவனை அடித்துப்போட்டு சென்றுவிடுகிறார்கள்.<br />
<br />
யார் என் மகனைக் கொன்றது என்று பாயக் வெறிபிடித்து அலைகிறான். தன் மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று மனைவி அயாவோடு சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறான். யாரோ கொள்ளையர்கள் அவன் மகனைக் கொல்லவில்லை, பெரும் சக்திவாய்ந்த ஒரு கூட்டம் அது என்று உணர்ந்து ஐந்து தலைவர்களை அடையாளம் காண்கிறான். அவனும் அயாவும் இணைந்து ஐவரையும் கொல்கிறார்கள். அப்பொழுதுதான் ஒரு உண்மை அவர்களுக்குத் தெரிகிறது. அந்த ஐவரும் கீழ்மட்டத் தலைமைகள். ஆக்டோபஸ் கரங்களைப் போல் அதிகாரம் மேலே செல்கிறது என்பதை உணர்கிறார்கள். அப்பொழுது அயா க்ளியோபாட்ராவின் சேவகராகப் பணி புரிந்துகொண்டிருக்க, அயாவின் மூலமாக பாயக் க்ளியோபாட்ராவை சந்திக்கிறான். யார் இந்தக் கூட்டம் என்று க்ளியோபாட்ரா அவர்களுக்கு விளக்குகிறாள். தி ஏன்ஷியண்ட் ஒன்ஸ் என்னும் இந்தக் குழு, அதிகாரத்தைத் தன்வசம் வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யும், இந்தக் கூட்டம் தன் சகோதரன் மன்னன் டாலமியைக் கைப்பாவையாக வைத்திருக்கிறது, டாலமியை வீழ்த்தித் தான் ராணியாக வேண்டும், அதற்கு பாயக் மற்றும் அயாவின் உதவி வேண்டும் என்கிறாள் க்ளியோபாட்ரா. மேல்கட்டத் தலைவர்கள் நான்கு பேரைக் காட்டி கொன்றுவரும்படி பணிக்கிறாள். பாயக் அவர்களைக் கொல்கிறான். முக்கியத் தலைவர்கள் கொல்லப்படுவதை அறிந்து உஷாரான ஏன்ஷியண்ட்ஸ் குழு, க்ளியோபாட்ராவைக் கொல்ல நெருங்க, க்ளியோபாட்ராவுக்கும் டாலமிக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் மூள்கிறது. இந்நிலையில் அயா மிகவும் ஆர்வத்துடன் க்ளியோபாட்ராவிற்கு சேவை செய்வதைக் கண்டு பாயக் அவளை எச்சரிக்கிறான். “நம் மகனைக் கொன்றவர்களைக் கொல்வது மட்டும்தான் நம் வேலை, வீணாக இதில் மனதைப் பறிகொடுக்காதே”, என்கிறான். ஆனால் அயாவோ “க்ளியோபாட்ரா நம் ராணி, நமக்காக உதவுகிறாள்”, என்று கடல் கடந்து ரோமாவின் தளபதி பாம்பேயின் உதவியை நாடுகிறாள். ஆனால் அந்த நேரத்தில் ரோமாவில் நடந்த உள்நாட்டு யுத்தத்தால் பாம்பேய் ஜூலியஸ் சீரரின் ஆட்களால் கழுத்தறுபட்டுக் கொல்லப்படுகிறான். எனவே சீசரை விட்டால் வழியில்லை, அவனை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று க்ளியோபாட்ரா கேட்க, பாயக்கும் அயாவும் அவளை ஒரு சாக்குமூட்டைக்குள் கிடத்தி டாலமியின் காவலர்களை ஏமாற்றி சீசரிடம் சேர்க்கிறார்கள். டாலமி முன்பு ஒப்பிடுகையில் க்ளியோபாட்ராவிற்கு ஆளும் தகுதி அதிகம் என்று சீசர் உணர்ந்துகொள்ள, க்ளியோபாட்ராவிற்கு ஆதரவு தருகிறான். டாலமி கொல்லப்படுகிறான், க்ளியோபாட்ரா எகிப்தின் மகாராணி ஆகிறாள்.<br />
<br />
இந்த நிலையில் தன் மகனைக் கொன்றது யார் என்று பாயக்கிற்குத் தெரிய வருகிறது. ஏன்ஷியன்ட்ஸ் குழுவின் தலைவனான அவனை பாயக் கொல்லப்போக, கடைசி நிமிடத்தில் சீசரால் அவன் காப்பாற்றப்படுகிறான். அவன் சீசரின் ஆள் என்று அப்பொழுதுதான் பாயக்கிற்குத் தெரிகிறது. அயா க்ளியோபாட்ராவின் உதவியை நாட முற்படுகிறாள், ஆனால் க்ளியோபாட்ரா அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. ராணி ஆகிவிட்டாள், இனி நம் உதவி தேவையில்லை என்று உதறிவிட்டாள் என்று பாயக்கிற்கும் அயாவிற்கும் உறைக்கிறது. தமக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதை உணர்கிறார்கள். அதிகாரம் கிடைக்கும்வரை மக்களுக்காகப் பேசுகிறார்கள், அதிகாரம் கைக்கு வந்தவுடன் போதை தலைக்கேறி மீண்டும் மீண்டும் வரலாறு திரும்பிக்கொண்டே இருக்கிறது என்று மனம் வெதும்புகிறார்கள். தன் மகன் இனிமேல் வரமாட்டான், பழிவாங்குவதில் அர்த்தமில்லை என்று பாயக் உணர்கிறான். அதே நேரத்தில் தன் மகனுக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நேரக்கூடாது என்று ஏன்ஷியண்ட்ஸ் குழுவை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறான். தன் மகனைக் கொன்றவனைத் தேடிப் போய் கொல்கிறான். அப்பொழுதுதான் தெரிகிறது, இந்தக் குழுவைத் துவக்கியது ஜூலியஸ் சீசர் என்று.<br />
<br />
இந்தக் குழுவின் கரம் சீசர் வரை செல்கிறது என்று தெரியவரும்போது நிலைமையின் தீவிரத்தை பாயக்கும் அயாவும் உணர்ந்துகொள்கிறார்கள். “இனி நமக்கு சாதாரண வாழ்க்கை என்பதே கிடையாது. நாம் தொலைதூரம் கடந்து வந்துவிட்டோம். நம் மகன் இறந்துவிட்டான். ஆனால் நமக்கு உலகத்தில் பல மகன்கள் இருக்கிறார்கள், அவர்களைக் காப்பதே இனி நம் கடமை. அதிகாரம் குவிக்கப்படும் இடங்களிலெல்லாம் நம் குழு இருக்கவேண்டும், அதற்காக இருவரும் உழைப்போம். இனி நான் உன் கணவன் இல்லை”, என்று பாயக் அயாவிடம் சொல்ல, “நானும் க்ளியோபாட்ராவை மிகவும் நம்பிவிட்டேன். ஒரு தலைமையைத் தகர்த்தால் இன்னொரு தலைமை அதையே செய்கிறது. தவறு செய்துவிட்டேன். இனி என் பயணமும் உன்னுடனே. இனி நீ என் கணவன் இல்லை, இருவரும் அசாசின்ஸ். நமக்குள் இனி லௌகீக உணர்ச்சிகள் கிடையாது. அயா இறந்துவிட்டாள். இனி என் பெயர் அமூநெட்” என்று அயா அவனைப் பிரிகிறாள். சீசரைக் கொல்ல வேண்டும் என்று ப்ரூட்டஸின் உதவியை நாடுகிறாள். பாம்பேய் கொல்லப்பட்ட நிலையில் சீசர் ரோமாவின் சக்கரவர்த்தி ஆகி ஜனநாயகத்தை அழிக்கக் காய் நகர்த்தி வருவதாக ப்ரூட்டஸ் சொல்கிறான். இருவரும் ரோமா செல்கிறார்கள். செனட் கூட்டத்தில் சீசர் தன்னை சக்கரவர்த்தி ஆக்கும்படி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டு இருக்கும்போது அயாவும் ப்ரூட்டசும் அவன் ஆட்களும் கத்தியோடு பாய்கிறார்கள். முதலில் அயா குத்துகிறாள், பிறகு ப்ரூட்டஸ் சீசரை மாற்றி மாற்றிக் குத்துகிறான். “உன் அதிகார போதைதான் இந்த முடிவுக்குக் காரணம்” என்கிறான். “யூ டூ ப்ரூட்டஸ்” என்று சீசர் நிலைகுலைந்து வீழ்கிறான். அயா ரோமாவிலேயே தங்கிவிடுகிறாள். பாயக் எகிப்தில் தன் குழுவை வளர்க்கும் பணியில் ஈடுபடுகிறான். ரோமாவில் அப்பொழுது தங்கியிருக்கும் க்ளியோபாட்ராவை அயா சந்தித்து “நீயும் மக்களை ஏமாற்றினால் உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று எச்சரித்து க்ளியோபாட்ராவின் பார்வையிலிருந்து மறைகிறாள். இப்படியாகக் கதை முடிகிறது.<br />
<br />
