Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஒரு பூட்டப்பட்ட அறைக்குள்



ஒரு பூட்டப்பட்ட அறைக்குள்
அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
அந்த அறைக்கான சாவியும் அவன்தான்.
கடவுள் உள்ளே எட்டிப் பார்க்கிறார்.
பாவம் அவரால்
கதவைத் தட்டத்தான் முடிகிறது.
கதவைத் திறக்க வேண்டுமென்றால்
அந்த சாவி வேண்டும்;
அந்த சாவி வேண்டுமென்றால்
கதவைத் திறக்க வேண்டும்.
கடவுள் காத்துக்கொண்டிருக்கிறார்,
எப்போது அவன் விழிப்பான் என்று.
அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்,
வேறொரு பூட்டப்பட்ட அறைக்குள்
கடவுளை அடைத்துவிட்ட நிம்மதியில்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி