மரணம்

மரணிப்பது நாம் என்றாலும்
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
மரணத்தின் அருகாமையை அடைந்தாலும்
மரணத்தை எட்டும் அந்தக் கணத்தில்
மரணத்தை உணராமலேயே
நாம் மரணித்துவிடுகிறோம்.
நம்முடைய மரணத்தை
நம்மைச் சார்ந்தோரே உணர்கிறார்கள்.
நாம் இனியும் இங்கில்லை
இனியும் உலாவ மாட்டோம்
பேச மாட்டோம்
உயிர்த்திருக்க மாட்டோம்
என்ற உண்மை அறைகையில்
அவர்களுக்கு ஏற்படும் உணர்வு
அதுவே நம்முடைய மரணம்.
அதுவே மரணத்தை உணர்தல்.
நம்முடைய மரணம்
நம்மைச் சார்ந்தோருக்கு நிகழ்கிறது.
மரணிப்பது நாம் என்றாலும்
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
அது நிகழ்வதற்குள்
நாம் மரணித்துவிடுகிறோம்.
- வ.விஷ்ணு
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
மரணத்தின் அருகாமையை அடைந்தாலும்
மரணத்தை எட்டும் அந்தக் கணத்தில்
மரணத்தை உணராமலேயே
நாம் மரணித்துவிடுகிறோம்.
நம்முடைய மரணத்தை
நம்மைச் சார்ந்தோரே உணர்கிறார்கள்.
நாம் இனியும் இங்கில்லை
இனியும் உலாவ மாட்டோம்
பேச மாட்டோம்
உயிர்த்திருக்க மாட்டோம்
என்ற உண்மை அறைகையில்
அவர்களுக்கு ஏற்படும் உணர்வு
அதுவே நம்முடைய மரணம்.
அதுவே மரணத்தை உணர்தல்.
நம்முடைய மரணம்
நம்மைச் சார்ந்தோருக்கு நிகழ்கிறது.
மரணிப்பது நாம் என்றாலும்
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
அது நிகழ்வதற்குள்
நாம் மரணித்துவிடுகிறோம்.
- வ.விஷ்ணு