Posts

Showing posts from November, 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4

Image
  முன்தொடர்ச்சி: காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3 முன்குறிப்பு:  லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன். (தொடர்கிறது)           ஆண்டு 1944. அமெரிக்க பிரிட்டன் படைகள் ஃப்ரான்சிலிருந்து கிழக்கு முகமாக ஜெர்மனி நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த சமயம். ரஷ்யப் படைகள் மேற்கு முகமாக ஜெர்மானியர்களைத் துரத்தி பெர்லின் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் மூன்று பெரிய ச

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3

Image
முன்தொடர்ச்சி:   காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2 முன்குறிப்பு:  லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன். (தொடர்கிறது)           பகலிரவு பாராமல் முழுக்க முழுக்க விழாக்கோலம் பூண்டிருக்கும் அமெரிக்கத் தூங்கா நகரமான நியூயார்க்கின் நூறு மாடிக் கட்டிடங்களையும் செல்வத்தையும் சுத்தத்தையும் நுனி நாக்கு ஆங்கிலத்தையும் கண்ட யார்தான் தன்னிலை இழக்காமல் இருப்பார்கள்? ஆனால் விஜயலட்சுமிக்கு இது அனைத்துமே எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. மாளிகைகளைப் போல் வீடுகளைப் பார்த்தபோது வீடற்ற இந்தியர்கள் ந

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2

Image
முன்தொடர்ச்சி:   காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 முன்குறிப்பு:  லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன். (தொடர்கிறது)           விஜயலட்சுமி பிறகு என்ன செய்தார்? பாஸ்போர்ட் கிடைத்ததா? இவற்றையெல்லாம் பார்க்கும் முன்பாக, பிரிட்டன் அரசு விஜயலட்சுமியின் அமெரிக்கப் பயணம் மீது இத்தனை கண்கள் வைத்தது ஏன் என்று பார்ப்பது அவசியம். அத்தனை முக்கியமானவரா விஜயலட்சுமி? அல்லது அவர் நோக்கங்கள் பிரிட்டனின் பிரம்மாண்ட நோக்கங்களில் தலையிடும் அளவிற்கா அத்தனை வீரியம் மிக்கதாக இருந்தன? இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த சமயம் கூட சர்ச்சிலின் கவனம் விஜயலட்சுமியிடம் இருந்தது என்றால் என்ன

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1

Image
          லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கிவிட்டேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளியீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன்.           ஆண்டு 1941, நாஜி படைகள் போலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து என்று ஒவ்வொரு நாடாகக் கபளீகரம் செய்துகொண்டிருந்தன. முசோலினி வடக்கு ஆப்பிரிக்காவையே மிரட்டிக்கொண்டிருக்க, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் நடுப்பகுதி வரை வந்துவிட்டிருந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. அனைத்துப் போர்களையும் முடிக்க வந்த போர் என்றுதானே முதலாம் உலகப்போரை அழைக்கிறார்கள்? அப்பொழுது இதற்குப் பெயர் என்ன? பின்னோக்கி சிந்தித்தார்கள். பிரிட்டனும் ஃப்ரான்சும் முதலாம் உலகப் போரின் முடிவில் அதிகமாக அமெரிக்காவிடம் கடன் வாங்கியிருந்தன. அமெரிக்கா அதைத் திருப்பித் தந்தே ஆகவேண்