Posts

Showing posts from 2013
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மகிழ்வன், மகிழினி

Image
“இந்தியாவில் 60-120 மில்லியன் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்”, என்ற அதிர்ச்சித் தகவலுடன் முடிந்தது அத்திரைப்படம். சராசரி எடுத்தால் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஜனத்தொகைக்கு நிகராக இருக்கும் அவர்களைப் பற்றி நாம் எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருக்கிறோம்? உங்கள் பக்கத்துவீட்டு நபரோ, உங்களது நெருங்கிய நண்பரோ, ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏன், இதைப் படிக்கிற நீங்கள் கூட உங்களது பாலியல் விருப்பத்தை இந்த சமூகத்திடம் மறைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஓரினச் சேர்க்கையாளர்களையும் திருநங்கையரையும் இந்தியச் சமூகம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது? LGBT(Lesbian Gay Bisexual Transgender) என்றழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் திருநங்கையர் குழுவான ‘சென்னை தோஸ்த்’ சென்னையில் மூன்று நாட்கள் ரெயின்போ திரைப்பட விழாவினை நடத்தியது. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், அவர்களது முன்னேற்றத்தில் பங்கு கொள்ள நினைப்பவர்கள், ஆகியோர் பல்வேறு மொழிகளில் இயக்கிய சிறந்த குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடனக் கலைஞரான அனிதா ரத்னமும் ஊடகவியலாளர் அப்சரா

ஒரு நாள் புனிதர்கள்

சுற்றுச் சூழல் மாசடைவதன் காரணங்களையும் அதன் விளைவுகளையும் மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகளையும் விளக்குக. காரணங்கள்: • நகரமயமாக்கல் • காடுகள் அழிப்பு • குளிர்சாதனப்பெட்டிக்குப் பழகிய வாழ்க்கை முறை • மரங்கள் மீள்நடாமை • பெட்ரோலிய எரிவாயு • தொழிற்சாலைக் கழிவுகள், இத்யாதி விளைவுகள்: • ஓசோன் மண்டலத்தில் ஓட்டைகள் • பூமி வெப்பமயமாதல் • கிரீன் ஹவுஸ் பாதிப்பு • ஆக்சிஜன் மற்றும் குடிநீர் பற்றாக்குறை • புதிய நோய்கள் உருவாக்கம், இத்யாதி மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகள்: • குறைந்த தூரப் பயணத்திற்கு மகிழுந்தை உபயோகபடுத்துவதைத் தவிர்க்கவும். • மிகவும் குறைந்த தூரமாக இருந்தால் நடக்கவும், அல்லது மிதிவண்டியைப் பயன்படுத்தவும். • தவிர்க்கவே முடியாது என்னும்போதே மகிழுந்தை வெளியே எடுக்கவும், இல்லையேல் வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும். • வீட்டிற்கு ஒரு மரமாவது நடவும். • பெட்ரோலிய வாகனங்கள் பயன்படுத்தலைக் குறைக்கவும் • குளிர்சாதனப் பெட்டி உபயோகிப்பதைக் குறைக்கவும், இத்யாதி நாளை மறுநாள் நடக்கவிருக்கும் 'Environmental Science' செமஸ்டர் தேர்வுக்காக ஒருநாள் புனிதர்கள் ஆகி ப

நான் பாஸ் பண்ணிட்டேன், அதனால பேச தகுதி வந்துருச்சு. போடா டேய்.

