Posts

Showing posts from August, 2020
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

திருவாதிரை

(1 - ஆணுறுப்பில் விழுந்த பல்லி ) === “அடிக்கடி சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது டாக்டர்” என்றேன் கவலையுடன். “நான் கொடுத்த மருந்தைத் தடவினீர்களா?” “வலியோ தடிப்போ எதுவுமே இல்லையே டாக்டர்? மருந்து வேலை செய்ததா என்று எப்படித் தெரியும்?” “தடவினீர்களா இல்லையா?” “தடவினேன். இன்னும் கொஞ்சம் இருக்கிறது.” “சரி. இப்போதைக்கு ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது என்றால் வாருங்கள்.” என்று அனுப்பிவைத்தார். மீண்டும் நான் சொன்னதை நம்பியதுபோல் தெரியவில்லை. அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை நானே தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணத்தை அதன் மதிப்பு தெரியாமல் உதாசீனப்படுத்தி, பிறகு அதுவும் நிராகரிக்கப்பட்டு மீண்டும் திரளோடு திரளாகக் கலந்திருந்தேன். தோள்பட்டை அழுத்தியது. ஆபீசில் வேறு ஆட்குறைப்பு நடக்கப்போகிறது என்ற வதந்தியால் மனது அமைதியற்று இருந்தது. பல்லி விழுந்த நிகழ்வைக் கொண்டாடச் சொன்னார் அந்தத் தத்துவ அறிஞர். அவர் சொன்ன சில விஷயங்கள் புரியவில்லை. ஆனால் எதையோ தீர்க்கமாக சொல்வது போலவே சொன்னார். அப்பொழுதே கேட்டிருக்கவேண்டும். குறைந்தபட்சம் பத்து நிம

ஹிரோஷிமா மேயர் மட்சூயி கசூமியின் அமைதிப் பிரகடனம் - ஆகஸ்ட் 6, 2020

அமைதிப் பிரகடனம் மட்சூயி கசூமி, மேயர், ஹிரோஷிமா நகரம் ஆகஸ்ட் 6, 2020 ஆகஸ்ட் 6, 1945 அன்று, ஒரே ஓர் அணுகுண்டு எங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் அழித்தது. “இந்த இடத்தில் இன்னும் 75 வருடத்திற்கு ஒன்றும் முளைக்காது” என்ற வதந்தியொன்று அப்பொழுது இருந்தது. ஆனால் ஹிரோஷிமா மீண்டது; இன்று அமைதியின் குறியீடாக, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தரும் இடமாக விளங்குகிறது. மனிதகுலம் இன்று கொரோனா வைரஸ் தொற்று என்ற புதியதோர் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்தகாலப் பேரழிவுகளிலிருந்து நாம் கற்ற பாடங்களின் மூலம் நம்மால் இதைக் கடந்துவர முடியும். சென்ற நூற்றாண்டில் 1918-ல் தொற்று நோய் பரவியபோது அது கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து மனிதகுலத்தையே அச்சுறுத்தியது. காரணம், முதலாம் உலகப்போரில் ஒன்றோடொன்று போரிட்ட நாடுகளால் அத்தொற்றுநோயை ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியவில்லை. அதன் பிறகு நிகழ்ந்த தேசியவாதங்களின் எழுச்சி, இரண்டாம் உலகப்போருக்கும் அணுகுண்டு வீச்சிற்கும் வழிகோலியது. வலிமிகுந்த இக்கடந்தகாலம் மீண்டும் நம் கண்முன்னே நடைபெற நாம் அனுமதித்துவிடக்கூடாது. குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதத்தை சிவில்