Posts

Showing posts from December, 2012
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கல்லணைக் கிளி

Image
          கரிகால் பெருவளத்தான் தான் கட்டிய கல்லணையை நோட்டம் விட்டபடித் தன் யானை மீது அமர்ந்திருந்தார். அவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியில் ‘யானைப் பூங்கா, உள்ளே அனுமதி இல்லை’ என்று போர்டு மாட்டியிருந்தது. அந்த வேலியில் சில மாடுகள் கட்டிப் போடப்பட்டு அதை மேய்த்துக் கொண்டிருந்தவன் கரிகாலருக்கு இணையாக அந்த அதிசயத்தைப் பார்த்துகொண்டிருக்க பூங்காவைச் சுற்றிலும் தார்சாலை போடப்பட்டு ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டிருந்தது. ஆறுவயதில் நான் சிறுவர் மலரில் பார்த்த கார்ட்டூன் கல்லணை இதுவல்ல, இது என்னமோ சென்னை மெரினா பீச் ரேஞ்சுக்கு திருச்சிராப்பள்ளிக் குரல்களில் கலகலத்துக்கொண்டிருந்தது. பாப்கார்ன், கோன் ஐஸ், மீன் வறுவல், சோளம், என்று அச்சு அசல் திருச்சி பீச்தான் !           யானைகளே நிற்க பயப்படும் அணை மதகுகளினூடே வெண்நாரைகளும் கொக்குகளும் ‘வாடி இருக்குமாம்’ படலத்தை நடத்திக்கோண்டிருக்க, அவைகளின் கணுக்கால் அளவிற்கு ஏதோ தண்ணீர் ஓடியது. கர்னாடக ஷெட்டர்வாளின் சூழ்ச்சியைக் கரிகாலர் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். கொக்குகளைப் பிடிக்க என் கேமரா சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. “

Our duties for building an "Equal India"

Image
1. "They should be severely punished" 2. "They should be hanged to death" 3. "Thappu ponnunga melayum irukku, avanga apdi dress panradhaaladhan ipdi nadakkudhu" 4. "They should be beaten to death" 5. "Our Laws should be made more stringent, like there in Dubai" 6. "Avanga akka thangachi-ku ipdi nadandha summa irupaangalaa ?" 7. "Apdiyaa ? Eppo nadandhuchu da, News paakalada naan, ennaachu ?" 8. "Women should carry knives along with them" 9. "I'm ashamed to live in such a country !" 10. "Aambalainga na ? Enna venaalum seyyalaamaa ?" 11. "Does Delhi really deserve to be called as the capital of India ?" These were some of the comments I got from my friends, and I respect all of them. I even saw a post suggesting rapex for women, as women harassment has become very common and is being done very casually here. Where is India really going ? The government, regard

பிறந்தநாள்

Image
                     ஒரு வயசுக்கு மேல் உலகம் நம் பிறந்தநாளைக் கொண்டாட நாம் பாடுபட வேண்டும் என்று எங்கோ படித்துவிட்டேன், அப்போதிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தியாகிவிட்டது. சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய பேர் என் வீட்டிற்கு வந்து, நான் வீட்டில் இல்லாததைப் பார்த்து பல்பு வாங்கியிருக்கிறார்கள் (அடுத்த நாள் அதற்காக எனக்கு செமத்தியான அடி விழும், அது வேறு டிபார்ட்மெண்ட்). “நான் என்ன பெரிய காந்தியா நேருவா ?”, என்று பதில் சொல்லி பல கலவரங்களைக் கேண்டீனில் நிகழ்த்தியிருக்கிறேன். பர்த்டே ட்ரீட் என்று யாராவது வாயைத் திறந்தாலே அங்கிருந்து நைசாக நழுவிவிடுவதைப் பார்த்து பார்த்து, இனி பர்ஸை பிக்பாக்கெட் அடிப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு நண்பர்கள் வட்டம் வந்திருப்பதாக விவரமறிந்தோர் கூறுகின்றனர். வருடா வருடம் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எங்காவது ஓடிவிடுகிறேன் என்று இந்த வருடம் வித்தியாசமாக ஒரு பிளான் போட்டார்கள். என் அம்மாவுக்கு ஃபோனைப் போட்டு, “இன்னிக்கு எப்படியாவது விஷ்ணுவை வீட்டுல கட்டிப்போட்ருங்கம்மா” என்று சொல்லி வன்முறையைக் கையிலெடுத்தார்கள். ஊஹும்ம் ! சிக்குவேனா

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரை விமர்சனம்

Image
          ஒரு படத்தில் குறைந்தபட்சம் ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகள், இரண்டு தொப்புள்காட்சிகள், ஒரு முத்தக்காட்சி, வெளிநாட்டில் நடனம், நட்சத்திர நடிகர்கள், பிரமாண்டமான செட், இதெல்லாம் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒரு திரைப்படமாக அங்கீகரிப்பார்கள் என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, மக்கள் முட்டாள்கள் அல்ல என்று பல படங்கள் சொல்லத் துவங்கி விட்ட வேளையில், இதோ இன்னொரு படம் அதை இன்னொரு முறை படத்தில் பாடல் கூட இல்லாமல் பாடியிருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், 2012-இன் இன்ப அதிர்ச்சி. மூனு மணி நேரம், மூச்சுத் தெணரத் தெணர சிரிக்க வைத்திருக்கிறார்கள் !           நாயகன் விஜய் சேதுபதி இந்த முறையும் கிளாஸ் பெர்ஃபார்மன்ஸைக் கொட்டியிருக்கிறார். இவர்களெல்லாம் புதுமுகங்களா என்று ஆச்சரியப்படுமளவிற்கு அமைந்திருகின்றன ஹீரோவின் நண்பர்களாக நடிக்கும் மூவரின் நடிப்பு. ஆம், கொஞ்சம் கூட கேப்பே இல்லாமல் சிரிக்க வைக்கும் புதுமுகங்களின் முகபாவங்கள் அடடே சொல்ல வைக்கின்றன. ரிஸ்க் எடுத்து குளோசப் ஷாட்கள் பல வைத்து அவர்களின் திறமையை முழுவதுமாக உபயோகித்த இயக்குனர் பாலாஜி தரணீதரனின் முது

கொசுக்கடி, எத்தனையோ அனுபவி !

Image
Courtesy: jokesprank.com “If you think you are too small to make a difference, try sleeping with a mosquito.” - Dalai Lama XIV           ஒரு ஆப்பிரிக்கப் பழமொழியை வழிமொழிந்து தலாய் லாமா கூறிய கருத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். டார்வினின் 'Survival of the fittest' கொள்கைப்படி தற்போது கிட்டத்தட்ட பூமியின் சகல இடங்களிலும் கோலோச்சுவது மனிதன்தான். மனிதனுக்கு முந்தைய காலகட்டங்களில் ஆதிக்க உயிரினங்கள் தங்களின் தேவைக்கேற்பதான் மற்ற உயிர்களை வதம் செய்தன. அதாவது உணவுச் சங்கிலி அறுபடாமல் ஆதிக்கம் செய்தல் என்பது ஒரு மூர்க்கமான உயிரியல் நியதியாகவே இருந்து வந்தது. ஆனால் மனிதனின் காலகட்டத்தில் மற்ற உயிர்களை அழித்தல் என்பது உணவுச் சங்கிலிக்கு அப்பாற்பட்டு ஒரு கட்டுக்குள் அடங்காமல் போக ஆரம்பித்தது. Necessity என்பதற்கும் Luxury என்பதற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய கோடு பல உயிரினங்களின் பாதுகாப்பின் மேல் கீரல் விழச்செய்தது. மனிதனுக்கு ஆறறிவு வந்த பிறகு அவன் அழிக்க ஆரம்பிக்காத விலங்கினங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு இயற்கையைச் சுரண்டியிருக்கிறான் மனிதன். கடைசியாக டோட