சதுரங்கச் சுட்டிகள்
“ஒவ்வொரு மேட்ச்லயும் எதையாச்சும் கத்துக்கணும்!” வைஷாலி - பிரஞ்யானந்தா. விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க வாரிசுகள் என்று சொல்லுமளவிற்குத் தங்களின் பதக்கங்களின் மூலமாகத் தமிழகத்திற்குப் பெருமையை சேர்த்துக்கொண்டிருக்கும் சாதனைச் சுட்டிகள். அதிலும் பிரஞ்யானந்தா கடந்த 25ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஏழு வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த இந்திய சதுரங்க உலகத்தின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளார். மேலும் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான எட்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பிரஞ்யானந்தாவும் பன்னிரண்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வைஷாலியும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள் சுட்டீஸ் ! "சிலர் பிறக்கும்போதே திறமையுடன் பிறப்பார்கள் சார், வைஷாலி மாதிரியும் பிரஞ்யானந்தா மாதிரியும் !", என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார் இவர்களின் பயிற்சியாளர