Posts

Showing posts from November, 2013
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

இரண்டாம் உலகமும் உலகத் திரைப்படங்களும்

முன்குறிப்பு: இது திரை விமர்சனம் அல்ல. வெறும் தேடுதல் வசதிக்காக ’திரை விமர்சனம்’ பிரிவில் இடம்பெற்றிருக்கிறது, அவ்வளவே           ஒரு நல்ல திரைப்படத்திற்கு வசனம், நல்ல திரைக்கதை, காட்சியமைப்பு, இயக்குனர் டச், இதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு திரைப்படத்தினுடைய முக்கியப் பணி, ரசிகனை இரண்டரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர வைப்பது. திரைப்படத்திற்கு entertainment முக்கியம். ஆனால் நம் ஊரில் entertainment என்றால் பொழுதுபோக்கு, காமெடி, ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைகள் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டார்கள். Entertainment என்பதன் உண்மையான அர்த்தம், பார்க்கிறவர் திசை திரும்பக் கூடாது, பார்க்கிற இரண்டரை மணி நேரமும் இயக்குனர் என்ன காட்டுகிறாரோ, எதைக் காட்டுகிறாரோ, அதைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற விளிம்பிற்கு அவர் சென்றிருக்க வேண்டும். இதனை மகேந்திரன், ஹிட்ச்காக், டரண்டினோ, மிஷ்கின், சிம்புதேவன், ஷங்கர் ஆகியோரது திரைப்படங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் (இதில் முதல் ஐவர் நல்ல படைப்பாளிகள், ஷங்கர் நல்ல வெகுஜன இயக்குனர் மட்டுமே, என்பது என் அபிப்பிராயம்).           ஒரு படத்தை அறிவு ரீதியாக நாம்

நவீன இந்தியாவின் சிற்பி

Image
          இந்தியா என்றால் என்ன? ஒரு நாட்டை எப்படி இது தனிநாடு என்று பிரிக்கலாம்? ஒன்று இனம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மதம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மொழி சார்ந்து பிரிக்கலாம், அல்லது பொதுவான எதிரி அடையாளம் காணப்பட்டு அதை சார்ந்து பிரிக்கலாம். ஆனால் இந்தியாவை எப்படி வரையறுப்பது? ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், பொதுவான எதிரி என்று ஆங்கிலேயரைக் கைகாட்டினால் அவர்கள் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரச்னையைத் தூண்டி விடுகிறார்கள், இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது? ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்று வரையறுப்பதில் எவ்வளவுக்கெவ்வளவு உலகின் மற்ற நாடுகளுக்கு சுலபமாக இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியாவுக்குக் கடினமாக இருந்தது. ஒருபுறம் 1923-ல் சவர்க்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்துத்துவக் கொள்கை. மறுபுறம் 1937-களில் ஜின்னாவிடம் தோன்றிய மத அடிப்படையிலான இஸ்லாமிய தேசியவாதம், இந்த இரண்டும் உலக வழக்கப்படி ஏதோ ஒன்றைச் சார்ந்த முதன்மையான தேசியவாதங்களாக இந்

மறதி விதி!

Image
          நீங்கள் ஒரு மாநகரப் பேருந்திற்காக உச்சிவெயிலில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேருந்தைத் தவிர மற்ற எல்லா பேருந்துகளும் வருவதுபோல் என்றாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எல்லாவற்றிற்கும் மேலாக வரிசை வரிசையாக உங்கள் பேருந்து எதிர்த்திசையில் வந்து உங்களைக் கடுப்பேற்றும். எல்லாம் தலைவிதி என்று நொந்துகொள்வீர்கள். அது தலைவிதி இல்லை, மர்ஃபி விதி!           உங்கள் பைக்கை மிதியோ மிதி என்று மிதிக்கிறீர்கள். ஊஹும், வண்டி ஸ்டார்ட் ஆகக் காணோம். நேராக வண்டியை ஒரு பைக் மெக்கானிக்கிடம் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். அவர் ஒரே மிதி மிதிக்க, பைக் ஒரு பெரும் உறுமலுடன் ஸ்டார்ட் ஆகி விடுகிறது. அப்பொழுது அந்த மெக்கானிக் உங்களை ஒரு மாதிரி பார்க்க, அந்தப் பார்வைக்குள்ளே ஒரு நமட்டுச்சிரிப்பு தென்படுமே, அந்த நமட்டுச்சிரிப்புதான் மர்ஃபி விதி!           ஆம், நம்மைச் சுற்றி இருக்கும் உயிர‌ற்ற பொருட்களுக்குத் தன் சூழ்நிலையை வசீகரிக்கும் தன்மை உள்ளதா என்கிற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக‌ நடந்துக் கொண்டு இருக்கிறது. "எதிலெல்லாம் தவறு நடக்கலாமோ, அதிலெல்லாம் தவறு நடந்தே தீரும்", என்பதுத