”என்னடா இன்னிக்கு ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் எப்படிப் பண்ண?” ”அட போங்கணா, கைனமேடிக்ஸ்தான் அவுட்டுன்னு பாத்தா ஃப்ளூயிட்லயும் முடிஷ்டானுக” “போச்சாடா?” “ணா, தட்டித் தூங்கிட்டானுகணா” “சரி விடுறா, ரெண்டு கஷ்டமான எக்சாம்ஸ் முடிஞ்சுது. அடுத்து தெர்மோடைனமிக்ஸ் ஒன்னுதான்” “க்கும், ஈசியான ஃப்ளூயிடுக்கே டவுசர் கழண்டுருச்சு, தெர்மோலாம் கண்டிப்பா அவுட்டுதான்ணா” “இதோ பாரு, இப்போ அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாத, அடுத்த எக்சாமுக்கு ஒழுங்கா படி, என்ன?” “சரிணா, ரெண்டு நாள் லீவு இருக்கு…” “அப்பறம் என்ன? மாஸ் பண்ணிரலாம் விடு. தெர்மோல ஒன்னாவது யூனிட்டும் ரெண்டாவது யூனிட்டும் செம சப்ப, ரெண்டு மணிநேரத்துல முடிச்சுரலாம், அதை நல்லா பாத்துக்கோ” “ஹும்ம்ம்” ”அஞ்சாவது யூனிட்ல செகண்ட் டாப்பிக் மட்டும் லைட்டா காண்டேத்தும், மத்தபடி அதுவும் சப்பதான்” “அப்படியாணா?” “அட ஆமாம்டா. தெர்மோலாம் பாக்க மட்டும்தான் கஷ்டமா இருக்கும், ஆனா உள்ளார மட்டும் பூந்துட்டோம்னா கேம் ஆடிடலாம். அப்பறம் நாலாவது யூனிட் தரவ் பண்ணிடு. ஷ்யூரா பதினாறு மார்க் சுளையா அள்ளிடலாம்” “இப்பதான்ணா எனக்கே ஒரு நம்பிக்கை வருது. தேங்க்ஸ்ண

கெட்டக் கனவு

“டேய் பக்ஸு! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன், ஆனா நீ எமோஷனல் ஆகக் கூடாது”, நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பி எதையோ சொல்ல வந்தான். “சொல்லு டூட், என்ன விஷயம்?, அமைதியாகக் கேட்டேன். “இல்லடா வேண்டாம்” “எனக்கு ஏலியன் நெஞ்சுடா, நீ சொல்லு”, தைரியமூட்டினேன். பையன் வேறு டீனேஜர் ஆகிவிட்டானா, எப்போது என்ன சொல்வான் என்று தெரியாது. பக்குவமாக, தோழமையாக டீல் பண்ணியாகவேண்டும். ”ஹூம்ம்ம்”, ஒரு நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டான். “அன்னிக்கு ஒரு கனவு வந்துதுடா. நீயும் நானும் எதையோ வாங்கக் கடைக்குப் போயிட்டிருக்கோம். ஜாலியா பேசிக்கிட்டே மெதுவா நடந்து போயிட்டிருக்கோம்” “ஓக்கே?” ”ரோடு கிராஸிங் வருது. நம்ம தேவநாதன் ரோடுதான். ஒன்வே. நீ ஏதோ ஒரு ஞாபகத்துல சைடுல பாக்காம ரோடைக் கிராஸ் பண்ற, சடன்னா ஒரு ஹாரன் சத்தம், 21G ஏ.சி. பஸ் ஒன்னு ஃபுல் ஸ்பீட்ல…” எனக்குப் புரிந்தது. கெட்டக் கனவு. தம்பி நடுங்கியபடித் தொடர்ந்தான். “ஃபுல் ஸ்பீட்ல உன்னைப் பாத்து வருது. பிரேக் அடிச்சு ரோடைத் தேய்க்கற சத்தம் கூசுது. எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே தெரியல. ஆனா உடனே சுதாரிச்சுட்டேன். அப்படியே “அண்ணாஆ