2008-ல் வெளிவந்த அசாசின்ஸ் க்ரீட் இரண்டாம் பாகத்தில் ஒரு தகவல் வரும். க்ளியோபாட்ரா அமூநெட் என்னும் அசாசினால் கொல்லப்பட்டாள், என்பதே அந்தத் தகவல். க்ளியோபாட்ரா சாவதற்கு பத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக இந்தக் கதை முடிகிறது. ஆக அடுத்த ஒரிஜின்ஸ் பாகத்தில் மார்க் ஆண்டனியோடு இணைந்து க்ளியோபாட்ரா நடத்தும் எதேச்சதிகாரத்தை அசாசின்கள் எதிர்ப்பார்கள் என்று நம்பலாம். விட்சர்-3 கேமிற்குப் பிறகு இவ்வளவு பெரிய ஒரு உயிருள்ள உலகை நான் பார்க்கவில்லை (ஹொரைசான் ஜீரோ டான் என்றொரு கேம் இருக்கிறது, அது தனிக்கதை). சூழலும் இசையும்(சாரா ஷாக்னர் இசை) கச்சிதமாகப் பொருந்தி நம்மை 2000 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச்செல்கிறது. பாயக்கும் அயாவும் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் ஆகிவிட்டார்கள். சென்ற வாரம் பதினொராவது கேம் வந்திருக்கிறது, கிமு ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்கத்தில் நடக்கும் கதை. ஒடிசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதை இப்போதைக்கு விளையாட முடியாது. Origins is the best Assassin's Creed game yet! யூனிட்டி மற்றும் சிண்டிகேட் கொடுத்த நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டு ஒரு வருடம் கூட எடுத்துக்கொண்டு பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் யூபிஐசாப்ட் நிறுவனத்தார். Super comeback! கேமர்கள் அவசியம் விளையாடவேண்டிய கேம் இது.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-74773977495996652012018-09-28T17:17:00.000+05:302020-05-18T23:52:44.917+05:30அய்யப்பனும் Heteronormativity-யும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான் பார்த்து வியக்கும் சில நண்பர்கள் “என்ன அய்யப்பா, இனிமே ஜாலியா?” போன்ற பதிவுகளை ஷேர் செய்யும்போது சற்றே வருத்தமாக இருக்கிறது. Heteronormativity என்று இதற்குப் பெயர். அதாவது அய்யப்பனை ஓர்ப்பால் ஈர்ப்புள்ளவராகக் கற்பனை செய்ய முடியாது என்ற எண்ணத்தை நம்மை அறியாமல் மறைமுகமாகக் கடத்துவது. பாலின சிறுபான்மையினருக்கு இந்த ‘ஜாலியா’ போஸ்ட் சற்றே அசவுகரியத்தைக் கொடுக்கும். இன்றைய சபரிமலைத் தீர்ப்பு எனக்கு உண்மையில் கலவையான உணர்வுகளைத் தந்திருக்கிறது. வழக்கிற்கு சம்பந்தமில்லை என்றாலும் இந்தப் பிரச்னையில் பாலின சிறுமான்மையினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இணைத்தே பார்க்கிறேன். LGBTQA+ சமூகம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும். ஏனெனில் ஒரு விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒரு கடவுளைத் தங்களுடையதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள் என்றால், அந்த முனைப்பிற்கு சமூக-அரசியல் நியாயங்கள் இருக்கின்றன. அந்த நியாயத்தை உணர வேண்டும். குறைந்தபட்சம் லிபரல்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாவது அதை உணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. ஏனெனில் இது ஆண்-பெண் இருதுருவப் பிரச்னையாக முடிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். நூறு வருடங்கள் கழித்து, "அவர் ஒரு queer God, பக்தியில் LGBTQA+ பரிமாணம் ஒன்று இருக்கிறது” என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அப்பொழுது உயிருடன் இருக்கும் என் சந்ததியினர் இந்தத் தீர்ப்பைத் தூசிதட்டிக் கேள்வியெழுப்பவேண்டும் என்றே விரும்புகிறேன். சபரிமலை செல்லவேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு தங்களின் உதிரம் தீட்டாகப் பார்க்கபடுகிறது என்ற கோபம் இருக்கிறது. அவர்களிடத்தில் queer God வாதத்தை நான் கட்டாயம் வைக்க மாட்டேன். அது தவறான பூட்டை ஆட்டுவதற்கு ஒப்பானது. குறைந்தபட்சம் பாலின சிறுபான்மையினரின் குரல்களையும் விருப்பங்களையும் மறைமுகமாக அடிக்கும் இதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்கலாம் என்று கருதுகிறேன். "புத்திய காட்டிட்ட பாத்தியா, நீயாடா இப்படி ஷேர் பண்ண" என்று உங்கள் பாலின சிறுபான்மையின நண்பர் கேட்க ஒரு நிமிடம் ஆகாது.<br />
<br />
It's a historic judgement.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-29625644907863302912018-08-29T17:14:00.000+05:302020-05-18T23:52:32.447+05:30ஹீலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாக்கு சுரசுரப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இயற்கை மருத்துவத்தின் மூலம் வெறும் மூன்றே மூலிகைகளை வைத்து சரிசெய்துவிடலாம்.<br />
<br />
முதலில் இரண்டு வில்வக் காம்புகள் தேவைப்படும். கடைக்கு சென்று தந்தநேரிக் காம்பு என்றோ தந்தநேரி வில்வக்கட்டை என்றோ கேட்கவும். கொடுப்பார்கள். அந்த வில்வக்காம்பின் நுனியில் இரண்டு தேக்கரண்டி புலிநெய்யைத் தடவ வேண்டும். வெள்ளைப்புலி நெய்யாக இருந்தால் கூடுதல் சிறப்பு. முடிந்தவரை தடவுவதற்கு அலுமினியக் கரண்டிகளைத் தவிர்த்து இளநீர் சுரட்டையை உபயோகித்தால் அதில் இருக்கும் கரிவிந்துவானது வெள்ளைப்புலி நெய்யோடு சேர்ந்து முறத்றால் புரோட்டீனை உருவாக்கும். அந்த முறத்றால் புரோட்டீன் வில்வக்காம்பின் நுனியில் படுகையில் முறோடைட் டையாக்சைடு என்றொரு துர்நாற்ற வாயு வெளிப்படும். அந்த நாற்றத்தைப் பார்க்காமல் கசப்பு மருத்தென நினைத்து நுகருங்கள், இதிலேயே பாதி சுரசுரப்பு போய்விடும்.<br />
<br />
இப்பொழுது அந்தக் கரிவிந்து தடவப்பட்ட புலிநெய் வில்வக்கட்டை இருக்கிறதல்லவா? அதை சுருக்கமாக விந்துக்கட்டை என்று அழைப்பார்கள். அந்த விந்துக்கட்டையை ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளவும்.<br />
<br />
நாட்டுமருந்துக்கடைக்குச் சென்று சதுர்வாசனம் என்று கேட்கவும். ஐந்து ரூபாய்க்கு ஒரு வில்லையை கொடுப்பார்கள். அதென்ன சதுர்வாசனம்? ஆவனி மாதம் வெட்டுக்கிளிகளின் வாயுக்காலம். ஆவனி முடிந்து புரட்டாசி துவங்குகையில் வெட்டுக்கிளியின் தெற்குத்துவாரத்திலிருந்து இந்த லாகிரி வஸ்து வெளிப்படும். இந்த சதுர்வாசனத்தை வேதியியலில் Chiral compound என்பார்கள். இந்த சதுர்வாசனத்தை முளரிப்பூ பன்னீரில் கலக்கி இரண்டு மணி நேரம் வெயிலில் காய வைக்கவும். தண்ணீர் ஆவியாகி ஒரு பேஸ்ட் மட்டும் மிஞ்சியிருக்கும். தற்பொழுது அந்த விந்துக்கட்டையை சூரிய வெளிச்சம் படுமாறு 35 டிகிரி சாய்த்து முளரிப்பன்னீரில் நனைத்து சதுர்வாசனத்தில் குழைக்கவும். அப்பொழுது ஸ்ஸ்ஸ் என்றொரு சப்தம் எழுந்தால் அது நூறு சதவீதம் சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இல்லை என்றாலும் பரவாயில்லை.<br />
<br />
தற்பொழுது அந்த சதுர்வாசனம் அப்பிய விந்துக்கட்டையின் நுனியை உங்கள் நாக்கின் நுனியில் வைக்கவும். இவ்வளவுதான் வைத்தியம். அறுசுவைக்கு அப்பாற்பட்ட ஒரு சுவையை உணர்வீர்கள். அந்த உணர்வெழுச்சியில் கட்டுண்டே நாக்கின் சுரசுரப்பு வெறும் எட்டு வினாடிகளுக்குள் நீங்கிவிடும். மேலும் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு வாழ்க்கையில் இனி அறுசுவையில் உள்ள எதையுமே சாப்பிடத் தோன்றாது. இதனால் உடல் எடையும் குறையும்.<br />
<br />
இப்பொழுது உங்கள் கையில் இருக்கும் அந்த இரண்டாவது காம்பை வீட்டு வாசலில் கிழக்கு பார்த்து போடவும். அவ்வாறு செய்தால் அறுசுவை உணவுப் பண்டங்களோடு எந்த விருந்தினரும் வீட்டிற்கு வரமாட்டார்கள். அன்புத்தொல்லைகள் இருக்காது. ஆனந்தமான வாழ்க்கை கிட்டும். மூன்றே மூலிகைகளில் சந்தோஷம், லௌகீக விழிப்பு, சித்த சுத்தம், சர்வ மோட்சம், அரகரோகம், அந்தகூபம்.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-9570619617241517202018-08-22T17:10:00.000+05:302020-05-18T23:50:44.359+05:30நிவாரண நிதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கேரளத்திற்கு வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் வழிமுறைகளைப் பார்த்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு முறை நினைவிற்கு வந்தது. இன்று முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இரண்டே நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம். பே.டி.எம். வசதி இருக்கிறது. அமேஜான் மூலமாக பொருட்களையே நேரடியாக அளிக்கலாம். எண்ணற்ற சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு வந்துவிட்டது.<br />
<br />
கார்கில் ஆக்கிரமிப்பு வந்த சமயம் எனக்கு ஆறு வயது. குஜராத் பூகம்பத்தின்போது எட்டு. பள்ளியில் நிவாரண நிதி அட்டை என்று ஒன்று கொடுத்தார்கள். அதில் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதி அளவைக் குறிக்க இடம் இருக்கும். யார் இந்தப் பணத்தையெல்லாம் திரட்டியது என்று என் பெயர், முகவரி எழுத மேலே ஒரு இடம் இருக்கும். இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தெருக்களில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி நிதி திரட்டினோம். ஐம்பது பைசா முதல் அரிதாக ஐம்பது ரூபாய் வரை வரும். நல்ல நோக்கத்திற்காக என்றெல்லாம் அந்த வயதில் தோன்றவில்லை. அடுத்தவரை விட அதிகமாக நிதி திரட்டவேண்டும் என்ற உந்துதலில் அலைந்தோம். அந்த துர்நிகழ்வுகளின் கோரம் தெரியாத வயது. வீட்டிற்கு பெற்றோரின் நண்பர்களோ உறவினர்களோ வந்தால் உண்டியலை எடுத்துக்கொண்டு அவர்கள் முன்பு நின்றுவிடுவேன். தெருவில் உள்ள வீடுகளுக்கு விருந்தினர் எவறேனும் வந்திருக்கிறார்களா, புதிய வண்டி ஏதாவது நின்றிருக்கிறார்களா என்று பார்த்து, புதிய மனிதர்களின் நடமாட்டம் கண்ணில் பட்டால் அவர்களிடத்தில் அட்டையை நீட்டுவேன். இரண்டு வாரங்கள் கழித்து திரட்டிய பணத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்து ஒருவரையொருவர் வின்னர் என்று பார்த்துக்கொண்டோம்.<br />
<br />
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், இரண்டு வாரங்களுக்கு ஒரு ஒரு ரூபாயாகத் திரட்டி, அதை ஆசிரியர்கள் மொத்தமாகத் திரட்டி அனுப்ப ஒரு மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு, அது குஜராத்தையோ காஷ்மீரையோ அடைய மற்றொரு வாரம் எடுத்து, அங்கிருந்து முகாம்களுக்குச் சென்று சேர ஒரு இரண்டு நாட்கள் ஆகி, என்று பொதுமக்களின் நிவாரண நிதி சென்று சேரவே ஒரு மாதம் வரை ஆகிவிடும். அந்த நிதியை வைத்து பொருட்களை வாங்க இன்னும் சில நாட்கள் ஆகும். ஆனால் இன்று தொழில்நுட்பத்தின் உதவியால் அவை சில நிமிடங்களில் நிகழ்ந்துவிடுகின்றன. அதிகபட்சம் சில நாட்கள்.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-34729494813158755682018-08-07T23:36:00.000+05:302020-05-18T23:50:33.493+05:30கலைஞர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் பேருந்தில் பயணித்துதான் கல்லூரி சென்றேன். அதனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தாக வேண்டும். இறுதி இரண்டு ஆண்டுகளின்போது விடுதிக்கு மாறியபின் ரூம்மேட்ஸ் எங்களுக்கு சற்றே சோம்பேறித்தனம் குடிகொண்டுவிட, சில மாதங்கள் தாமதமாக எழ ஆரம்பித்தோம். பிறகு ஒரு உத்வேகத்தில் நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு “காலையில எழுறோம், ஜாகிங் போறோம். ஒருத்தன் தூங்கிட்டா எழுப்பி கூட்டிட்டுப் போறோம்” என்று திட்டம் போட்டோம். அப்பொழுதெல்லாம் சிலமுறை அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஒருவரையொருவர் இப்படித்தான் எழுப்பியிருக்கிறோம் - “அங்க ஒரு கிழம் முரசொலிக்குத் தலையங்கம் எழுதிட்டு இருக்கு. வாடா!”<br />
<br />
அரசியல் நிகழ்வுகளில் அரைகுறை ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பல நாட்களில் பேச்சின்போது ஏதாவது ஒரு கலைஞர் ரெபரன்ஸ் வந்துவிடும். அதிகாலை ஒருமணிநேரம் தலையங்கம் எழுதுவார், இரண்டு மணிநேரம் செய்தித்தாள்கள் வாசிப்பார் என்று கலைஞரின் டேபிளான் ஜூவியில் வெளியானபோது அதில் கவரப்பட்டுதான் நான் தினத்திட்டங்களே போட ஆரம்பித்தேன். மையக் கவர்ச்சியே அவருடைய வயதுதான். உடல்வலு உச்சத்தில் இருந்த வயது எனக்கு, அவரோ தினம் தினம் உழைத்து என்னைக் கூனிக் குறுகவைத்துக்கொண்டே இருந்தார். இப்பொழுது யோசிக்கையில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ரிலேட்டபிளான ஒரு ஆளாகத்தான் அவர் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார். இளம் வயதிலேயே கலையுலகில் தனக்கென்ற ஒரு இடத்தைப் பிடிப்பது, கட்சித் தலைவரிடம் ஆறு இலக்க நிதி திரட்டுகிறேன் என்று சவால் விடுவது, ஒரு பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்குவது, எல்லா நேரங்களிலும் ஏதேனும் செய்துகொண்டே இருப்பது, எல்லாவற்றிலிருந்தும் மீண்டுக்கொண்டே இருப்பது, என்று அரசியல் கடந்து தனிமனித அளவில் அவரிடமிருந்து ஏதோவொரு இன்ஸ்பிரேஷனைக் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள முடியும். Political Career என்று வகுப்பெடுத்தால் பாலபாடம் கலைஞராகத்தான் இருக்கும். பழகாத அரசியல் இல்லை, பார்க்காத நிகழ்வுகள் இல்லை. இனி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் இறப்பதென்பது அனைவருக்கும் வாய்க்காத ஒன்று. “நான் அப்படி என்னத்த பாத்துட்டேன், அதை முடிவு செய்ய வேண்டியது நான், நீ இல்ல. மூடிட்டு இரு, நான் வரேன்” என்றபடி அவர் எழுந்துவிடுவார் என்று உள்ளே ஒரு நப்பாசையும் இருந்தது. எப்படியாயினும், தன் இறுதி ஆண்டுகளை நிறைவுகள் நிறைந்தும் புகார்கள் குறைந்துமாகவே அவர் கழித்திருப்பார் என்று நம்ப விரும்புகிறேன்.<br />
<br />
உலக தேசியத் தலைவர்களில் கலைஞருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் echo chamber-களால் நிறைந்தவை. வெகுமக்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு முன் இந்த இணைய காழ்ப்புணர்ச்சிகளுக்கு மதிப்பில்லை. என்னுடைய பல நண்பர்களின் தாய்களும் தந்தைகளும் இந்தக் கணத்தில் வாய்விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். சென்ற வாரம் காவேரி மருத்துவனை வெளியே பலர் விம்மிக்கொண்டிருந்ததையும், அவர் நம்பாத கடவுளை வேண்டிக்கொண்டிருந்ததையும் பார்த்தேன். அவருடைய சமூகநீதிக்கான பயணத்தில் மாண்பும் முன்னேற்றமும் வேண்டி அவரைப் பற்றிக்கொள்ள அவசியம் இல்லாத பின்புலத்திலிருந்து வந்தவன் நான். எவ்வளவு முற்போக்காக சிந்தித்தாலும் சரி, என் சமூகம் உருவாக்கிய இரத்தக்கறைகள் என் கைகளிலும் படிந்துதான் இருக்கும், அதை ஏற்றுக்கொண்டபடிதான் நான் இயங்கவேண்டும் என்ற புரிதலை இவர் கட்டிக்காத்த இயக்கம்தான் எனக்குத் தந்தது. அனைத்து சமூக சலுகைகளையும் கையில் வைத்துக்கொண்டு அனைவரும் பிறப்பால் சமம் என்று சமூகத்தை ஏமாற்றாமல் இருக்க அந்த வாசிப்புதான் சொல்லிக்கொடுத்தது. அந்த வாசிப்பு இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே எனக்கு வாய்த்திருக்கலாம் என்ற வருத்தம் இப்பொழுதும் எனக்கு உண்டு. என்னுடைய வளர்ச்சிக்கும் அந்தஸ்திற்கும் உதவும் ஆதிக்க சக்திகளுக்கு துரோகம் இழைப்பதுதான் சமூக நீதியில் என் தலையாக பங்களிப்பு. அந்த கடமைக்கான ஒத்துணர்வை திராவிட இயக்கம் போன்ற கலகக்குரல்களிடமிருந்துதான் நான் பெற்றேன். அதன் மைய அச்சாகப் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். ஜனநாயகப்படுத்துதலின் மூலம் power equation-ஐ மாற்றும் ஆட்கள் உலகில் அரிதிலும் அரிதானவர்கள். அவர்கள் குறைகளைத் தாண்டி நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்கள். A MASSIVE TITAN DIED TODAY. ஒரு நீண்ட பெருமூச்சுடனே நாம் அவரின் மரணத்தை எதிர்கொள்ளவேண்டும்.<br />
<br />
மேலும், எல்லோராலும் கொண்டாடப்படுகின்ற, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. பிம்பமும் போலிகளும் நிறைந்த வாழ்வு அது. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆளுக்கு கையில் செல்போன் இருந்திருந்தால் பல புண்ணிய மனிதர்களின் பிம்பம் எளிதாகக் கிழிக்கப்பட்டிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஒரு அரசியல்வாதியின் பிம்பம் உடைவதும், அவரின் பொதுவாழ்க்கை கூர்ந்து கவனிக்கப்படுவதும், புகழ்பாடல்கள் கேள்விக்குள்ளாவதும் ஜனநாயகப்படுதலின் முக்கிய அங்கம். தமிழகத்தில் அது சாத்தியமானதில் கலைஞருக்குப் பெரும் பங்குண்டு என்பது புரிந்தாலே காழ்ப்புணர்ச்சிகள் பெருமளவில் குறைந்துவிடும். அரசியல் வேறுபாடுகள் எல்லாம் அதன் பிறகுதான். கடைக்கோடி திமுக தொண்டனுக்கே ஏமாற்றங்கள் இருக்கும். ஆனால் அவர் இழப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் வெறுமை நிஜம். ஒருவாரமாகக் கையில் ஃபோனையே பார்த்துக்கொண்டு உறங்காத பொழுதுகள் நிஜம். அவர் மரணம் ஒரு குறைந்தபட்ச அசைவைக் கூட உங்களுக்கு ஏற்படுத்தவில்லையென்றால் சீரியசாக நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வெறுப்பரசியல் உங்களை மனித மாண்பற்றவர்களாக ஆக்கிவிட்டதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். அதன் பிறகும் வெறுப்பு இருக்கிறது என்றால் அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு என்று சொல்லிவிட்டு பாதிப்பின்றி அடுத்த வேலையைப் பார்க்கப்போகும் சலுகை எனக்கு உண்டு. ஆனால் அந்த சலுகை தரும் குற்றவுணர்ச்சியை சேர்ந்து சுமக்கக் கடவது நீங்களும்தான். என்றைக்காவது ஒருநாள் அதை சுமக்க நீங்கள் வருவீர்கள் என்ற அந்த நம்பிக்கையைத் தனிப்பட்ட அளவில் கலைஞர் பலருக்கு விட்டுச்சென்றிருக்கிறார்.<br />
<br />
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றை திராவிட இயக்க அரசியல் குறிப்பிடத்தக்க அளவு செதுக்கியிருக்கிறது. பிரிவினை காலத்தில் இந்திய ஒற்றுமை என்பது இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்று சுருக்கப்பட்டு அவசர அவசரமாக சுதந்திரம் பெற்றபிறகு தேவை கருதி மத்திய அரசு அதிகாரத்தைக் குவித்தது. ஆனால் வெறும் இருபதே ஆண்டுகளில் இந்திய ஒன்றியத்தின் அடையாளம் அதைக் கடந்தது என மாநில சுயாட்சிக் குரல்கள் வெளிவர ஆரம்பித்தன. யார்ரா அது என்று பார்த்தால் முன்வரிசையில் தமிழ்நாடு. அறிவைக் கடந்து அந்த அறிக்கைகள் தந்த வாசிப்பின்பம் அலாதியானது. இந்தியாவின் மொழிக்கொள்கை மெய்யாகவே அசுரர்-தேவர் ரேஞ்சுக்கான பனிப்போராக இருக்கிறது. சும்மா இல்லை, மொழித்திணிப்பைப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள மனிதர் ஒரு மாநிலத்தையே தயார்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். இந்தித்திணிப்புக்கு எதிராகக் கருத்து சொன்னால் நீ திமுக-காரனா என்று இனியும் கேட்க முடியாது. அது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுக்கருத்துகளுள் ஒன்றாக ஆகிவிட்டது. என்னடா இது தமிழ்நாடு மட்டும் மசிய மறுக்கிறது என்ற சிந்தனைக்கும், என்னடா இது கியூபா மட்டும் மசிய மறுக்கிறது என்ற சிந்தனைக்கும் வேற்றுமைகளைக் கடந்த ஒற்றுமை உண்டு. கலைஞரின் இருப்பு ஒரு பேரியக்கத்தின் துடிப்பாக இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் மறைவை ‘an end of an era' என்று சொல்கிறார்கள். அரைநூற்றாண்டு காலம் மைய அரசியலில் தேவையற்றுப் போகாமல் நீடிப்பதென்பது ஒரு ஜனநாயகத்தில் மிகப்பெரும் சாதனை. 20ம் நூற்றாண்டில் மிகமிகச் சிலரே அந்த legacy-யை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நினைவில் வைத்தபடிதான் நான் கலைஞரின் உடலைத் துறக்க நினைக்கிறேன். அவரவர் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அறநிலைப்பாடுகளுக்கும் ஏற்ப இருக்கும் குற்றச்சாட்டுகளையெல்லாம் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு மாநிலமாக ஒன்றுகூடி அவருக்கு மரியாதை செலுத்துவது மிகவும் முக்கியம். அது அவருடைய பெருவாழ்வுக்கான முக்கிய அங்கீகாரமாக இருக்கும்.<br />
<br />
He was one of the longest serving public representatives in the whole world. உங்களுக்குக் கலைஞர் பிடிக்கவில்லை என்பதற்காக அவருக்கு வாக்களித்தவர்கள் எல்லோரும் அறிவுக்கெட்டவர்கள் இல்லை. மக்களின் பிரதிநிதியாக அரை நூற்றாண்டு காலம் இயங்குவதென்பது இமாலய சாதனை. அதை முறியடிப்பது உலகில் மிகவும் கடினம். எந்த பொதுச்சமூகத்திற்காக அவர் இயங்கினாரோ அந்த சமூகம் அச்சாதனையை அங்கீகரிப்பது அவசியம். ஏனெனில் கலைஞர் தன்னுடைய நேரத்தை மக்களுக்காக மிகமிக நேர்த்தியாக செலவழித்தார். பொதுவாழ்க்கைக்கான எண்ணங்கள் இருந்தால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்துவதில் பிளானிங் முக்கியம். எனக்கு இருக்கும் 24 மணிநேரமும், உங்களுக்கு இருக்கும் 24 மணிநேரமும், கலைஞருக்கு இருந்த 24 மணி நேரமும் ஒன்றல்ல. அனைவருக்கும் 24 மணிநேரம்தான் என்பது எலீட் மனநிலை. என்னுடைய 24-வது வயதில் எனக்கு இருக்கும் 24 மணிநேரமும் அவருடைய 24-வது வயதில் அவருக்கு இருந்த 24 நேரமுமே வெவ்வேறுதான். இந்த விஷயத்தில் அம்பேத்கர், காந்தி, பெரியார் வரிசையில் கலைஞர் நிச்சயம் வருவார். இவர்கள் அனைவரும் நேரத்திற்கு உரிய மரியாதையைத் தந்தவர்கள். இவர்களுள் பன்னெடுங்காலம் தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலும் இருந்துகொண்டே பல்வேறு தளங்களில் இயங்கியவர் கலைஞர் ஒருவர்தான். அந்த மாபெரும் மனித இயந்திரம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டிருக்கிறது என்பது சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயம் அல்ல. ஆயிரமாண்டு கால மரம் ஒன்று வேரோடு சாய்ந்தால் அதை நாம் எப்படிப் பார்ப்போமோ அப்படிப் பார்க்க வேண்டிய நிகழ்வு இது. 90 ஆண்டுகளுக்கான நினைவுகளையும் வலிகளையும் சுமந்த பொக்கிஷம் கலைஞரின் மூளை. அது மண்ணோடு மண்ணாகப்போகிறது என்பதற்காகவும்தான் இத்தனை ஒப்பாரிகளும்.<br />
<br />
