Posts

Showing posts from October, 2016
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சம்பாரணும் காந்தியும்

Image
          26/10/16 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் ஜாக் புஷ்பதாஸ் எழுதிய “Champaran and Gandhi: Planters, Peasants and Gandhian Politics" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. திரு. அண்ணாமலை அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்ட ஒரு விஷயத்தை என் நினைவில் உள்ளவரை, என் நடையில் தருகிறேன்.           “காந்தி வழிநடத்திய இந்திய தேசிய காங்கிரஸினால் எல்லாம் சுதந்திரம் வந்துவிடவில்லை. இரண்டாம் உலகப்போரினால் பிரிட்டனுக்கு பொருட்சுமை ஏறியது, அது தாங்காமல்  ‘போராடுகிறார்கள், கொடுக்கிறோம்’ என்கிற சாக்கை வைத்து நாசூக்காக வெளியேறிவிட்டார்கள், அவ்வளவுதான்”, என்று சிலர் சொல்கிறார்கள். ஒரு அரை நூற்றாண்டு வரலாறைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் இயக்கம் சந்தித்த ரணங்களையும் செய்த சாதனைகளைகளையும் இப்படி ஒரே வாக்கியத்தில் எளிதாகக் கடந்து போய் விடுகிறார்கள்.           பல கல்லூரிகளுக்கும், குறிப்பாக வட மாநிலங்களில் அண்ணாமலை அவர்கள் உரையாற்றச் செல்லும்போது அங்குள்ள மாணவ மாணவிகள் அவரிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி, “சுதந்திரப் போராட்டத்தில் கா

செம்பாதை

Image
Picture taken from 'Red Corridor to be Redrawn' - The Hindu, dated 25/07/16 Extremism = தீவிரவாதம் Terrorism = பயங்கரவாதம்           நக்சலிசமும் மாவோயிசமும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவை இரண்டும் அழிக்கப்படவேண்டும் என்ற கருத்துள்ளவன் நான். ஆனால் நக்சலைட்டுகளையும் மாவோயிஸ்டுகளையும் நான் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்த மாட்டேன். “வன்முறையைக் கையில் எடுத்து மக்களை அச்சுறுத்துபவன் பயங்கரவாதி, பிறகு என்ன?”, என்று அகராதியைக் காட்டும் அளவிற்கு இது எளிய சிக்கல் இல்லை. முதலில் அவர்கள் இந்தியர்கள், பாதிக்கப்பட்டவர்கள், தீர்வுக்காக வன்முறையைக் கையில் எடுப்பவர்கள், அப்படி எடுத்தவர்களால் மூளைச் சலவை செய்யப்படுபவர்கள். அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்திருக்கக்கூடாது என்று நாம் பாடம் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இதில் அரசாங்கத்தின் மீதும் ஒட்டுமொத்தப் பழியை சுமத்த முடியாது. நாம் நக்சல் அமைப்புகளின் வளர்ச்சியையும் பழங்குடியினரின் சிக்கல்களையும் இணைத்தே பார்க்கவேண்டும். இன்று நக்சல்/மாவோ அமைப்புகள் மத்திய, கிழக்கு மற்