இரண்டாம் உலகமும் உலகத் திரைப்படங்களும்

முன்குறிப்பு: இது திரை விமர்சனம் அல்ல. வெறும் தேடுதல் வசதிக்காக ’திரை விமர்சனம்’ பிரிவில் இடம்பெற்றிருக்கிறது, அவ்வளவே           ஒரு நல்ல திரைப்படத்திற்கு வசனம், நல்ல திரைக்கதை, காட்சியமைப்பு, இயக்குனர் டச், இதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு திரைப்படத்தினுடைய முக்கியப் பணி, ரசிகனை இரண்டரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர வைப்பது. திரைப்படத்திற்கு entertainment முக்கியம். ஆனால் நம் ஊரில் entertainment என்றால் பொழுதுபோக்கு, காமெடி, ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைகள் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டார்கள். Entertainment என்பதன் உண்மையான அர்த்தம், பார்க்கிறவர் திசை திரும்பக் கூடாது, பார்க்கிற இரண்டரை மணி நேரமும் இயக்குனர் என்ன காட்டுகிறாரோ, எதைக் காட்டுகிறாரோ, அதைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற விளிம்பிற்கு அவர் சென்றிருக்க வேண்டும். இதனை மகேந்திரன், ஹிட்ச்காக், டரண்டினோ, மிஷ்கின், சிம்புதேவன், ஷங்கர் ஆகியோரது திரைப்படங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் (இதில் முதல் ஐவர் நல்ல படைப்பாளிகள், ஷங்கர் நல்ல வெகுஜன இயக்குனர் மட்டுமே, என்பது என் அபிப்பிராயம்).           ஒரு படத்தை அறிவு ரீதியாக நாம்

நவீன இந்தியாவின் சிற்பி

Image
          இந்தியா என்றால் என்ன? ஒரு நாட்டை எப்படி இது தனிநாடு என்று பிரிக்கலாம்? ஒன்று இனம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மதம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மொழி சார்ந்து பிரிக்கலாம், அல்லது பொதுவான எதிரி அடையாளம் காணப்பட்டு அதை சார்ந்து பிரிக்கலாம். ஆனால் இந்தியாவை எப்படி வரையறுப்பது? ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், பொதுவான எதிரி என்று ஆங்கிலேயரைக் கைகாட்டினால் அவர்கள் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரச்னையைத் தூண்டி விடுகிறார்கள், இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது? ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்று வரையறுப்பதில் எவ்வளவுக்கெவ்வளவு உலகின் மற்ற நாடுகளுக்கு சுலபமாக இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியாவுக்குக் கடினமாக இருந்தது. ஒருபுறம் 1923-ல் சவர்க்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்துத்துவக் கொள்கை. மறுபுறம் 1937-களில் ஜின்னாவிடம் தோன்றிய மத அடிப்படையிலான இஸ்லாமிய தேசியவாதம், இந்த இரண்டும் உலக வழக்கப்படி ஏதோ ஒன்றைச் சார்ந்த முதன்மையான தேசியவாதங்களாக இந்

மறதி விதி!

Image
          நீங்கள் ஒரு மாநகரப் பேருந்திற்காக உச்சிவெயிலில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேருந்தைத் தவிர மற்ற எல்லா பேருந்துகளும் வருவதுபோல் என்றாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எல்லாவற்றிற்கும் மேலாக வரிசை வரிசையாக உங்கள் பேருந்து எதிர்த்திசையில் வந்து உங்களைக் கடுப்பேற்றும். எல்லாம் தலைவிதி என்று நொந்துகொள்வீர்கள். அது தலைவிதி இல்லை, மர்ஃபி விதி!           உங்கள் பைக்கை மிதியோ மிதி என்று மிதிக்கிறீர்கள். ஊஹும், வண்டி ஸ்டார்ட் ஆகக் காணோம். நேராக வண்டியை ஒரு பைக் மெக்கானிக்கிடம் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். அவர் ஒரே மிதி மிதிக்க, பைக் ஒரு பெரும் உறுமலுடன் ஸ்டார்ட் ஆகி விடுகிறது. அப்பொழுது அந்த மெக்கானிக் உங்களை ஒரு மாதிரி பார்க்க, அந்தப் பார்வைக்குள்ளே ஒரு நமட்டுச்சிரிப்பு தென்படுமே, அந்த நமட்டுச்சிரிப்புதான் மர்ஃபி விதி!           ஆம், நம்மைச் சுற்றி இருக்கும் உயிர‌ற்ற பொருட்களுக்குத் தன் சூழ்நிலையை வசீகரிக்கும் தன்மை உள்ளதா என்கிற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக‌ நடந்துக் கொண்டு இருக்கிறது. "எதிலெல்லாம் தவறு நடக்கலாமோ, அதிலெல்லாம் தவறு நடந்தே தீரும்", என்பதுத

பிரஷருக்கு No... பிளஷருக்கு Yes - பாய்ச்சல் காட்டும் படகுப் பெண்!

Image
மேகனா... இந்திய விளையாட்டின் மகுடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மற்றுமோர் மரகதக்கல். பாய்மரப்படகு செலுத்தும் போட்டியில், காற்றின் துணைகொண்டு, அது வீசும் திசையை சாதகமாக்கி, லாகவமாகப் படகை செலுத்தி, பதக்கங்களை அள்ளும் இயற்கையின் செல்லப் பிள்ளை. பெண்களுக்கான 'ரேடியல்’ பிரிவின் தரவரிசைப் பட்டியலில்... இந்தியாவிலேயே இரண்டாவது இடம் இப்போது இவரிடம்! ''2010-ல் இந்திய அளவில் நடந்த 'ஓஷன் ப்ளூ டிராபி' (Ocean Blue Trophy)... பெண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட 'லேசர் 4.7 (பாய்மரத்தின் பரப்பளவைக் குறிப்பதுதான் 4.7 என்பது) பிரிவில் வெள்ளி வாங்கினேன். இந்த வருஷம் அதே பிரிவுல தங்கம் வாங்கியிருக்கேன்!'' என்று சந்தோஷப் புன்னகை பூக்கும் மேகனாவின் பதக்கப் பட்டியல், 'லேசர் ரேடியல்’ பிரிவில் வெள்ளி, '420' (படகின் நீளத்தை செ.மீட்டரில் குறிப்பது) பிரிவில் வெள்ளி... என நீள்கிறது. இத்தனை சாதனைகளையும் மேகனா நிகழ்த்திக் கொண்டிருப்பது ப்ளஸ் டூ படித்துக் கொண்டே! ''ஒன்பதாவது படிக்கும்போது 'தமிழ்நாடு செயிலிங் அசோஸியேஷன்'ல சம்மர் கேம்ப்

ட்ரிபிள் ஜம்ப் சிறுத்தை !

Image
ரோச்சல் மரியா மக்ஃபர்லேன், தமிழகத்தின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டப் புறப்பட்டிருக்கும் பெண் சிறுத்தை. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ட்ரிபிள் ஜம்ப் போட்டியில், '12.13 மீட்டர் தாண்டிய ஒரே வீராங்கனை' என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். 14 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலிலும் முதன்முதலில் 5.82 மீட்டர்களை அநாயசமாகக் கடந்து சாதனை புரிந்தவர். படிப்பது... சென்னை, செயின்ட் கொலம்பஸ் ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் ஒன். சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தமிழக அளவிலான சி.எம். டிராஃபியில் கடுமையான போட்டியின் இறுதியில் இவருக்கு கிடைத்திருப்பது தங்கம். ''அக்கா டானியா மரியா, நீளம் தாண்டுதல்ல ஸ்டேட் பிளேயர். அதைப் பார்த்துதான் எனக்கும். லாங்க் ஜம்ப், டிரிபிள் ஜம்ப்... ரெண்டுலயும் இப்போ நான் டாப்பர். போட்டிக்குப் போனா... மெடல் வாங்காம திரும்பினதில்ல. கடுமையான பிராக்டீஸ் பண்றதோட... போட்டி சமயத்துல எந்த பிரஷரையும் ஏத்திக்காம, மென்டல் லெவலையும் நான் சீரா வெச்சுக்குவேன். அதுதான் என்னோட பலம்னு நம்புறேன். நேரு ஸ்டேடியத்துல டிரிபிள் ஜம்ப் ஃபை

சரிங்...சாரிங்...

”இனிமே 75% அட்டெண்டன்ஸ் இருந்தாதான் ஹால் டிக்கெட் கொடுப்போம், என்ன?” “சரிங்” “அட்டெண்டன்ஸ் ஷீட்டை மாசா மாசம் எங்களுக்கு அனுப்பணும், என்ன?” “சரிங்” “பசங்களோட யூனிட் டெஸ்ட் மார்க்கெல்லாம் அப்பப்ப இங்க வந்துட்டே இருக்கணும், என்ன?” “சரிங்” “மூனு யூனிட் டெஸ்ட் மார்க்கையும் வெச்சுதான் இண்டர்னல் மார்க் போடணும், என்ன?” “சரிங்” “இன்னிக்கு செம மழை, அதனால நாளைக்கு லீவு விட்றணும், என்ன?” “..........” “என்ன?” “..........” “என்ன சத்தத்தையே காணோம்?” “சாரிங்” “என்னது? “சாரிங்” “மத்ததுக்கு எல்லாம் சரின்னு சொன்னீங்க?” “சாரிங்” “லீவு விடணும்னு கவர்மெண்ட் உத்தரவு போட்ருக்கே!” “சாரிங்” “என்னமோ பண்ணித் தொலைங்க!” “சரிங்” “அப்புறம் பாஸ் பர்சண்டேஜ் 75%ஆவது இருக்கணும், என்ன?” ”சரிங்” “இதுக்கேல்லாம் மட்டும் மண்டைய மண்டைய ஆட்டுங்க. நாளைக்கு லீவு விட சொன்னா மட்டும்...” “சாரிங்”

வணக்கம் வாழவைக்கும் சென்னை!

சென்னை என்னை மாற்றிய அளவிற்கு இதுவரை வேறு எதுவும் என்னை மாற்றியதில்லை.           புதிய பள்ளியில் பி.டி.மாஸ்டர் புதிய மாணவர்களைத் தனியாக நிற்க வைத்தார். ஒவ்வொருவரிடமும் எந்த ஊரு, என்ன ஆடுவ என்று விசாரித்துக் கொண்டே வந்தார். நானோ அப்பொழுதுதான் என் வாழ்நாளில் முதன்முதலாக ஒரு கூடைப்பந்து வலையைப் பார்க்கிறேன். அப்படியே வாய்பிளந்து நின்றுகொண்டிருந்தேன். “நீ எந்த ஊரு?” “உன்னைத்தான்டா, பிஞ்சு போன நெட்டையே பாத்துட்டு இருக்க?”, அப்பொழுதுதான் கவனித்தேன். “எந்த ஊரு?” “திருமங்கலம், மதுர கிட்ட” ”ஸ்கூல்ல என்ன ஆடுவ?” “ஹும்ம்ம், கிரிக்கெட்! பெறவு கோலி, கிட்டிபுல், பம்பரம்…”, எதற்கு எல்லோரும் சிரித்தார்கள் என்று அப்பொழுது புரியவில்லை. “என்னடா?” “நெஜமா சார்! நல்லா வ்ளாடுவேன். கிட்டியில எக்ஸ்டிரா கிச்சாங் நான் கேட்டதே இல்ல” “அதெல்லாம் இருக்கட்டும், வேற என்ன ஆடுவ?” “பம்பரத்துல கோஸ் எடுத்துக் காட்டறேன் சார், கையில ரெண்டு நிமிஷம் சுத்தும்…”, சிரிப்பு அதிகமானது. ”என்னடா நக்கலா? புரியாதவன் மாரியே பேசிட்டு இருக்க?”           அதற்குப் பிறகு பேந்தப் பேந்த விழித்தவன்தான், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந

மீண்டும் வனவாணி

Image
          வருடங்கள் கழித்து நான் படித்த பள்ளிக்கு இன்று சென்றிருந்தேன். நான் ஹேண்ட்பால் விளையாடிய இடத்தில் பிரைமரி ப்ளாக் கட்டிடம் உயர்ந்து நின்று கொண்டிருந்தது. கோல்போஸ்டாக உபயோகித்த மரத்தை வெட்டமுடியவில்லை போலும், கட்டிடத்திற்கு நடுவே நாங்கள் விளையாடியதற்கு சாட்சியாக எங்கள் கிறுக்கல்களை சுமந்துகொண்டு கம்பீரமாகத் தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிருந்தது அம்மரம். கிட்டத்தட்ட எனக்கு வகுப்பெடுத்த எல்லா ஆசிரியர்களையும் சந்தித்தேன். “அதோ, யார் வீட்டு எழவோ, பாய் போட்டு அழுவோம்னு நாலு கேஸு அங்க உக்காந்திருக்கு பாரு”, என்றுதான் கடைசி பெஞ்சு மாணாக்கர்களான எங்களை சாய் சார் விளிப்பார். இன்று அதை இன்னொரு முறை சொல்லவைத்து ரெக்கார்ட் செய்யவேண்டும் என்று விரும்பினேன். வந்தவர் பதில் வணக்கம் ஒன்றைப் போட்டுவிட்டு அவ்வளவு பெரிய உடம்புடன் திடீரென்று காணாமல் போனார். புவியியல் ஆசிரியையிடம், “இந்த ப்ரில்லியண்ட் பையன் மேல டஸ்டரைத் தூக்கி அடிச்ச மாதிரி, வேற யாராவது ப்ரில்லியண்ட் பையன் கிடைச்சானா உங்களுக்கு?”, என்று கேட்டேன். ”ஹாஹா, அதுதான்டா முதலும் கடைசியுமா ஒரு பையனை அடிச்சது”, என்று சிரித்துக்கொண்டே சொன

''எப்படியோ மாட்டிக்கிட்டேன்!''

Image
''மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது... ஆல்பின் மெக்ஃபர்லேன் , தொழிலதிபர்: ''ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிஞ்சு, ஃப்ரெண்டு ஒருத்தன் கூப்பிட்டானு பார்ட்டிக்குப் போயிட்டு லேட் நைட் வீட்டுக்குப் போனேன். வீட்ல கேட்டதுக்கு 'வேலை ரொம்பா ஜாஸ்தி’னு சொல்லிட்டுப் படுத்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்டு, '' நேத்து நைட் பார்ட்டி எப்படி மச்சி?''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு?'' சிங்காரவடிவேலு, ஆசிரியர்: ''என் மனைவிக்கு ஸ்ரீவைகுண்டம் கோயில் ரொம்பப் பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் அந்த ஊர்லேயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டா. எனக்கும் அந்த ஊர்லேயே வேலை கிடைச்சுது. ஆனா, எனக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை. அதனால, எனக்கு அங்கே வேலை கிடைச்ச விஷயத்தை மறைச்சு, சென்னைக்கு வந்துட்டோம். பத்து வருஷத்துக்கப்புறம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு, கிட்டதட்ட ஆறு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. இப்போ பேசினாலும்

வாழ்க்கை ஒரு போர்க்களம்!

Image
''போராட்டங்கள், இடையூறுகளால் பாதி வழியில் சிக்கிச் சின்னா பின்னமான  அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது... மதன் கார்க்கி, பாடலாசிரியர் : ''எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு வீட்டுக்குள்ள சிதறிச்சு. என்ன நடக்குதுன்னே புரியல.  அப்பா உடனே எங்களை  உள்ளேபோய் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு போலீஸுக்கு போன் பண்ணி விசாரிச்சாங்க. 'ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணிட்டாங்க. அதுக்காக தி.மு.க. ஆதரவாளர்களை அடிக்கிறாங்க. நாங்க உடனே உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா, ஊர் முழுக்க இந்த மாதிரி நிறையக் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால போலீஸால் நேரத்துக்கு வரமுடியலை.  அதுக்குள்ள எங்க கார் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க. அந்த ராத்திரி முழுக்க திக் திக்குன்னு பயந்துகிட்டே இருந்தோம். அதை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கும்!'' சேகர், ஆட்டோ ஓட்டுனர் : ''6 மாசத்துக்கு முன்னாடி கத்திப்பாராவுல போலீஸ்காரங்க எங்களை நிறுத்தி வெச்சுட்டாங்க. பாலத்துக்கு அ

235 எம்.எல்.ஏ.-க்களின் மின்னஞ்சல் முகவரி

234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது: 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 18 Athoor--- mlaathoor@tn.gov.in 19 Attur ---mlaattur@tn.gov.in 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 21 Bargur ---mlabargur@tn.gov.in 22 Bhavani---mlabhavani@tn.gov.in 23 Bhavanisagar---

இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல

Image
          இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல. வருடா வருடம் நடந்து வருவதுதான். 1063 மதிப்பெண்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற காரணத்திற்காக நெல்லையில் ஒரு +2 மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 'இது அப்பெண்ணின் தனிப்பட்ட முடிவு, கல்விமுறையிலோ சமூகத்திலோ குற்றமிருந்தால் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய அனைவருமே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்’, என்று இன்னமும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்காகக் கல்வியைக் கற்றுத் தருகிறதோ இல்லையோ, மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்ததுதான் இந்த கல்விமுறை செய்த மகத்தான சாதனை. இந்தப் போட்டி நிறைந்த உலகில் வேறு வழி இல்லை என்று ஒரு வாதம் வேறு வைக்கப்படுகிறது. கல்விமுறை ஒழுங்காக இருக்கிறதோ இல்லையோ, எங்களது கல்விச்சூழல் நிச்சயம் சரி இல்லை. மாணவ மாணவிகள் நிறைய மதிப்பெண்கள் எடுக்கட்டும், அதில் தவறேதும் இல்லை. அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களின் கடின உழைப்பு நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. ஆனால், அதிக மதிப்பெண்கள் வாங்காவிட்டால் உன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மாயத் தோற்றத்தை இந்த சமூகம் எங்களிடம் திணிக்கிறதே, அதுதான் பிரச்

இது வெறும் ஆரம்பம்தான்

இன்று எனக்கு நன்றாகத் தூக்கம் வரும் என்று நினைக்கிறேன். 721 பேரின் வாழ்க்கையை மீட்டெடுத்ததில் அடியேனுக்கும் சிறு பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது எதையோ சாதித்த உணர்வு மேலிடுகிறது. தமிழக முதல்வரின் ஏழைகளுக்காக இலவச வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காகப் புணரமைக்கப்பட்ட கால்நடை மருத்துவனைகளில் பணி நியமனம் செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் 843 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் 15 வருட சர்வீஸ் போட்டு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை தனியார் நிறுவனங்களில் சம்பளம் வாங்கி வந்தவர்கள், ஆயினும் அரசு வேலையாயிற்றே என்று அதை உதறித் தள்ளிவிட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர்களாக சென்ற வருடம் பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி இந்தப் பணியிடங்களுக்கு ஓப்பன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வர, அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்கள். ஒரே வருடத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானது. இதை விடக்கூடாது என்று நானும் திலீபன்

Schindler's List (1993)

Image
“ஆஸ்கர் ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் எண்ணிக்கை 1200-க்கும் அதிகம். இன்று போலாந்தில் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை 4000-க்கும் குறைவு என்றால், ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் வழித்தோன்றல்களின் எண்ணிக்கை இன்று சுமார் 6000. அவர்கள் ‘ஷிண்ட்லர் யூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்” - என்றபடி இத்திரைப்படம் முடிவடைகிறது.            நண்பன் கார்த்திக் ஸ்ரீதர் பரிந்துரைத்ததன் பேரில் 'Schindler's List' படம் பார்த்து முடித்தேன். நம்மூர் இயக்குனர்கள் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் கண்ட கண்ட படத்திலிருந்தெல்லாம் திரைக்கதையை சுடுகிறார்களே, சரி, சுடுவதுதான் சுடுகிறார்கள், இதுபோன்ற உலக சினிமாவிலிருந்து சுட்டால் நமக்காவது நன்மை பயக்குமே என்று தோன்றியது. அந்த அளவிற்கு உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய, உருக்கிய படம். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படமாச்சே, வழக்கம்போல கணினியின் உபயத்தில் வர்ணிக்கமுடியாத உருவம் எல்லாம் கோரமாய் உறுமும் என்று நினைத்துப் பார்த்தால், முற்றிலும் வேறு ஒரு தளத்தில், எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த இனப் படுகொலையைப் பின்னணியில் வைத்து, நெஞ்சை உலுக்கும்  ஆ

எதுவா இருந்தாலும் இவங்ககிட்ட டீல் பண்ணிக்குங்க

Image
          வாழ்க்கையில் ஒரு நல்ல ஆசிரியர் எல்லோருக்கும் திடீரென்று என்றாவது வாய்த்துவிடுகிறார் ! அவரது பார்வையில் படும் நூறு முகங்களில் நாமும் ஒருவராக ஜஸ்ட் லைக் தட் கடந்து போனாலும் நம்மைப் பொறுத்தவரையில் நம்மிடையே ஒரு பெரும் மாற்றத்தினை உண்டாக்கிவிட்டுப் போயிருப்பார் அவர். நாம் சிந்திக்கும் முறையிலிருந்து விரும்புகிற பாடங்கள் வரை அத்தனை விஷயங்களிலும் ஏதேனும் ஒரு பாதிப்பை உண்டு பண்ணிவிட்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அடுத்த செட் மாணவர்களை கவனிக்கத் துவங்கிவிடுவார் ! நாம் இன்று இவ்வாறு இருக்கிறோம் என்றால், நாம் இத்தனை எண்ட்ராப்பிகளை இந்தப் பிரபஞ்சத்திற்கு அளித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அதில் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருப்பவர் நிச்சயமாக ஒரு ஆசிரியராகத்தான் இருக்க முடியும் ! ஒன்பதாம் வகுப்பிலிருந்து எனக்கு வாய்த்த இயற்பியல் ஆசிரியர்கள் என் சிந்தனைப் போக்கை எப்படியெப்படியெல்லாமோ செலுத்தினார்கள். கூடவே நம்ம சுஜாதா சாரோட புக்குகளும் சேர்ந்து போக, “ரிலேட்டிவிட்டி, குவாண்டம் தியரி, ஸ்பெல்லிங் தெரியுமா ?”, என்று அம்மாவிடம் சீன் போட்ட கூத்துகளை எல்லாம் இன்று நினைத்தால் கொஞ

பேட்மேன் - ஜோக்கர்

Image
          "The man who laughs", என்னும் காமிக் புத்தகத்தை வாசித்து முடித்தேன். உலகில் அனைவருக்கும் பயத்தை உண்டு பண்ணுகிற, மிகவும் அபாயகரமான, அதே சமயம் அனைவருக்கும் பிடித்த சைக்கோ வில்லனான ’Joker' முதன்முதலில் தோன்றியது இந்தக் கதையில்தான். திடீரென்று காத ்தம் பெருநகரத்தில் பல இடங்களில் பலருடைய சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. சடலங்கள் அனைத்தும் வெள்ளை வெளேர் என்று வெளுத்துப்போய் பேயறைந்து, கண்கள் வெளியே திமிற யத்தனிப்பதுபோல் காணப்படுகின்றன இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் பேட்மேனும், போலீஸும் முடியைப் பிய்த்துக் கொண்டு இருக்க யாருமே எதிர்ப்பார்க்காத விதமாகத் தோன்றுகிறான் ஜோக்கர்.            இரசாயனம் பட்டதால் வெள்ளையான முகம், பச்சை முடி என்று கோமாளி போல் காட்சியளிக்கும் ஜோக்கர் இந்த உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் சுவாரசியமானது. ஒரு பத்திரிகையாளர் சடலங்கள் உள்ள இடத்தில் நின்று, நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக்க திடீரென்று அவரது முகமும் வெள்ளை ஆகிறது, கண்கள் எங்கோ பார்க்க முகம் பேயறைந்து