இந்த சாவை லீவு கிடைக்கும் என்று கடந்துபோவதுபோன்ற குரூரமான புத்தி வேறு இல்லை. லீவு கிடைக்கும் அளவிற்கு எந்த சமூகத்திற்காக உழைத்தாரோ, அந்த சமூகத்தின் வளர்ச்சி பிடிக்காமல் பொருமும் செயல் அது. சற்றே சுற்றிப்பாருங்களேன். வாக்கு வங்கியே இல்லாத திருநங்கைகள் சமூகம் முதல்முறையாக ஒரு தலைவனின் மரணத்திற்குக் கண்ணீர் விடுகிறது. இதைவிட வேறு என்ன அளவுகோல் வேண்டும்? இதோ, இந்த வாரத்தில் கலைஞர் மருத்துவமனையில் இருக்கையில் தமிழகத்தின் முதல் பிராமணரல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டார் என்று செய்தி வருகிறது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருந்தாலும் சட்ட சீர்திருத்தம் செய்து தசாப்தங்கள் கடந்த ஒரு நெடும் போராட்டத்தின் வெற்றி இது. கலைஞரின் காதுகளை இது நிச்சயம் எட்டியிருக்கும் என்றே நம்ப விரும்புகிறேன். பெரியாரின் அந்த முள்ளை சுமந்தபடியேதான் கலைஞர் அரசியலுக்குள் வந்தார். அரை நூற்றாண்டுக்குப் பின் அந்த முள் எடுக்கப்படுகையில் அவர் நம்மை விட்டுப் பிரிகிறார். அந்தக் கிழம் எதையோ சாதித்திருக்கிறது. இல்லை இல்லை என்று மறுக்காமல் ஒருமுறையேனும் அதை நாம் ஒத்துணரவேண்டும்.<br />
<br />
கலைஞர் இனி இல்லையே என்று யார்யாருக்கோ என்னவெல்லாமோ கவலைகள். எனக்கோ இனி யார் என்னை அதிகாலை எழுப்பிவிடுவார் என்ற கவலை. சாவிலும் சலுகை குறித்துப் பாடம் எடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறது அந்தக் கட்டுமரம்.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-53112363703930269892018-07-19T19:58:00.000+05:302020-05-18T23:50:22.256+05:30"வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு..."<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
“வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு” என்று பல பதிவுகளைப் பார்த்தேன். அதனால் உந்தப்பட்டு எழுதுகிறேன்.<br />
<br />
“மேற்கத்திய சமூகத்தில் குழந்தையைக் கடத்தி வன்புணர்வு செய்பவர்களை ஊரே சேர்ந்து அடித்துக்கொல்லும்போது எப்படி வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்களோ, அதேபோல அவர்களின் சமூகத்தில் தெய்வ நிந்தனை செய்பவர்களை மக்கள் அடித்துக்கொல்லும்போது வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்கள்.”<br />
<br />
இஸ்லாமிய ஆய்வறிஞர் அந்தோனி மெக்ராய் எழுதிய வரிகள் இவை. சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் வரிகள்’ புத்தகம் வெளிவந்து மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய பொதுச்சமூகத்தினிடையே பெரும் பண்பாட்டுப் பிளவை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் இந்த வரிகளை அவர் எழுதினார். அற சார்பியல்வாதம் மற்றும் பண்பாட்டு சார்பியல்வாதம் (Moral & Cultural relativism) குறித்து அங்கிருந்துதான் என் வாசிப்பு துவங்கியது. தனிமனித நீதியுணர்வு என்பது பலவகைகளில் சிக்கலானது. தனக்கான எல்லைக்கோட்டை அது தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களில் தேடுகிறது. அவ்வாறு தேடிக் கண்டடைகையில் அந்த எல்லைக்கோட்டிற்குக் கீழே உள்ள பிற நீதியுணர்வுகளையெல்லாம் அது காட்டுமிராண்டித்தனம் என்ற பிரிவில் அடக்குகிறது, இதுதான் அடிப்படை. மேலும் இந்த நீதியுணர்வு பல சமயங்களில் நான்கு பேரைக் கைகாட்டிவிட்டுத் தான் தப்பித்துக்கொள்ளவும் தன்னிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்டத்தைப் பெரிதும் மதிக்கும் ஒருவருக்கு எல்லைக்கோடு என்பது ஒரு நிர்பயாவாக இருக்கலாம். அஜ்மல் கசாப்பாக இருக்கலாம். சென்னை சிறுமியாக இருக்கலாம். இந்த வெவ்வேறு எல்லைக்கோடுகளின் முரண்பாடுகளால்தான் சட்டம் என்பதே வரையறுக்கப்படுகிறது.<br />
<br />
ஒரு குற்றத்திற்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனையை வழங்கவேண்டுமென்றோ, சட்டத்திற்கு உட்பட்டு கொல்ல வேண்டுமென்றோ மனித மாண்பினால் உந்தப்பட்டு, அருவெறுப்பில், பரிதாபத்தில், ஒத்துணர்வில், கையறு நிலையில், பல்வேறு உணர்ச்சிகளின் கலவையில் கொதிப்பது நிச்சயம் புரிந்துகொள்ளக்கூடியதே. உலகின் அனைத்து மனிதர்களுக்கும் இந்த நீதியுணர்வு ஏதோவொரு பரப்பில் உண்டு. ஆனால் இதில் சிக்கல், எப்பொழுது இந்த உணர்வெழுச்சியை நாம் நீதியாக நினைக்க ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுது இரண்டு இடங்களில் நாம் ஒரு சமூகமாக சறுக்குகிறோம். ஒன்று, பிற சமூகங்களின் அநீதிகளாக நம் நீதியுணர்விற்குப் படுவனவற்றைக் கண்டிக்கும் அருகதையை நாம் இழந்துவிடுகிறோம். நீதி குறித்த உரையாடல் பண்பாட்டு ஏசலாக வீழ்ச்சியடைகிறது. "உனக்கு இந்தக் குற்றத்திற்குக் குறியை வெட்ட வேண்டும் என்று தோன்றினால் அப்பொழுது எனக்கும் இந்தக் குற்றத்திற்குக் கல்லால் அடிக்க வேண்டும் என்று தோன்றக்கூடாதா, நம் அளவுகோல்கள்தான் வெவ்வேறானதாயிற்றே" என்று மிக எளிதாக உரையாடல் முடங்கிவிடும். இதன் அடுத்தக்கட்டம் அவரவர் மாற்றுத்தரப்பைக் காட்டுமிராண்டிகள் என்று முத்திரை குத்துவது மட்டுமே. இரண்டு, ஒரு சுயநிர்ணய எல்லைக்கோட்டை மீறும் குற்றம் நடக்கையில் நாம் மனித மாண்பின் பாதுகாவலராகத் தன்னிச்சையாக பாவித்துக்கொண்டுவிடுகிறோம். "நான் யோக்கியன் எல்லாம் இல்லை, அதற்காகக் கொடுங்குற்றவாளிகளையெல்லாம் கொல்லாமல் இருக்க முடியாது" என்பது தன்னைக் குற்ற உணர்ச்சியிருந்து விலக்கிக்கொள்வதுதானே தவிர, அல்லது இயல்பான உணர்வெழுச்சியில் கொதிப்பதுதானே தவிர அது நீதி ஆகாது (இந்த வாதமே நீதி சார்பியல்வாதத்திற்கு உட்பட்டதுதான். இதிலிருந்தே இந்த சிக்கலின் ஆழத்தைப் புரிந்துகொள்ளலாம்). சந்தேகமில்லை, இந்த அற உணர்வு மனிதம் தோய்ந்தது, எளிய குரல்களால் நிறைந்தது, பல சமயங்களில் அதிகாரம் மறுக்கப்பட்ட இடங்களிலிருந்து, நசுக்கப்பட்ட குரல்வளைகளிலிருந்து வருவது, அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் இதே உணர்வு நூறு குற்றவாளிகளோடு ஒரு நிரபராதியையும் தெரியாத்தனமாக சேர்த்து கொன்றுவிடக்கூடியது. அந்த ஒரு காரணம் போதும் இந்த அறவுணர்வை நீதியில்லை என்று நிராகரிக்க. அதுதான் நீதி என்று நினைத்துக்கொண்ட சமூகங்களில்தான் இவற்றின் நீட்சியாகப் பல்வேறு மனித உரிமை மீறல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.<br />
<br />
உண்மையில் நீதி என்பது குற்றம் சாட்டப்பட்டவருக்காக வருந்தும் அந்த சிலரால்தால் காக்கப்படுகிறது. அந்த வருத்தம் குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான பரிதாபத்தில் வருவது இல்லை. மாறாக இந்தக் குற்றத்தை வைத்து பொதுச்சமூகம் சட்டத்தைக் கைவிட்டுவிடுமோ என்ற எச்சரிக்கை உணர்வில் ஏற்படுவது. அந்த எச்சரிக்கையால்தான் குற்றம் சாட்டப்பட்டவரை சட்டப்போக்குகளுக்குள் அழைத்துவந்து சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைப்படி தண்டனையோ விடுதலையையோ வாங்கித்தருகிறார்கள். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி இருக்கிறது என்று நிரூபிப்பவர்கள் கசாப்பிற்காக வாதாடிய அப்பாஸ் கஸ்மி போன்றவர்கள்தான். நீதியின் பரிமாணங்கள் அளவு கடந்தது. அதனால்தான் நீதி என்பது ஒற்றைப் பரிபாலனமாக இல்லாமல் ஒரு பயணமாக ஆக்கப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் நீதிக்கான அந்தப் பயணம் நீதி மறுக்கப்பட்டவர்களின் நெடிய யாத்திரையாகத்தான் இருக்கிறது. எண்ணற்ற சீர்திருத்தங்கள் நிலுவையில் இருக்கின்றன. அப்படியே அந்தப் பயணத்தை மேற்கொண்டு நீதியின் வாயிற்கதவைத் தட்டினாலும், அதன் சாசனங்கள் குரூரமாகவும், சார்புகள் நிறைந்ததாகவும், ஆதிக்க சக்திகளுக்கு உதவுவதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இருப்பதிலேயே குறைந்த அளவு பாரபட்சம் உள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாகவும், சீர்திருத்தம் செய்ய பெரும்பாலும் அனைவருக்கும் வாய்ப்பிருக்கும் வெளியாகவும் அது மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் விளிம்பு நிலை மக்களுக்காகச் செயல்படுபவர்கள் மீண்டும் மீண்டும் தங்களை வஞ்சிக்கும் நீதிமன்றத்திடமே செல்கிறார்கள். நீதிமன்றத்திற்கான மாற்று இன்னும் மோசமானது என்பதும் நிலையற்றது என்பதுமே அதற்குக் காரணங்கள்.<br />
