Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹீலம்

நாக்கு சுரசுரப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இயற்கை மருத்துவத்தின் மூலம் வெறும் மூன்றே மூலிகைகளை வைத்து சரிசெய்துவிடலாம்.

முதலில் இரண்டு வில்வக் காம்புகள் தேவைப்படும். கடைக்கு சென்று தந்தநேரிக் காம்பு என்றோ தந்தநேரி வில்வக்கட்டை என்றோ கேட்கவும். கொடுப்பார்கள். அந்த வில்வக்காம்பின் நுனியில் இரண்டு தேக்கரண்டி புலிநெய்யைத் தடவ வேண்டும். வெள்ளைப்புலி நெய்யாக இருந்தால் கூடுதல் சிறப்பு. முடிந்தவரை தடவுவதற்கு அலுமினியக் கரண்டிகளைத் தவிர்த்து இளநீர் சுரட்டையை உபயோகித்தால் அதில் இருக்கும் கரிவிந்துவானது வெள்ளைப்புலி நெய்யோடு சேர்ந்து முறத்றால் புரோட்டீனை உருவாக்கும். அந்த முறத்றால் புரோட்டீன் வில்வக்காம்பின் நுனியில் படுகையில் முறோடைட் டையாக்சைடு என்றொரு துர்நாற்ற வாயு வெளிப்படும். அந்த நாற்றத்தைப் பார்க்காமல் கசப்பு மருத்தென நினைத்து நுகருங்கள், இதிலேயே பாதி சுரசுரப்பு போய்விடும்.

இப்பொழுது அந்தக் கரிவிந்து தடவப்பட்ட புலிநெய் வில்வக்கட்டை இருக்கிறதல்லவா? அதை சுருக்கமாக விந்துக்கட்டை என்று அழைப்பார்கள். அந்த விந்துக்கட்டையை ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளவும்.

நாட்டுமருந்துக்கடைக்குச் சென்று சதுர்வாசனம் என்று கேட்கவும். ஐந்து ரூபாய்க்கு ஒரு வில்லையை கொடுப்பார்கள். அதென்ன சதுர்வாசனம்? ஆவனி மாதம் வெட்டுக்கிளிகளின் வாயுக்காலம். ஆவனி முடிந்து புரட்டாசி துவங்குகையில் வெட்டுக்கிளியின் தெற்குத்துவாரத்திலிருந்து இந்த லாகிரி வஸ்து வெளிப்படும். இந்த சதுர்வாசனத்தை வேதியியலில் Chiral compound என்பார்கள். இந்த சதுர்வாசனத்தை முளரிப்பூ பன்னீரில் கலக்கி இரண்டு மணி நேரம் வெயிலில் காய வைக்கவும். தண்ணீர் ஆவியாகி ஒரு பேஸ்ட் மட்டும் மிஞ்சியிருக்கும். தற்பொழுது அந்த விந்துக்கட்டையை சூரிய வெளிச்சம் படுமாறு 35 டிகிரி சாய்த்து முளரிப்பன்னீரில் நனைத்து சதுர்வாசனத்தில் குழைக்கவும். அப்பொழுது ஸ்ஸ்ஸ் என்றொரு சப்தம் எழுந்தால் அது நூறு சதவீதம் சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இல்லை என்றாலும் பரவாயில்லை.

தற்பொழுது அந்த சதுர்வாசனம் அப்பிய விந்துக்கட்டையின் நுனியை உங்கள் நாக்கின் நுனியில் வைக்கவும். இவ்வளவுதான் வைத்தியம். அறுசுவைக்கு அப்பாற்பட்ட ஒரு சுவையை உணர்வீர்கள். அந்த உணர்வெழுச்சியில் கட்டுண்டே நாக்கின் சுரசுரப்பு வெறும் எட்டு வினாடிகளுக்குள் நீங்கிவிடும். மேலும் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு வாழ்க்கையில் இனி அறுசுவையில் உள்ள எதையுமே சாப்பிடத் தோன்றாது. இதனால் உடல் எடையும் குறையும்.

இப்பொழுது உங்கள் கையில் இருக்கும் அந்த இரண்டாவது காம்பை வீட்டு வாசலில் கிழக்கு பார்த்து போடவும். அவ்வாறு செய்தால் அறுசுவை உணவுப் பண்டங்களோடு எந்த விருந்தினரும் வீட்டிற்கு வரமாட்டார்கள். அன்புத்தொல்லைகள் இருக்காது. ஆனந்தமான வாழ்க்கை கிட்டும். மூன்றே மூலிகைகளில் சந்தோஷம், லௌகீக விழிப்பு, சித்த சுத்தம், சர்வ மோட்சம், அரகரோகம், அந்தகூபம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி