Posts

Showing posts with the label சாரல் தமிழ் மன்றம்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பதினொன்றாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - ஒரு நீட்சி

Image
          சாரல் தமிழ் மன்றத்தில் எது நடக்கிறதோ இல்லையோ, புத்தகத் திறனறிதல் சந்திப்பு வாரா வாரம் தொடர்ந்து நடைபெற்றே ஆகவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவரை பதினொரு புத்தகங்கள் தங்குத் தடையின்றித் திறனறியப்பட்டுள்ளன. சாரல் தமிழ் மன்றத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு spin off என்று சொல்லலாம். மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வளர்ச்சியிலோ அல்லது முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்தோ இருக்கும்போது இந்நிகழ்ச்சி மட்டும் சற்றே தனித்து நிற்கிறது. அறிவுப் பரிமாற்றம் மட்டுமே இந்நிகழ்ச்சியின் குறிக்கோள். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு வசதியோ அவ்வாறு பேச முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஒரு புத்தகம் பற்றிப் பேசும்போது, இது தமிழ் மன்றம் நடத்தும் நிகழ்ச்சி, எனவே பேச்சில் ஆங்கிலக் கலப்பு இருக்கக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பேசி, அதனால் புத்தகம் சொல்ல வந்ததை சொல்லாமல் கருத்தில் கோட்டை விடுவதைத் தவிர்க்கவே இப்படி. சொல்ல வருகிற செய்தி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதே முழுமுதல் எதிர்ப்பார்ப்பு. அதனால்தான் ஒவ்வொரு முறையும் புத்தகத் திறனறிதல் சந்திப்பு தொடர்பாக நண்பர்களுக்கு செ...

எட்டாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - நிறைவேறிய நோக்கம்?

Image
          சாரல் தமிழ் மன்றத்தின் ’புத்தகத் திறனறிதல் சந்திப்’பிற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, புத்தகம் வாசிக்கத் தூண்டுவது. இரண்டாவது, நம்மைச் சுற்றியுள்ள அரசியல்/சமூக/பொருளாதார/இன்னபிற பிரச்னைகளைக் குறித்த ஒரு தெளிவான பார்வையையும் புரிதலையும் என்றும் முடிவு பெறாத ஒரு சிந்தனை ஓட்டத்தையும் உருவாக்குவது.           சென்ற வாரம் நடந்த ‘பார்த்திபன் கனவு’ புத்தகத் திறனறிதலின்போது முதல் நோக்கம் சற்றே நிறைவேறியது. நிறைய மாணவர்கள் அப்புத்தகம் வாசிக்கக் கிடைக்குமா என்று கேட்டனர். நேற்று முன்தினம் நடந்த ‘இந்தியப் பிரிவினை’ புத்தகத் திறனறிதலின்போது இரண்டாவது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சி ஏற்பட்டது. நண்பன் கே.ஆர்.விக்னேஷ் கருத்துப் பகிர்வை நிறைவு செய்த பிறகு, “ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?”, என்று கேட்டதுதான் தாமதம், கேள்விக்கணைகள் முழுவீச்சில் பறந்தன. புத்தகத் திறனறிதல் நிறைவு பெரும்வரை வரிசையாக அமர்ந்திருந்த மாணவ மாணவிகள், நிறைவு பெற்ற அடுத்த நொடி வட்டமாக அமர்ந்துகொண்டு விவாதிக்க ஆரம்பித்தனர். மிக...

சாரல் கூத்துப் பட்டறை

Image
          SSN கல்லூரியில் சேர்ந்த பிற்பாடான இந்த மூன்று வருடங்களில் நான் சாரல் தமிழ் மன்றத்திற்குச் செய்த முதல் உருப்படியான வேலை கல்லூரித் தமிழன்பர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து நனவாக்கிய நாடக அரங்கேற்றத்தை ஒருங்கிணைத்ததுதான். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் என் சீனியர்கள் கனவு கண்டு மேற்கொண்ட பெருந்தவம் இது.           சீனியர்கள் நடிகர்களைத் தேர்வு செய்தபின் நாடகத்திற்கான அதிகாரப்பூர்வ செயல்முறைகளை வகுத்து, அவற்றைப் படிப்படியாக செயல்படுத்தி, பலரின் தூக்கமில்லாத இரவுகளின் துணையோடு நாடகத்திற்குக் கதை வசனம் எழுதி, இயக்கி, நொடிக்கு நொடி அநியாயத்திற்கு விளம்பரங்கள் செய்து, அறிவியல் பூர்வமாக ஆடியோ டீசர் எல்லாம் வெளியிட்டு என் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைத் திணறடித்து, இறுதியாக சாரல் தமிழ் மன்றத்தின் நாடக உட்பிரிவான ‘சாரல் கூத்துப் பட்டறை’யை ’டமால் டுமீல் டமில்’ மற்றும் ‘கலாட்டா சம்பந்தம்’ ஆகிய இரு நாடங்கங்களின் அரங்கேற்றம் மூலம் பலத்த ஆரவாரத்தின் நடுவே விதைத்தபோது, இதை இதோடு விடக்கூடாது என்ற எண்ணமே மிஞ்சியது. இந்த ஒரு மாத ஓய்வற்ற பகல்களும் ...