Posts

Showing posts with the label திரை விமர்சனம்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எலிமென்டரி

Image
அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எலிமென்டரி' ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலும், பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷெர்லாக் சீரியலும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கின. அதனாலோ என்னவோ, இரண்டையும் ரசிகர்கள் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். எனக்கு இவை இரண்டையும் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகத்தில் இயங்குபவை. தனிப்பட்ட அளவில் எனக்கு பெனடிக்ட் கும்பர்பேட்ச் சிறந்த ஷெர்லாக்காகத் தெரிந்தாலும், எலிமென்டரி சீரியலில் வரும் சில காட்சிகளும் தருணங்களும் பிபிசி சீரியலைப் போகிற போக்கில் தூக்கி சாப்பிட்டு விடும். பிபிசி ஷெர்லாக் ஒரு ஹீரோ. ஆனால் எலிமென்டரி ஷெர்லாக் நம்மைப் போன்ற ஒருவன்; போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீள்பவன்; அவனுக்கும் உடல் உபாதைகள் வரும்; சக மக்களோடு சேர்ந்து பயணிக்கும் நிர்பந்தம் இருக்கும். இவற்றையெல்லாம் செய்தும்கூட அவன் ஒரு டிபிக்கல் ஷெர்லாக்காகவும் இருப்பான். அவ்வாறு இருக்க முயன்று இயல்பாகக் கஷ்டப்படுவான்;அதன் பாதிப்புகளை அனுபவிப்பான். எலிமென்டரியை நான் ஒரு சைக்கலாஜிக்கல் டிராமாவாகத்தான் வகைப்படுத்துவேன். ஒவ்...

‘பாகுபலி’ இந்திய சினிமாவின் பெருமையா? + பாகுபலி-2 குறு விமர்சனம்

Image
*Spoilers ahead* ஒரு கருத்தை வெளிப்படுத்தும் முறையை வைத்து அதை Depiction, Endorsement என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு கணவன் தன்னுடைய மனைவியை அடிப்பதுபோல் வெறும் காட்சிப்படுத்தினால் அது Depiction. அச்செயலை அத்திரைப்படம் நியாயப்படுத்த முயன்றால் அது Endorsement. இந்திய சமூகத்தில் இருக்கும் தலையாயப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவற்றைப் பற்றி மேம்போக்கான, அரைவேக்காட்டுத்தனமான பஞ்ச் டயலாக்குகள் பேசி கைதட்டல்கள் வாங்குவதையோ, அல்லது அப்பிரச்னைகள் அப்படித்தான் என்று நியாயப்படுத்துவதையோ, அல்லது அவற்றைக் கவனிக்காததுபோல் கடந்து போவதையோதான் பெரும்பாலான திரைப்படங்கள் செய்கின்றன. பாகுபலியும் அதற்கு விதிவிலக்கல்ல. இதன் பின்னணியில், நமக்கு முதலில் எழும் கேள்வி, ‘பாகுபலி’ இந்திய சினிமாவின் பெருமையா? Is ‘Baahubali’ the pride of Indian Cinema? சற்றும் யோசிக்காமல் ‘இல்லை’ என்று சொல்ல முடியும். ஏற்கனவேயே முதல் பாகத்தில் தமன்னா கதாபாத்திரத்திடம்(அவந்திகா) தன் ஆதிக்கத்தைப் பெருமையுடன் நிலைநாட்டியிருப்பார் கதாநாயகன். “கையில கத்தி, உடம்புல கவசம், ரத்த சிவப்பு கண்ணு, கோவத்தோட எரியுற மூஞ்சி; இந்த வெளி வேஷத்...

Puli

          Did you happen to be an avid reader of children's books like Siruvar Malar, Gokulam, Chutti Vikatan in the 90's? 'Madhanakamarasan' comic strips, stories of a 'Sooniyaa Kaari' wanting a 'Maragadha' stone, a small girl battling a giant, Vedhaalam, prophecies, talking birds, helping animals, kidnapped 'ilavarasi', 'Raatchasan' guarding a mountain, the tiny 'Chithirakullargal', cursing witches, cursed people, and a hero who finally defeat the evil forces, marry the princess, and ultimately become the king? Well, I did, and that's the precise reason why I thoroughly enjoyed 'Puli'. It was a nostalgic moment watching all my childhood fantasies coming true in the big screen, and I was very much comfortable with all the magical elements in the film. Thank you 21st century.           'Puli' is definitely not Chimbudevan's best, but my favourite director didn't disappoint me. It'...

ஜில்ஜில் ஜிகர்தண்டா!