<br />
இன்று வக்கீல்கள் கும்பலாக சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிப்பதும் வாதாட மறுப்பதும் நமக்கு உவப்பானதாக இருக்கலாம், ஆனால் இதே கூட்டம் நாளை நீதி பரிபாலனம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஒரு வாட்சப் வதந்தியை நம்பி நம்மை வீட்டிலிருந்து தரதரவென்று இழுத்துக்கொண்டு செல்லும். அப்பொழுது நாம் பெருங்குரலெடுத்து அழைக்கப்போவது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வருந்தும் அந்த சிலரைத்தான். ஏனெனில் நீதி என்பது அவரவர் மனதில் தோன்றுவது மட்டும் இல்லை. நம் மனித மாண்பிற்கிடையே, கொதிக்கும் உள்ளத்திற்கிடையே, விம்மியழும் தருணத்திற்கிடையே அதையும் ஒரு ஓரமாக நினைவில் வைத்திருப்போமாக.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-12383779993346976112018-07-11T20:36:00.001+05:302021-06-17T19:06:20.612+05:30பப்ஜி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தம்பியின் நண்பர் ஒருவர் தீவிர பப்ஜி ரசிகர். PlayerUnknown's Battlegrounds என்பதன் ‘சிறுபெயர்’தான் பப்ஜி. ஆண்டிராய்டில் இலவசமாகக் கிடைக்கும் துப்பாக்கிச்சூடு விளையாட்டு அது. ஒரே நேரத்தில் பலர் அதில் விளையாடலாம். நூறு பேர் ஒருவரையொருவர் சுட்டுக்கொல்ல வேண்டும், இறுதியில் எவர் எஞ்சியிருக்கிறாரோ அவரே கெலித்தவர். தமிழ்க்கீச்சுலகம் கடந்த சில மாதங்களாக அந்த விளையாட்டினால்தான் கோமாவில் கிடக்கிறது. நிற்க.<br />
<br />
அந்த நண்பர் ஒரு மரண கேமர். பாத்ரூமில் ஒரு கையால் பப்ஜியாடிக்கொண்டேதான் மைக்ரோநீர் கழிப்பார். நெர்ட் மாணவராக மாறுவேடம் பூண்டு கல்லூரி நூலகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் தடிபுக்கை எடுத்துக்கொண்டு அதற்குள் மொபைலை வைத்து விளையாடுவார். இவற்றையோ இவற்றிற்கு ஒப்பானவற்றையோ செய்தால்தான் அவர்கள் மரண கேமர்கள். அன்னாரின் மொபைல் ஒருகட்டத்தில் விளையாடி விளையாடி களைத்துப்போய் ஸ்லோ ஆகிவிட்டது. இவருக்கோ விரலால் திரையை வலித்து வலித்துக் காத்திருந்து பொறுமை போய்விட, சுற்றியிருந்தவர்களிடம் எரிந்து விழ ஆரம்பித்தார். பிறகு கை நடுக்கம் வந்துவிட, லஸ் கார்னரில் ஒரு சர்வீஸ் சென்டருக்குப் போயிருக்கிறார். மொபைல் ஆறேழு வினாடிகளுக்குப் பிறகுதான் என்ன என்று கேட்கிறது என்று கடைக்காரரிடம் கொடுத்ததும், அந்தக் கடைக்காரரும் மேலதிக விவரங்களைக் கேட்டுவிட்டு, “ஒரு இருபது நிமிசத்துல ரெடியாகிடும்பா”, என்று அந்த மொபைலைத் தன் பட்டறைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். நான்கு வலிப்பு வலித்து நேராக கூகுள் ப்ளே ஸ்டோருக்குப் போய், அங்கிருந்து க்ளீன் மாஸ்டர் என்னும் இலவச செயலியைத் தரவிறக்கம் செய்து ஐந்தே நிமிடங்களில் மொபைலை பூஸ்ட் செய்துவிட்டார். மீண்டும் பழைய பிரக்ஞையை அடைந்துவிட்ட அந்த மொபைலை அன்னாரின் கைகளில் படைத்து, “எல்லாம் சரி பண்ணியாச்சுப்பா, எண்பது ரூபா ஆச்சு”, என்று சொல்ல, மட்டற்ற மகிழ்ச்சியில் அந்த மரண கேமரும் காசைக் கொடுத்துவிட்டார். “அடிக்கிற வெயிலுக்கு நிறைய பேருக்கு இப்படி ஆகுதுப்பா, ஒரு நாளைக்கு நாலஞ்சு பேர் இப்படி வர்றாங்க, ஏதாவதுன்னா திரும்ப எடுத்துட்டு வா என்ன, சரி பண்ணிரலாம்”, என்று அந்தக் கடைக்காரர் முகமலர்ந்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.<br />
<br />
வீட்டிற்கு வந்து இது என்ன புதிதாக ப்ளூ ஐக்கான் என்று துப்பறிந்தபோதுதான் தான் பப்ஜியாக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கிறது. தம்பிக்கு ஃபோன் போட்டு, “தொன்னூத்தி ஒன்பது பேரை சுட்டு மலை மேல ஒத்தைல நின்னவன்டா நானு. என்னையே இப்படிப் பண்ணிட்டானுகடா” என்று புலம்பித் தள்ளியிருக்கிறார். அந்த கேமை நீக்கிவிடு, நான் வேறு சில சாத்வீகமான விளையாட்டுகளைப் பரிந்துரைக்கிறேன் என்று தம்பி சிரித்துக்கொண்டே ஆறுதல்படுத்திருக்கிறான்.<br />
<br />
பப்ஜி வெறியர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்லவும். சமூக நலன் கருதி வெளியிடுவோர் Fortnite தென்சென்னை மரணகேமர் கிளை.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-67287756206840462012018-04-21T06:53:00.000+05:302020-05-18T23:49:52.588+05:30ரோமா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என்னியோ மாரிகோனி வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறேன். ரோமாபுரியின் தெருக்களில் அலைகையில் நிறைய வயோதிகர்கள் தென்படுகிறார்கள். இரண்டு பேரைக் குறிப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் அன்டோனியோவின் சைக்கிள் திருடுபோனது. பட்டப்பகலில் கண் முன்னே நடந்த சம்பவம். அன்டோனியோவால் அத்திருடனை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்த சைக்கிள் இல்லாவிட்டால் வேலை போய்விடும். அந்த வேலைக்காகத்தான் படுக்கை விரிப்புகளையெல்லாம் விற்று அந்த சைக்கிளை அடகுக் கடையிலிருந்து மீட்டிருந்தான் அன்டோனியோ. போய்விட்டது. அவனும் அவனுடைய மகனான குட்டிப்பையன் ப்ரூனோவும் அந்த சைக்கிளைத் தேடி ரோமாவை சுற்றியலைந்தார்கள். கிடைக்கவேயில்லை. ப்ரூனோவுக்குப் பசியெடுக்க, அன்டோனியோ வேறு வழியில்லாமல் வேறொரு சைக்கிளைத் திருடப்போக, தப்பிக்கத் தெரியாமல் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டான். ஊரே ஒன்று சேர்ந்து அவனை அடித்துத் துவைத்துவிட்டது. தன் மகனின் கண்முன்னே திருட்டுப்பட்டம் பெற்று அடி வாங்கியதில் அன்டோனியோவுக்கு ஒருபுறம் அவமானம் பிடுங்கித் தின்ன, மறுபுறம் தன்னுடைய திருட்டிற்கான அத்தனை நியாயங்களும் நிழலாடியதில் விரக்தியும் இயலாமையும் சூழ்ந்துகொள்ள, மகனின் முன்னே உடைந்து அழுதான். ப்ரூனோ அவன் கைகளைப் பிடித்து தேற்றினான். கலைந்த கூந்தலை சரிப்படுத்தினான். கிழிந்துபோன ஆடையில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிட்டு அப்பாவை எழுப்பினான். இருவரும் தங்களின் தேடலைத் தொடர்ந்தார்கள். ரோமாவின் மக்கள் நெரிசலில் சைக்கிளோடு சைக்கிளாக அவர்களும் என் பார்வையிலிருந்து தொலைந்து போனார்கள். அவர்களைத்தான் இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றும் அந்த இருவரும் ரோமாவின் ஏதோவொரு மூலையில் அந்த சைக்கிளைத் தேடிக்கொண்டிருப்பார்களோ, அவர்கள் தேடும் பாதையில் நான் தற்பொழுது இருக்கிறேனோ, அவர்களை சந்திப்பேனோ என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த எண்ணத்தை உடனே கலைத்துவிட்டு நான் என்னைக் கடந்து