ஙே... :/
நம் சமூகம் மிக மிக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. பலவற்றை சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் உடனடியாக நிரூபித்துக்கொண்டிருக்கிறது: 1. “என் மதத்துல தீவிரவாதம் வளருதுன்னா சொல்ற? உன்னை சுட்டுக்கொல்லணும்” 2. “என்னையா நாஜின்னு சொல்ற? உன் இனத்தை இங்க ஆள விட்டா இப்படித்தான் பேசுவ” 3. “என்னையா பாசிஸ்டுன்னு சொல்ற? உன் பேச்சை முதல்ல நிறுத்தணும்” 4. “என்னடி திமிரு புடிச்சவன்னு சொல்ற? உன்னை அடக்க எனக்கு எத்தனை நிமிஷம் ஆகும்?” 5. “என்னையா ஆண்டை, அக்கினிக்குஞ்சுன்னு கலாய்க்கிற? அரசியல்ல ஒன்னு திரண்டதும் வாய் நீளுது?” 6. “பார்ப்பனீயத்தையா திட்ற? இதுக்குதான் அவங்கவங்களை வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும்ங்கிறது” 7. “என்னையா கலவரத்தைத் தூண்டுறேன்னு சொல்ற? பத்து பேரைக் கூட்டியாரத்துக்குள்ள மரியாதையா ஓடிரு” 8. “பெண் சுதந்திரமே நாங்க தரலைன்னு சொல்றியே? உன்னையெல்லாம் வெளிய படிக்க அனுப்பினதுக்கு இப்படித்தான் பேசுவியா?” 9. “என்னையா அறிவுஜீவின்னு திட்ற? என் அறிவு இருக்கிற ரேஞ்சுக்கு நான் சொல்றதெல்லாம் உனக்கு முதல்ல புரியவே புரியாது” 10. “என்னையா மதவாதின்னு சொல்ற? இவ்வளவு காலம் அமைதியா இருந்த...