Image
மு.கு: திரைப்படத்தின் போஸ்டர் வேற லெவல்! விரைவில் உத்திரவாதமாக நம் போஸ்டர்கள் உலகின் கவனத்தைப் பெறப்போகின்றன.           என்ன திரைக்கதைப் பாணி என்றே தெரியவில்லை. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது புழக்கத்தில் உள்ள திரைக்கதை உத்தியை உபயோகப்படுத்துகிறாரா என்றே தெரியவில்லை. சுமார் இருபது குறும்படங்களின் சேர்க்கை, அக்குறும்படங்களின் திரைக்கதையில் உள்ள சிறு சிறு முடிச்சுகள் அப்பொழுதே செம சுவாரசியமாக அவிழ்க்கப்படும். ஆனால் திரைப்படத்தின் மைய முடிச்சு ஒரு மெல்லிய இழை போல மொத்தக் குறும்படங்களையும் ஆக்கிரமிக்கும். இந்த மைய முடிச்சு ஒவ்வொரு குறும்படங்களிலும் வளர்ந்துக்கொண்டே சென்று இறுதிக் காட்சியில் பிரம்மாண்டமாக அவிழும். தடாரென்று சந்தோஷ் நாராயணன் எண்ட்ரி, சிம்ஹாவின் முறுக்கிய மீசை, வெறிகொண்ட பார்வை. உண்மையை உணர்ந்துக்கொண்ட பார்வையாளனின் கை முடி சிலிர்த்துக்கொள்கிறது. திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.           ஜிகர்தண்டா, கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை மாயாஜாலம். ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் சத்தியமாக அடுத்து என்ன ஆகும் என்று ...

Schindler's List (1993)

Image
“ஆஸ்கர் ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் எண்ணிக்கை 1200-க்கும் அதிகம். இன்று போலாந்தில் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை 4000-க்கும் குறைவு என்றால், ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் வழித்தோன்றல்களின் எண்ணிக்கை இன்று சுமார் 6000. அவர்கள் ‘ஷிண்ட்லர் யூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்” - என்றபடி இத்திரைப்படம் முடிவடைகிறது.            நண்பன் கார்த்திக் ஸ்ரீதர் பரிந்துரைத்ததன் பேரில் 'Schindler's List' படம் பார்த்து முடித்தேன். நம்மூர் இயக்குனர்கள் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் கண்ட கண்ட படத்திலிருந்தெல்லாம் திரைக்கதையை சுடுகிறார்களே, சரி, சுடுவதுதான் சுடுகிறார்கள், இதுபோன்ற உலக சினிமாவிலிருந்து சுட்டால் நமக்காவது நன்மை பயக்குமே என்று தோன்றியது. அந்த அளவிற்கு உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய, உருக்கிய படம். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படமாச்சே, வழக்கம்போல கணினியின் உபயத்தில் வர்ணிக்கமுடியாத உருவம் எல்லாம் கோரமாய் உறுமும் என்று நினைத்துப் பார்த்தால், முற்றிலும் வேறு ஒரு தளத்தில், எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த இனப் படுகொலையைப் பி...

12 Angry Men (1957)

Image
           நண்பன் ஆதித்யாவின் பரிந்துரையின் பேரில் "12 Angry men" என்னும் திரைப்படம் பார்த்து முடித்தேன். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களின் மீது எனக்குண்டான தனிப்பட்ட விருப்பத்தினை இப்படம் பன்மடங்கு அதிகரித்தது. நூறு குற்றவாளிகள் தப்பிக் கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது, என்கிற ஜனநாயக நீதிமுறையின் அடிப்படைத் தத்துவத்தை எத்தனை ஜூரிக்கள் உண்மையாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்ற பலமான கேள்வியை இப்படம் எழுப்புகிறது.            ஒரு 18 வயதுப் பையன் தன் தந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிற்பதாகப் படம் தொடங்குகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவன் கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டு விட்டது. கொலை செய்ததற்கான தண்டனை மரண தண்டனைதான் என்கிற சூழ்நிலையில் அவனுக்கு மரண தண்டனை அளிப்பதா வேண்டாமா என்று கலந்துரையாடி ஒரு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஒரு 12 பேரிடம் ஆணையிடுகிறார். அந்தப் பன்னிரண்டு பேரும் கலந்துரையாட ஒரு அறைக்குள் நுழைகிறார்கள்....

விஸ்வரூபம்

Image
                    IMDB ரேட்டிங் பார்த்தவுடன் விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நைட் ஷோவெல்லாம் போய், தூக்கம் தொலைத்து, அதிகாலை வீட்டிற்கு வந்து படுக்கையில் சாய்ந்தபோதுதான் தெரிந்தது, இது அவ்ளோ வொர்த் எல்லாம் இல்லை என்று. ஆங்காங்கே ஊசி குத்துவது போன்ற செருக் வசனங்கள், சில சமயம் வழவழா மொக்கை, சில இடங்களில் உண்மைச் சம்பவங்களின் துணுக்கு, சில இடங்களில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான ரசிகனின் ‘தலைவாஆஆ’ காட்சிகள், இதற்கு ஊடே நாடு கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, கடைசியில் செம சூப்பரான க்ளைமாக்ஸுடன் படத்திற்கு இனிதே தொடரும் போட்டிருக்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பே தடை செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய அமைப்பினர்களிடமிருந்து நான் முரண்பட்டாலும், படம் பார்த்த பிறகு அவர்களின் அச்சத்தை என்னால் உணர முடிந்தது. ஆம், சர்ச்சைக்குரிய காட்சிகள் சில அங்கங்கே தென்படுவதுபோலத்தான் தெரிந்தன. நிச்சயமாகத் தொழில்நுட்ப ரீதியாகத் தமிழ் சினிமாவை இப்படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்...