Posts

Showing posts from September, 2018
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்

Image
'அசாசின்ஸ் க்ரீட்' வீடியோ கேம் சீரிசில் கடைசியாக வந்த ‘அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்’ வீடியோ கேமை இப்பொழுதுதான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. அசாசின்ஸ், டெம்ப்ளார்ஸ் என்று இரண்டு எதிரெதிர் குழுக்கள் உலகம் முழுவதும் காலம் காலமாகப் போரிட்டு வருகின்றன. இரண்டுமே அமைதியை விரும்புபவை, ஆனால் வழிமுறைகள் வெவ்வேறு. ஒழுங்கின் மூலமாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று டெம்ப்ளார்கள் அதிகாரத்தைக் குவிப்பார்கள். இல்லை, கட்டற்ற சுதந்திரத்தின் மூலமாகவே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று அசாசின்கள் அதிகார பீடங்களைத் தகர்த்துக்கொண்டே இருப்பார்கள். இந்த அசாசின் குழு எப்படி உருவானது என்று சொல்லும் கேம்தான் இந்த ஒரிஜின்ஸ். 2007-ல் முதல் கேம் வந்தது. பத்து வருடங்கள் கழித்து பத்தாவது மெயின்ஸ்ட்ரீம் கேமாக ஒரிஜின்ஸ் வந்திருக்கிறது. இதற்கு முன்பு கடைசியாக வெளிவந்த யூனிட்டி (ப்ரெஞ்சுப் புரட்சி காலம்) மற்றும் சிண்டிகேட் (தொழிற்புரட்சி காலம்) சரியாக ஓடவில்லை (எனக்கு யூனிட்டி மிகவும் பிடித்தது, ஆனால் டெக்னிகல் பிரச்னைகள் நிறைய வந்து விளையாடும் மூடை ரொம்பவே கெடுத்தது). போச்சு, அசாசின்ஸ் க்ரீட் கேம்

அய்யப்பனும் Heteronormativity-யும்

நான் பார்த்து வியக்கும் சில நண்பர்கள் “என்ன அய்யப்பா, இனிமே ஜாலியா?” போன்ற பதிவுகளை ஷேர் செய்யும்போது சற்றே வருத்தமாக இருக்கிறது. Heteronormativity என்று இதற்குப் பெயர். அதாவது அய்யப்பனை ஓர்ப்பால் ஈர்ப்புள்ளவராகக் கற்பனை செய்ய முடியாது என்ற எண்ணத்தை நம்மை அறியாமல் மறைமுகமாகக் கடத்துவது. பாலின சிறுபான்மையினருக்கு இந்த ‘ஜாலியா’ போஸ்ட் சற்றே அசவுகரியத்தைக் கொடுக்கும். இன்றைய சபரிமலைத் தீர்ப்பு எனக்கு உண்மையில் கலவையான உணர்வுகளைத் தந்திருக்கிறது. வழக்கிற்கு சம்பந்தமில்லை என்றாலும் இந்தப் பிரச்னையில் பாலின சிறுமான்மையினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இணைத்தே பார்க்கிறேன். LGBTQA+ சமூகம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும். ஏனெனில் ஒரு விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒரு கடவுளைத் தங்களுடையதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள் என்றால், அந்த முனைப்பிற்கு சமூக-அரசியல் நியாயங்கள் இருக்கின்றன. அந்த நியாயத்தை உணர வேண்டும். குறைந்தபட்சம் லிபரல்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாவது அதை உணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. ஏனெனில் இது ஆண்-பெண் இருதுருவப் பி