செல்லும் கார்களை நோக்கத் துவங்குகிறேன். உலகப்போருக்குப் பிந்தைய பத்தாண்டுகள் கால வளர்ச்சியில் அன்டோனியோ தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு காசு சேர்த்திருப்பான். அந்த திருடுபோன சைக்கிளை மறந்துபோகும் அளவிற்கு சம்பாதித்து இரண்டு கார்களை வாங்கியிருப்பான். அதில் தன் மனைவியை அழைத்துப்போய் மகிழ்வித்திருப்பான். ப்ரூனோவை நன்றாகப் படிக்கவைத்துக் கரை சேர்த்திருப்பான். கைத்தடியின் தேவையின்றி கால்களை அழுத்தி ஊன்றி பேத்தி பேரன்களின் கைப்பிடித்து மகிழ்ச்சியாக நடைபயிற்சி செய்திருப்பான். அவையெல்லாமும் நடந்திருக்க வேண்டும், அந்த வாழ்வு அன்டோனியோவுக்குக் கிட்டியிருக்க வேண்டும் என்று பெருமூச்சு விடுகிறேன். என்னைத் தாண்டி செல்லும் ஏதோவொரு காரில் பேத்தி ஓட்ட, அருகே கொள்ளு பேரன்கள் ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருக்க, பின்னிருக்கையில் 105 வயது அன்டோனியோவும் 80 ப்ரூனோவும் நிம்மதியுடன் அமர்ந்துகொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியை எப்படியாவது கண்டுவிடவேண்டும் என்று கண்ணிமைக்காமல் நிற்கிறேன், ரோமாவின் மக்கள்சூழ் தெருக்களில். (Today Rome is celebrating its 2771st birthday, with the annual event 'Natale di Roma')</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-20445722877702530692018-04-12T16:52:00.000+05:302020-05-18T23:49:35.555+05:30சேப்பாக்க செருப்பு வீச்சு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்தப்பக்கம் போராட்டத்தை ஆதரித்தால் வன்முறைக்கான ஆதரவு உண்டோ, மஞ்சள் சட்டைகளை அடிப்பதும் பாம்புகளை விடுவோம் என்று மிரட்டுவதும்தான் போராட்டமோ என்று விமர்சிக்கப்படுகிறது. அந்தப்பக்கம் மைதானத்திற்கு வந்தால் அது இனத்துரோகம், காவிரி குறித்து அக்கறை இல்லை என்று இன உணர்வு அதீதமாக வெளிப்படுத்தப்படுகிறது. காவிரியை இப்படியா பெறுவது என்று போராட்டக்காரர்களின் வன்முறை மீது பலர் வைக்கும் விமர்சனத்திற்கு இணையாக, CSK-வுக்கு இந்த முறையிலா ஆதரவளிப்பது என்று ஒரு குறிப்பிட்ட விமர்சனம் எனக்கு இருக்கிறது: Mob mentality என்று போராட்டத்தைப் புறம் தள்ளியவர்களோ மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டதும் mob mentality-யில் CSK CSK என்று கத்திய விதம் எனக்கு அருவெறுப்பைத் தந்தது.<br />
<br />
என் குரல் உலகத்தில் எப்படியாவது கேட்கப்படவேண்டும் என்று கையறு நிலையில் உணர்வுகளால் உந்தப்பட்டு உலகமெங்கும் செருப்புகள் தனிமனிதர்களால் வீசப்பட்டிருக்கின்றன. மைதானம் நோக்கி எறியப்பட்ட செருப்பு ஏதோ ஜடேஜா டூப்ளசி மீது எறியப்பட்டதுபோல நினைத்துக்கொண்டு, டூப்ளசி நாட்டின் தலைநகரான கேப் டவுனிலும் தண்ணீர் இல்லை என்றெல்லாம் பாடம் புகட்டப்படுகிறது. செருப்பு வீசியது பிடிக்கவில்லையென்றால் அமைதியாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் அங்கோ பார்வையாளர்கள் கருத்தியல் இருமைக்குள் சிக்கிக்கொண்டு உணர்வெழுச்சியில் CSK கோஷம் போட்டபோது வெளியே போராடியவர்கள் ஒப்பீட்டளவில் தெளிவானவர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள்.<br />
<br />
போட்டியைக் காணுவதும், காணாமல் புறக்கணிப்பதும் அவரவர் தேர்வு. போட்டியைக் காண ஆவல், ஆனால் அடிப்பார்களோ என்று பயமாக இருக்கிறது என்பவர்கள் பக்கமே என்னுடைய சாய்வு. ஆனால் ஒன்றே ஒன்று. முட்கல் கமிட்டியின் முன்பு பச்சையாகப் பொய் சொன்ன ஒருவரை, ஊழலை மூடி மறைப்பதும் ஊழலில் சேர்த்திதான் என்று வழக்கறிஞரால் சட்ட ரீதியாக விமர்சிக்கப்பட்ட ஒருவரை, "நம்ம தல தோனி ரிட்டர்ன்ஸ்" என்று கேள்வியின்றி அணைத்துக்கொள்வது போன்ற, பெட்டிங்கில் ஈடுபட்டு இரண்டு வருடம் தடை வாங்கி இன்னும் அதே நிறுவனத்திடம் இருக்கும் ஒரு அணியைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடுவது போன்ற அறிவு மழுங்கிய செயல் வேறு எதுவும் இல்லை. போராட்ட உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத வரை தீர்வு குறித்தும் உணர்ச்சி குறித்தும் அறிவுரை சொல்லும் யோக்கியதையை அந்தத் தரப்பு இழந்துவிடுகிறது. ஒரு சமூகமாக சுயவிமர்சனமும் உரையாடலும் நாம் நிறைய செய்யவேண்டியிருக்கிறது. இவையாவும் ஜனநாயகமாக்கலின் ஒரு குழப்ப அங்கமும் கூட.<br />
<br />
கேளிக்கை, விளையாட்டு என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும். ஆனால் செருப்பு வீசப்பட்டதும் CSK CSK என்று வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவித்தது ஆயிரம் செருப்பு வீச்சுகளுக்கு சமம் நன்நெஞ்சே. அவை யார் பக்கம் வீசப்பட்டன என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். மைதானத்திற்கு உள்ளே இருந்தவர்கள்தான் இன்னும் அதிகமாக அரசியல் பழக வேண்டியிருக்கிறது.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-35824596334351713232018-02-22T16:46:00.000+05:302020-05-18T23:47:10.569+05:30நூலிலிருந்து சீரிஸ் - 4: இலையுதிர்கால இல்லுமினாட்டிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
//<b>கேள்வி</b>: அதெப்படி கமலுடைய கட்சி சின்னத்தைப் பார்த்தே அவர் ஒரு இல்லுமினாட்டி என்று முடிவு கட்டுகிறீர்கள்? - க.பாஸ்கரன்<br />
<br />
<b>பதில்</b>: அன்புள்ள பாஸ்கரன். உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, அதெப்படி கமலை இல்லுமினாட்டி என்று சொல்கிறோம்? அந்த சின்னத்தில் ஆறு கைகள் பாஸ்கரன். அதாவது ஆறு குடும்பங்கள். அதற்கு நடுவில் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரம் பாஸ்கரன், அதாவது இன்னொரு ஆறு குடும்பங்கள். ஆறையும் ஆறையும் கூட்டிப்பாருங்கள், பதினான்கு வருகிறதா? இப்பொழுது அந்த நட்சத்திரத்திற்கும் கைகளுக்கும் இடையே இருக்கும் வெற்றிடத்தை ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதை பதினான்கோடு கழியுங்கள். பதிமூன்று! பதிமூன்று குடும்பங்...<br />
வெயிட். கணக்கு தப்பாக வருகிறது. மன்னிக்கவும் ஆறும் ஆறும் பன்னிரண்டா? ம்ம்ம், அப்படியென்றால் அந்த வெற்றிடத்தைக் கழிப்பதற்கு பதிலாக கூட்டிவிடுங்கள் பாஸ்கரன். 6+6+1. பதிமூன்று! பதிமூன்று குடும்பங்கள்! இல்லுமினாட்டி!<br />
இரண்டாவதாக, ‘அதெப்படி சின்னத்தைப் பார்த்தே இல்லுமினாட்டி என்று சொல்கிறீர்கள்’ என்று அறிவுக்கெட்டத்தனமாகக் கேட்டிருக்கிறீர்கள். எங்களின் சிந்தனைப்போக்கு உங்களின்பால் நீட்சியடையவில்லையே என வருத்தமாக இருக்கிறது பாஸ்கரன். என்னமோ இதற்கு முன்னால் நாங்கள் அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் செய்து இல்லுமினாட்டிகளை அடையாளம் கண்டது மாதிரியும், கமல் விஷயத்தில் மட்டும் சின்னத்தைப் பார்த்தே முடிவு செய்துவிட்ட மாதிரியும் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி? காலங்காலமாக நாங்கள் சின்னத்தைப் பார்த்துதானேயா சொல்லிக்கொண்டு திரிகிறோம்? ஏதோ மற்றவர்களை ஆறு மாத காலம் தவங்கிடந்து கண்டுபிடித்த மாதிரியும், கமலுக்கு மட்டும் நாங்கள் ஓரவஞ்சனையாக நடந்துகொண்டுவிட்ட மாதிரியும் மனசாட்சியின்றி கேட்கிறீர்களே பாஸ்கரன்? இப்படியெல்லாம் நீங்கள் கேட்க மாட்டீர்களே... ம்ம்ம்... வெயிட்...<br />
