Posts

Showing posts with the label மொழிபெயர்ப்புகள்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹிரோஷிமா மேயர் மட்சூயி கசூமியின் அமைதிப் பிரகடனம் - ஆகஸ்ட் 6, 2020

அமைதிப் பிரகடனம் மட்சூயி கசூமி, மேயர், ஹிரோஷிமா நகரம் ஆகஸ்ட் 6, 2020 ஆகஸ்ட் 6, 1945 அன்று, ஒரே ஓர் அணுகுண்டு எங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் அழித்தது. “இந்த இடத்தில் இன்னும் 75 வருடத்திற்கு ஒன்றும் முளைக்காது” என்ற வதந்தியொன்று அப்பொழுது இருந்தது. ஆனால் ஹிரோஷிமா மீண்டது; இன்று அமைதியின் குறியீடாக, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தரும் இடமாக விளங்குகிறது. மனிதகுலம் இன்று கொரோனா வைரஸ் தொற்று என்ற புதியதோர் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்தகாலப் பேரழிவுகளிலிருந்து நாம் கற்ற பாடங்களின் மூலம் நம்மால் இதைக் கடந்துவர முடியும். சென்ற நூற்றாண்டில் 1918-ல் தொற்று நோய் பரவியபோது அது கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து மனிதகுலத்தையே அச்சுறுத்தியது. காரணம், முதலாம் உலகப்போரில் ஒன்றோடொன்று போரிட்ட நாடுகளால் அத்தொற்றுநோயை ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியவில்லை. அதன் பிறகு நிகழ்ந்த தேசியவாதங்களின் எழுச்சி, இரண்டாம் உலகப்போருக்கும் அணுகுண்டு வீச்சிற்கும் வழிகோலியது. வலிமிகுந்த இக்கடந்தகாலம் மீண்டும் நம் கண்முன்னே நடைபெற நாம் அனுமதித்துவிடக்கூடாது. குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதத்தை சிவில் ...

ஜெர்மன் அதிபரின் யத் வாஷெம் உரை - ஜனவரி 23, 2020

பிராங்க்-வால்டர் ஷ்டைன்மையர், குடியரசுத் தலைவர், ஜெர்மனி நாள்: ஜனவரி 23, 2020 இடம்: யத் வாஷெம், யெருசலேம்/இஸ்ரேல் “என்னை இங்கு வரவைத்த ஆண்டவனின் முன்பு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்துக்கொள்கிறேன்." இன்று யத் வாஷெம்மில் உங்களிடையே உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன். யூத இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு அணையாச் சுடர் இங்கே யத் வாஷெம்மில் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த இடம் அவர்கள் அனுபவித்த சித்திரவதையை நினைவூட்டுகிறது. லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்த சித்திரவதையை. இந்த இடம் அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது - ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கையையும். இந்த இடம் சாமுவெல் டைடெல்மானை நினைவுகூர்கிறது. டைடெல்மான் மக்காபி வார்சா அணிக்காகப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர். அவருடைய சகோதரி ரேகா, சப்பாத் அன்று அவருடைய அம்மாவுக்கு சமையலில் ஒத்தாசை செய்வாள். அவளை இந்த இடம் நினைவுகூர்கிறது. இந்த இடம் இடா கோல்ட்பிஷ்ஷை நினைவுகூர்கிறது, அவருடைய மூன்று வயது சிறுவன் விலியை நினைவுகூர்கிறது. அக்டோபரில் அவர்கள் சிசினாவோ கெட்டோவுக்கு அனுப்பப்பட்...

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது. தாராளவாதப் போக்குடைய மக்கள் இல்லாதவரை தாராளவாத ஜனநாயகம் சாத்தியமில்லை. ஜனநாயகம் என்பது வெறும் உடல்தான். அதற்கு உயிரூட்டுவது தாராளவாதமே. தன்னுடைய தனித்துவ பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியதொரு தாராளவாதக் கொள்கையை ஒரு நாடு கண்டெடுக்காதவரை, அவற்றைப் பரவலாக்காத வரை, அந்நாட்டில் தாராளவாத மக்கள் உருவாக மாட்டார்கள். இதில் குறுக்குவழிகள் இல்லவே இல்லை. தாராளவாத ஜனநாயகம் உங்கள் நாட்டில் நிலைபெற விரும்பினால், அதற்குத் தேவையான அறிவியக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். சகிப்புத்தன்மையற்ற ஜனநாயகத்தின் ஆபத்து வெறும் சகிப்பின்மை மட்டுமல்ல; நிலையின்மையும் உறுதியின்மையும் அதன் அடிப்படை இயல்புகளாகும். ஜனரஞ்சக அரசியல் தலைவர்கள் சகிப்பின்மையோடு இருப்பது அல்ல பிரச்னை. பிரச்னை என்னவென்றால், இவர்களுக்கு வெகுமக்கள் ஆதரவும், பரவலான வாக்கு வங்கியும் இருப்பதுதான். “நம்முடைய தனித்துவ உயரிய தேசத்தை ஆபத்தான ‘மற்றவர்களும்’ ‘பண்பாட்டை மறந்த மேட்டுக்குடியினரும்’ தனதாக்கிக்கொள்கிறார்கள்; நம்மிடமிருந்து நம் உரிமத்தைப் பிடுங்கிக்க...

ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆண்களுக்கு - Ejike

முன்குறிப்பு: கீழே ‘ஆண்’ என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில சமயம் அது ஆண் என்னும் பாலியல் அடையாளத்தைக்(ஆண்) குறிக்கிறது, பல முறை அது ஆண் என்னும் ஆதிக்க அடையாளத்தைக்(ஆவ்ம்பள) குறிக்கிறது. ஒரே வாக்கியத்திலேயே இரண்டும் வரலாம். எனவே இதைப் படித்துவிட்டு ‘எல்லா ஆணும் அப்படியா?’ என்று நீங்கள்  ஆண் சமூகத்திற்காகப் பொங்கினால், ஒன்று நீங்கள் அடையாளங்களை மாற்றிப் போட்டுக் குழப்பிக்கொண்டீர்கள் என்று அர்த்தம். அல்லது ஆதிக்க ஆணாகவே நீங்கள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அல்லது இந்தப் பதிவு எளிமையாக எழுதப்படவில்லை என்று அர்த்தம். ட்விட்டரில் Ejike என்னும் பதிவர் எழுதியவற்றின் மொழிபெயர்ப்பு இது. ------------------------------------------------------------- ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வெளியே வரும் ஆண்கள், பிற ஆண்களின் வன்முறைக்குப் பெண் சமூகம் உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். ‘அடடா, சக ஆணை விட இவன் மேலானவனாக இருப்பான் போலவே’ என்று பிற ஆண்களையும் உங்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கும் பெரும்பணியைப் பெண்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. ...

கேப்டன் கோலியும் கீப்பர் தோனியும்: கொண்டாடப்பட வேண்டிய தனித்துவமான உறவு

Image
          கேப்டன் பொறுப்பு கைமாறியுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இன்று அவர்களிடையேயான உறவு என்பது ஒருவருக்கொருவரின் கருத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ------------------------------------------------------------------------------- Scroll.in வலைதளத்தில் சேத்தன் நருலா எழுதிய ‘The unique relationship between captain Virat Kohli and keeper MS Dhoni is one India should cherish' என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. கோலியின் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. ------------------------------------------------------------------------------- Courtesy: Dibyangshu Sarkar/AFP           இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - 40-வது ஓவரின் முதல் பந்தை பும்ரா முழுநீளத்தில் வீச, அது ஆன்டில் பெகுலுக்வாயோவின் பின்னங்காலில் பட்டென்று இறங்கியது. ’அவுட்!’ என்று பும்ரா அப்பீல் எழுப்ப, அம்பயர் பால் ரெய்பெல் இல்லை என்று தலையாட்டினார். உடனே அம்பய...

கர்னல் ராபர்ட் கில்லிப்ரூவின் அறிவுரை

கர்னல் ராபர்ட் கில்லிப்ரூ (ஓய்வு, அமெரிக்க ராணுவம்) எழுத்தாளர் ----------------------------------------------------------------------------------- பல ஆண்டுகளுக்கு முன் நான் ராணுவப் பணிக்குள் நுழைவதற்கு முன்பாக, கடற்படையில் பணிபுரிந்த ஒரு ஓய்வுபெற்ற  கர்னலை சந்தித்தேன். இரண்டாம் உலகப்போரில் தராவாவில் சண்டையிட்டவர். மிகவும் புத்திகூர்மையுள்ள மனிதர். அவர் எனக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார். அவர் எனக்கு சொன்னதை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்கிறேன்: ராணுவ வீரனாகவே நீங்கள் பணிபுரிய விரும்புகிறீர்களா? நல்லது. உங்கள் தாய்நாட்டை நீங்கள் காக்கப்போகிறீர்கள். அதற்காக முதலில் மிக்க நன்றி. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு காலம் ராணுவ சீருடையில் இருக்கப்போகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாக நீங்கள் உங்கள் தாய்நாட்டைப் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்பது ராணுவ வாழ்க்கைக்கு நேர் எதிரானது. அது குழப்பமானது; நேர்மையற்றது; ஒழுங்கற்றது; அதே நேரத்தில் அது மகத்தானதும் மகிழ்ச்சியானதும் சுதந்திரமானதும் கூட. நாம் அவ்வாறு அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் ...

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது?

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது? சில காரணங்கள்: ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் அரசு இயந்திரம் தன்னுடைய போர்ப்படையை முடுக்கிவிடும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று பெயர் சூட்டும். ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் பிற நாடுகள் அப்பிரச்னையில் தலையிட முற்படும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சி’ என்று பெயர் சூட்டும். சுருங்கச் சொன்னால், சர்வாதிகாரமும் பிற நாடுகளும் உபயோகிக்கும் வன்முறைக்கு ஆயுதப் போராட்டத்தால் மறு அங்கீகாரம் கிடைத்துவிடும். ஆயுதப் போராட்டத்தைதான் சர்வாதிகாரிகள் விரும்புவார்கள்; அமைதியான போராட்டத்தில் கூட வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டிவிட முயற்சிப்பார்கள். அப்பொழுதுதான் அவர்களால் தன் தரப்பு வன்முறைக்கு நியாயம் கற்பிக்க முடியும். ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் ஒடுக்குபவர்கள் ஒடுக்கப்படுபவர்களை ‘அதோ தீவிரவாதிகள்’ என்று எளிதாக முத்திரை குத்தி, விவாதத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுவிடுவார்கள். ஆயுதப் போராட்டத்தின் பணிகள் உடல்பலத்தையும் அதிகம் நம்பியிருப்பவை (பெரும்பாலும் ஆண்களே அதில் ஈடுபடுகிறார்கள்; பெண்களின் ...

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

Image
livemint இதழில் குனல் சிங் எழுதிய ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' என்ற கட்டுரையின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது. தோனியின் பிறந்த தினத்தன்று வெளியிடப்படுகிறது. --------------------------------------------------------------------------------------- Photo: Hindustan Times தோனி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிலைபெற்றிருப்பார். அப்போது கரக்பூரில் இந்திய ரயில்வேயில் வேலை செய்தபோது கூட தங்கியிருந்த தன் நண்பர் சத்ய பிரகாஷை தன் விடுதி அறைக்கு அழைப்பார். பழைய குறும்புத்தனம் ஒன்றை தன் நண்பன் மீது நிகழ்த்த வேண்டும் என்று அவருக்காகக் காத்திருந்து, அவர் வந்ததும் யாரோ பிசிசிஐ அமைப்பின் சீனியர் ஒருவரோடு ஃபோனில் பேசுவதுபோல் நடிப்பார். அந்தப் போலி தொலைப்பேசி உரையாடலில் தோனியின் கதாபாத்திரம் சொல்லும், “எனக்கு கேப்டனாக இருப்பதில் துளியும் விருப்பமில்லை, என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இக்காட்சி 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும் முன் தோனி ...

இந்தியாவும் உலகமும் - ஜவகர்லால் நேரு

Image
லக்னோவில் நவம்பர் 22, 1952 அன்று ஒரு பொதுக் கூட்டத்தில் நேரு ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை நேருவின் நினைவு தினத்தையொட்டி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். இக்காலத்தில் நாம் அவசியமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டிய பல கருத்துகள் இச்சொற்பொழிவில் இருக்கின்றன. ---------------------------------------------------------------------------------------------------------------------- சகோதரிகளே! சகோதரர்களே!           சென்ற முறை தேர்தலுக்கு முன்னால் நான் லக்னோ வந்தபோது தேசமே உற்சாகத்தில் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் தனிப்பட்ட அளவில் அத்தேர்தல் சுற்றுப்பயணம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் இந்திய மக்களோடு மேலும் நெருக்கமாவதைப் போல் உணர்ந்தேன். அப்பொழுதுதான் புரிந்தது, தில்லியில் எனக்கு எவ்வளவு பணிச்சுமைகள் இருந்தாலும், இந்தியாவின் மற்ற இடங்களுக்கும் நான் தொடர்ந்து வருகை புரிந்தபடி இ...