Posts

Showing posts from November, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நூலிலிருந்து சீரிஸ் - 3: அவுரங்கசீப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?

// கேள்வி: பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பாலியல் தொழில் சீர்குலைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சேர்த்து கணக்கிட்டால் demonetisation-இன் நன்மைகள் என்று இதுவரை 194 விஷயங்களை சொல்லிவிட்டார்கள். சயீத் அன்வர் போல் 194 ரன்னில் இருப்பது உறுத்தலாக இருக்கிறது. டெண்டுல்கரைப் போல் அது இருநூறைத் தொட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு சின்ன நப்பாசை. - க.பாஸ்கரன் பதில்: அன்புள்ள பாஸ்கரன். பணமதிப்புநீக்க நடவடிக்கையின் நன்மைகள் எப்பொழுதோ 200-ஐத் தொட்டுவிட்டது. பேனிக் ஆகிவிடுவீர்கள் என்பதால் அதை வெளியே சொல்லவில்லை. இப்பொழுது நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன். But remember, don't panic! 195. சென்ற ஆண்டு நவம்பர் 8ம் தேதி நம்மை ஒரு சூரியப் புயல் தாக்க இருந்தது தெரியுமா? ஆனால் நல்லவேளை, பிரதமர் அவர்கள் தொலைக்காட்சியில் ‘500, 1000 ஊ ஊ’ என்று அறிவித்தாலும் அறிவித்தார், அதன் விளைவாக தொலைக்காட்சி நிலையத்தில் ஒருவகையான மின்காந்த எதிர்வலைகள் எழுந்தன. அது சத்தமில்லாமல் விண்ணைப் பிளந்து, உலகின் தொலை தொடர்பு சாதனங்களை அழிக்க விரைந்து வந்துகொண்டிருந்த அந்த சூரியப் புயல

ஙே... :/

நம் சமூகம் மிக மிக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. பலவற்றை சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் உடனடியாக நிரூபித்துக்கொண்டிருக்கிறது: 1. “என் மதத்துல தீவிரவாதம் வளருதுன்னா சொல்ற? உன்னை சுட்டுக்கொல்லணும்” 2. “என்னையா நாஜின்னு சொல்ற? உன் இனத்தை இங்க ஆள விட்டா இப்படித்தான் பேசுவ” 3. “என்னையா பாசிஸ்டுன்னு சொல்ற? உன் பேச்சை முதல்ல நிறுத்தணும்” 4. “என்னடி திமிரு புடிச்சவன்னு சொல்ற? உன்னை அடக்க எனக்கு எத்தனை நிமிஷம் ஆகும்?” 5. “என்னையா ஆண்டை, அக்கினிக்குஞ்சுன்னு கலாய்க்கிற? அரசியல்ல ஒன்னு திரண்டதும் வாய் நீளுது?” 6. “பார்ப்பனீயத்தையா திட்ற? இதுக்குதான் அவங்கவங்களை வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும்ங்கிறது” 7. “என்னையா கலவரத்தைத் தூண்டுறேன்னு சொல்ற? பத்து பேரைக் கூட்டியாரத்துக்குள்ள மரியாதையா ஓடிரு” 8. “பெண் சுதந்திரமே நாங்க தரலைன்னு சொல்றியே? உன்னையெல்லாம் வெளிய படிக்க அனுப்பினதுக்கு இப்படித்தான் பேசுவியா?” 9. “என்னையா அறிவுஜீவின்னு திட்ற? என் அறிவு இருக்கிற ரேஞ்சுக்கு நான் சொல்றதெல்லாம் உனக்கு முதல்ல புரியவே புரியாது” 10. “என்னையா மதவாதின்னு சொல்ற? இவ்வளவு காலம் அமைதியா இருந்த

கேப்டன் கோலியும் கீப்பர் தோனியும்: கொண்டாடப்பட வேண்டிய தனித்துவமான உறவு

Image
          கேப்டன் பொறுப்பு கைமாறியுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இன்று அவர்களிடையேயான உறவு என்பது ஒருவருக்கொருவரின் கருத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ------------------------------------------------------------------------------- Scroll.in வலைதளத்தில் சேத்தன் நருலா எழுதிய ‘The unique relationship between captain Virat Kohli and keeper MS Dhoni is one India should cherish' என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. கோலியின் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. ------------------------------------------------------------------------------- Courtesy: Dibyangshu Sarkar/AFP           இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - 40-வது ஓவரின் முதல் பந்தை பும்ரா முழுநீளத்தில் வீச, அது ஆன்டில் பெகுலுக்வாயோவின் பின்னங்காலில் பட்டென்று இறங்கியது. ’அவுட்!’ என்று பும்ரா அப்பீல் எழுப்ப, அம்பயர் பால் ரெய்பெல் இல்லை என்று தலையாட்டினார். உடனே அம்பயரை மறந்துவிட்டு அனைவரும் பேட்ஸ்மேன் ஸ்டம்பிற்குப் பின்னே பார்வையை செலுத்தினர்.     

நூலிலிருந்து சீரிஸ் - 2: இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்

// கேள்வி: இந்த இல்லூமினாட்டி பக்தர்கள் செய்யும் பிடிவாதம் இருக்கிறதே, அதை சமாளிக்கவே முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன். - க.பாஸ்கரன் பதில்: அன்புள்ள பாஸ்கரன், கவலைப்படாதீர்கள். எனக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. “இந்த இல்லூமினாட்டி பக்தர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன்” என்று இல்லூமினாட்டியின் தலைவர் பிரான்சிஸ்கோ ராக்பெல்லர் எழுதியிருந்தார். படித்ததும் கண்கலங்கிப் போனேன். இல்லூமினாட்டி பக்தர்களை நான் செல்லமாக இல்லூக்கள் என்று அழைப்பேன். ஏனெனில் இல்லூக்கள் குழந்தைகள் போல பாஸ்கரன். இதுதான் இப்படித்தான் என்று அடம் பிடிப்பார்கள். சொப்பு சாமான் வைத்து ஒரு குழந்தை சமையல் செய்வதுபோல், கடற்கரை மணலில் கைதுளாவி இரண்டு சிறுவர்கள் மாளிகை கட்டுவதுபோல், இல்லூக்கள் யூடியூபில் நான்கு வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆராய்ச்சி செய்துவிட்டேன் என்று குதூகலிப்பார்கள். அந்தக் குதூகலத்தை ரசிக்கும் பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் பாஸ்கரன். ஒரு பொறுப்பான பெற்றோரைப் போல் நாம்தான் அவர்களைக் கொஞ்சி சமாதானப்படுத்த வேண்டும். அவர்களை தெர்மாக்கோல் போல மென்மையாகக் கைகளில்