ஓ மை காட்! டேய் இல்லுமினாட்டி! உன்ன கண்டுபிடிச்சிட்டேன்டா டேய்! உன் கேள்வியில மொத்தம் பதினொரு வார்த்தைங்க. அதோட ரெண்டைக் கூட்டினா? ஹஹா, கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியாடா இல்லுமினாட்டி பாஸ்கரா!//<br />
<br />
- “இலையுதிர்கால இல்லுமினாட்டிகள்: ஒரு விலங்கியல் ஆய்வு” நூலிலிருந்து<br />
#நூலிலிருந்து_சீரிஸ்</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-10916154409226285762018-01-24T16:40:00.000+05:302020-05-18T23:46:47.858+05:30எழுந்து நிற்காமை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களை தேச விரோதிகள் என்று சொல்வது எவ்வாறு தவறோ, அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதவர்களைத் தமிழின விரோதிகள் என்று சொல்வதும் தவறு - என்ற பொருளில் நண்பர்கள் சிலர் ஒப்பீடு செய்ததைக் கண்டேன். இரண்டும் ஒன்றுதான், வித்தியாசமே இல்லை என்பது இறுக்கமான பார்வை. இரண்டிற்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. இரு தரப்பினரின் காரணமும் நியாயமும் வெவ்வேறானவை.<br />
<br />
தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காவிடில் தேச விரோதி என்று சொல்பவர்கள் தேசிய கீதத்தை இந்திய ஒற்றுமையின் குறியீடாகப் பார்ப்பவர்கள். அதற்கு எழுந்து நிற்காதவர்களை அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கருதுபவர்கள். பெரும்பான்மை எழுந்து நிற்க விருப்பப்படுவதைத் தவிர வேறென்ன நியாயம் வேண்டும் அதைக் கட்டாயமாக்குவதற்கு என்று நினைப்பவர்கள். பெரும்பான்மைதான் அவர்கள் வைக்கும் அங்கீகாரம், அதற்கு எதிரானவர்கள் அவர்கள் பார்வையில் தேச விரோதிகள். தற்காலத்தில் இதற்குள் இந்து மத விரோதி என்ற கிளையும் அதீதமாக உண்டு. தேசிய கீதத்தை வைத்து வேண்டுமென்றே பிரிவினை அரசியல் செய்பவர்கள் அல்லாது, மெய்யாகவே நாட்டின் ஒற்றுமையின்பால் கவலை கொண்டவர்களும் இந்தத் தரப்பில் இயல்பாகவே இருப்பார்கள். அவர்களின் நியாயம் எதிர்க்கப்படுவதற்குக் காரணம் கருத்தியல் ரீதியானது. இந்திய அடையாளம் குறித்த பார்வைகள் வெவ்வேறானவை என்னும் நிலையில், ஒற்றுமையைத் தக்கவைப்பது இதுபோன்ற சடங்குகளால் அல்ல என்று மாற்றுத்தரப்பினரால் பன்மைத்துவம் பேசப்படுகிறது.<br />
<br />
மாறாக, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லையே என்று எதிர்ப்பதற்குக் காரணம் விஜயேந்திரர் தமிழ் ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்றெல்லாம் இல்லை. காலங்காலமாக சம்ஸ்கிருத அதிகார மையங்கள் தமிழை உதாசீனப்படுத்துகிறது என்றும், காலங்காலமாக மத்திய தேசிய அடையாளம் தமிழ் அடையாளத்தை ஒடுக்குகிறது என்றும் ஒரு மையநீரோட்ட அரசியல் எதிர்வியக்கம் தமிழகத்தில் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதன் நீட்சியே இந்த எதிர்ப்பு. விஜயேந்திரர் தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழவில்லையென்றால் அவர் மறைமுகமாக இந்த பாரபட்சத்தை/ஒடுக்குமுறையை வெளிப்படுத்துகிறார் என்பதே இந்தத் தரப்பு நியாயம். தமிழின அடையாளத்தை சம்ஸ்கிருத மொழி மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றாக தனித்தமிழ் இயக்கமும் திராவிட அரசியலும் இங்கு வலுவாகக் கட்டமைத்திருக்கிறது. அந்த சூழலின் பின்னணியிலேயே விஜயேந்திரர் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறார் என்பதைப் பார்க்கவேண்டும்.<br />
<br />
முன்னது ஒருமைத்துவத்தை வலியுறுத்தும் ஆதிக்கக்குரல். பின்னது சமத்துவம் கோரும் உரிமைக்குரல். இரண்டு தரப்பினரின் வாதங்களையும் தனிநபர் விருப்பம் என்ற கோணத்தில் மறுக்கலாம், அல்லது கருத்தியல் வேற்றுமைகளால் நிராகரிக்கலாம். ஆனால் இரண்டையும் ஒரே தராசில் வைக்க முடியாது என்பதில் மட்டும் தெளிவு வேண்டும். ஏனெனில், இரண்டின் அடிப்படைகளும் வெவ்வேறானவை; பண்பாட்டு அங்கீகாரத்திலும் அரசியல் அதிகாரத்திலும் அவை வெவ்வேறு தளத்தில் இருப்பவை. Consider what they mean, not what they say.</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5169620641931785198.post-262833208435291842018-01-13T09:30:00.000+05:302018-01-22T18:51:15.815+05:30தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது. தாராளவாதப் போக்குடைய மக்கள் இல்லாதவரை தாராளவாத ஜனநாயகம் சாத்தியமில்லை.<br />
<br />
ஜனநாயகம் என்பது வெறும் உடல்தான். அதற்கு உயிரூட்டுவது தாராளவாதமே.<br />
<br />
தன்னுடைய தனித்துவ பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியதொரு தாராளவாதக் கொள்கையை ஒரு நாடு கண்டெடுக்காதவரை, அவற்றைப் பரவலாக்காத வரை, அந்நாட்டில் தாராளவாத மக்கள் உருவாக மாட்டார்கள்.<br />
<br />
இதில் குறுக்குவழிகள் இல்லவே இல்லை. தாராளவாத ஜனநாயகம் உங்கள் நாட்டில் நிலைபெற விரும்பினால், அதற்குத் தேவையான அறிவியக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும்.<br />
<br />
சகிப்புத்தன்மையற்ற ஜனநாயகத்தின் ஆபத்து வெறும் சகிப்பின்மை மட்டுமல்ல; நிலையின்மையும் உறுதியின்மையும் அதன் அடிப்படை இயல்புகளாகும்.<br />
<br />
ஜனரஞ்சக அரசியல் தலைவர்கள் சகிப்பின்மையோடு இருப்பது அல்ல பிரச்னை. பிரச்னை என்னவென்றால், இவர்களுக்கு வெகுமக்கள் ஆதரவும், பரவலான வாக்கு வங்கியும் இருப்பதுதான்.<br />
<br />
“நம்முடைய தனித்துவ உயரிய தேசத்தை ஆபத்தான ‘மற்றவர்களும்’ ‘பண்பாட்டை மறந்த மேட்டுக்குடியினரும்’ தனதாக்கிக்கொள்கிறார்கள்; நம்மிடமிருந்து நம் உரிமத்தைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்”, என்று ஜனரஞ்சக அரசியல் கருத்தாக்கம் போதிக்கும்.<br />
<br />
உடனே நீங்கள் என்ன தீர்வை முன்வைப்பீர்கள்? வெளியிலிருந்து ஜனநாயகத்தைக் கொண்டு வரவேண்டும் என்றா? அல்லது அமைப்பிற்குள்ளிருந்து வரும் கலகங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றா? அல்லது ‘அன்பு சர்வாதிகாரம்’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றா?<br />
<br />
சமூகத்தைக் காப்பாற்ற இந்த ஜனரஞ்சக அரசியல் தலைவர்களைக் ‘களைந்துவிடலாம்’ என்று நீங்கள் நினைப்பதன்மூலம், மீண்டும் மீண்டும் நீங்கள் ஜனரஞ்சகக் கருத்தாக்கத்தை வலுப்படுத்தவும் நிரூபிக்கவுமே செய்கிறீர்கள்.<br />
<br />
எனவே இதில் குறுக்குவழிகளுக்கு இடமே இல்லை. ஜனரஞ்சக அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அவர்களுக்கு வாக்கு வங்கியை நிராகரியுங்கள். அதை சாத்தியமாக்குவதை நோக்கி உங்கள் உழைப்பை செலுத்துங்கள். தாராளவாதத்தை உங்கள் பண்பாட்டின் விழுமியமாக உள்ளே கொண்டு வந்து அதைப் பரப்புங்கள், பிரபலப்படுத்துங்கள், பரவலாக்குங்கள்.<br />
<br />
<br />
- <a href="https://twitter.com/iyad_elbaghdadi" target="_blank">ஐயாத் எல்-பாக்தாதி</a><br />
(தமிழில்: வ.விஷ்ணு)</div>
Vishnu Varatharajanhttp://www.blogger.com/profile/11225447679183044410noreply@blogger.com0